Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் கொரியாவுன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி-ஏவுகணைகளை நிறுத்தும் வட கொரியா

Featured Replies

வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது வட கொரியா.

தென் கொரிய தீவு மீத வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியி்ல் இறங்கியுள்ளன.

இதையடுத்து மஞ்சள் கடல் பகுதியில் தனது நிலம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளது வட கொரியா.

இந்த நிலையில் பிரச்சினையைத் தணித்து அமைதியை நிலை நாட்ட முயற்சிக்கப் போவதாக சீனா கூறியுள்ளது.

இதுதொடர்பாகதென் கொரிய அதிபர் லீ மியூங் பாக்கை சீனக் குழு சந்தித்துப் பேசியது.

கொரிய பிரச்சினையில் இதுவரை சீனா நேரடியாக தலையிட்டதில்லை. அதேசமயம், வட கொரியாவின் அத்துமீறல்களை அது கண்டித்ததும் இல்லை. ரஷ்யாவைப் போல வட கொரியாவின் பக்கமே சீனாவும் நிற்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதை சீனா எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் தற்போதையநெருக்கடியான நிலையில், வட கொரியாவுக்கு சீனா அறிவுரை கூறி அடக்கி வைக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் இறங்கியுள்ளதால் போர் மூளும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2010/11/28/south-north-korea-usa-china-missiles.html

  • கருத்துக்கள உறவுகள்

கொரியக் குடாவில் பதற்றநிலை

.கடந்த வாரம் வட கொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே மூண்ட பீரங்கிச்சமர் 1953 கொரியப் போர் நிறுத்தத்துக்குப் பிறகு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்த மிகவும் பாரதூரமான சம்பவங்களில் ஒன்றாகும். இந்தத் தாக்குதல்களுக்கான உடனடிப் பின்னணியாக அமைந்தது தென்கொரியாவின் வருடாந்த இராணுவப் பயிற்சிகளேயாகும். தென்கொரியாவில் நிலை கொண்டிருக்கும் சுமார் 28 ஆயிரம் அமெரிக்கத் துருப்புகளில் சில பிரிவுகளும் பங்கேற்கும் இந்தப் பயற்சிகளை ஆபத்தான போர் ஒத்திகைகள் என்று வர்ணித்திருக்கும் வட கொரியா கடற்படைப்பிரிவுகளும் இதில் பயன்படுத்தப்படுவது ஆத்திரமூட்டுவதாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.

இரு கொரியாக்களுக்கும் இடையேயான கடல் எல்லையாக அமைந்திருக்கும் மஞ்சள் கடலில் உள்ள வடக்கு கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அண்மையாகக் கடற்படைப் பயிற்சிகளை நிறுத்துமாறு வட கொரியா செய்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தென்கொரியா பயிற்சிகளை ஆரம்பித்து சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் பீரங்கிகளைப் பயன்படுத்திய போது வடகொரியப் படைகள் மேற்படி கோட்டுக்கு தெற்கே அமைந்திருக்கும் ஜியோன்பியோங் தீவு மீது பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டது. இரு தென்கொரியக் கடற்படை வீரர்களும் இரு குடிமக்களும் பலியானதுடன் 18 பேர் காயமடைந்தனர்.

வடகொரியாவின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டனம் செய்த அமெரிக்கா கம்யூனிஸ்ட் நாடு 1953 போர் நிறுத்த உடன்படிக்கையை மீறுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. பதற்றநிலை தீவிரமடையக் கூடியதாக நடந்து கொள்ளக்கூடாது என்று ரஷ்யா வலியுறுத்திக் கேட்டது. பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கு உதவக்கூடிய நடவடிக்கைகளில் இரு கொரியாக்களும் கூடுதலான அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியிருக்கிறது. பொறுமை காக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நெருக்கடியை உருவாக்கியதில் இருநாடுகளுக்குமே பொறுப்பிருக்கிறது என்பதே வெளிப்படையானதாகும். பதற்ற நிலை மேலும் தீவிரமடையக்கூடிய சூழ்நிலை உருவானால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இரு கொரியாக்களுமே உணர்ந்திருக்கின்றபோதிலும், தெற்கின் நடவடிக்கைகள் குறித்தும் தன்னால் எதிர்நோக்கப்படுகின்ற சர்வதேசத் தனிமைப்படுத்தல் குறித்தும் வடகொரியா பெரும் விரக்தியடைந்திருக்கிறது. வாஷிங்டனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதையே வடகொரியா விரும்புகிறது. ஆனால், கொரியக் குடா முற்றுமுழுதாக அணுவாயுத சூன்யப் பிராந்தியமாக இருக்க வேண்டுமென்பதே 6 நாடுகள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனையாக ஒபாமா நிருவாகத்தின் முன்னிபந்தனையாக இருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த இருவருடங்களாக நடைபெறவில்லை. எவ்வாறெனினும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் விதிக்கப்பட்டிருக்கும் தடைகளோ அல்லது மேற்குலகின் புலனாய்வு நடவடிக்கைகளோ கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களின் அணுவாயுத நாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதில் தோல்வியையே கண்டிருக்கின்றன. அண்மையில் வடகொரியா யூரேனியம் செறிவூட்டல் ஆலையை வெளிநாட்டு உதிரிப்பாகங்களையும் பயன்படுத்தி நிர்மாணித்திருக்கிறது.

தென்கொரிய ஜனாதிபதி லீ மியுங்பாக் பதவிக்கு வந்தது முதல் வடகொரியாவுடன் ஒரு மோதல் நிலைப்பாட்டையே கடைப்பிடித்துவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் வடகொரியாவை உலகில் இருக்கின்ற தீங்குகளின் கூட்டுச் சக்திகளின் ஒரு அங்கமென்று வர்ணித்ததனால் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருந்த மனச் சங்கடத்தையும் விசனத்தையும் அமெரிக்காவோ அல்லது தென்கொரியாவோ புரிந்துகொள்ளவில்லை. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வடகொரியாவை "பாரதூரமான அச்சுறுத்தல்' என்று வர்ணித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பிராந்தியத்தில் சக்திமிக்க நாடாக விளங்கும் சீனா வடகொரியாவுக்குப் பெருமளவு பொருளாதார உதவிகளைச் செய்வதுடன் வடகொரியாவைக் கண்டனம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையுமே வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்கக்கூடிய வல்லமையுடன் இருப்பதால், கொரியப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சமாதான உடன்படிக்கையைத் தவிர, வேறு எந்த மார்க்கமுமேயில்லை. வடகொரியாவின் எல்லைகளை உலகநாடுகள் அங்கீகரிப்பதும் கொரியக்குடாவின் பதற்றநிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெருமளவுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. மாறிமாறி எச்சரிக்கைகளை விடுப்பதை நிறுத்தி இரு கொரியாக்களும் நியாயபூர்வமாகவும் விவேகத்துடனும் நடந்துகொள்வது அவசியமானதாகும்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2172:2010-11-28-01-28-22&catid=71:editorial&Itemid=101

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவுக்கு அப்பப்ப ஆரோடையும் தனகாட்டி கைசொறிய வெளிக்கிட்டுடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.