Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியுடனான சந்திப்பு: 'அரங்கம்' சொன்னதும் சொல்லாதததும்

Featured Replies

கடந்த வாரச் செய்திகளில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு முக்கியமானதாகும். இந்த சந்திப்பு தொடர்பாக சில தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும், பல தகவல்கள் வெளிவரவில்லை. அல்லது பல விடயங்களை வெளிவிட அரங்கம் விரும்பவில்லை. எது எப்படியென்றாலும், ஜனாதிபதியுடனான சந்திப்பு அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிர்ச்சியையே கொடுத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

ஆனால், மழுப்பலாக முதலாவது சந்திப்பு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது என அரங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் சொல்லிச் சமாளித்து தமது அரசியலை நடத்த வேண்டியவர்களாக உள்ளனர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நிலையில்தான் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தை ஜனாதிபதி பேச்சுக்களுக்கு அழைத்தார். அதாவது, 'நீங்கள் சொல்பவர்களுடன் நாம் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை" என இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சமிஞ்ஞையாகவே இது அமைந்திருந்தது.

ஏனெனில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்திப்பதற்கு சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் அரங்கத்தை ஜனாதிபதி சந்தித்தார். தம்முடன் மகிந்தர் பேசுவார் என சம்பந்தன் ஐயாவும் அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் காத்துக்கொண்டிருக்க - அரங்கத்தை ஜனாதிபதி சந்தித்தது ஒரு பலமான அரசியல் சமிஞ்ஞையாகவே கருதப்படுகின்றது.

இந்தச் சந்திப்பில் மகிந்தர் கொடுத்த செய்திகளும் முக்கியமானது. அதனைப் புரிந்துகொண்டால் எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என்பதை எதிர்வு கூறிவிடலாம்.

மூத்த அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி., த.சித்தார்த்தனின் புளொட், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, வரதராஜப் பெருமாளின் ஈ.பி.ஆர்.எல்.எப்., சிவாஜிலிங்கம் தலைமையிலான அணி மற்றும் ரெலோ போன்ற ஒன்பது அமைப்புக்களை உள்ளடக்கியதுதான் இந்த அரங்கம்.

அதாவது தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு பலம்வாய்ந்த ஒரு அமைப்பாக இதனைக் காட்டிக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதில் ஈ.பி.டி.பி.க்கு மட்டும்தான் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மற்றைய கட்சிகளிடம் பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லை என்பது அவற்றின் மக்கள் செல்வாக்கை பறைசாற்றுவதற்குப் போதுமானது.

தம்முடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதிக்கு அரங்கத்தின் சார்பில் இக்கட்சிகள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்துவந்திருந்த போதிலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பிலிருந்தபோதுதான் ஜனாதிபதிக்கு நேரம் கிடைத்தது(!)

ஜனாதிபதியுடனான சந்திப்புக்குச் சென்ற அரங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தவர்களாகவே திரும்பினார்கள் என்பது உண்மை. அந்தளவுக்கு ஜனாதிபதியின் உரை கடுமையாக இருந்துள்ளதாக கலந்துகொண்டவர்கள் கூறுகின்றார்கள். பேச்சுக்களால் கிடைத்த பலன் என்ன என்றால் ஒன்றும் இல்லை.

வடபகுதியில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள் குடியேற்றம் தொடர்பாகவே அரங்கத்தினர் முதலில் பேசத் தொடங்கினார்கள். உடனடியாகவே அவர்களை அடக்கிய ஜனாதிபதி, கொழும்பில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கு சிங்களவர்கள் வருவதையிட்டு மட்டும் ஏன் குறைகூறுகின்றீர்கள் எனப் பதில் கேள்வி எழுப்பி அரங்கத்தினரை வாயடைக்கச் செய்துவிட்டார்.

கொழும்பு மட்டுமன்றி தென் மாகாணமே தமிழ், முஸ்லிம்களால் எந்தளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை புள்ளிவிபரம் போட்டு ஜனாதிபதி விளக்கினார். அரங்கத்தினர் யாரும் வாய் திறக்கவில்லை.... இல்லை திறந்த வாயை மூடவில்லை.

வன்னியில் மீளக்குடியேறும் மக்களுக்கு போதிய உதவிகள் கிடைக்கவில்லை என அரங்கத்தினர் சுட்டிக்காட்டியபோது பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறு உதவிகளை வழங்க அரசிடம் பணம் இல்லை எனக் குறிப்பிட்டார். அத்துடன் கிளிநொச்சியில் மக்களிடம் இல்லாத பணமா எனக் கேள்வி எழுப்பியதுடன், கிளிநொச்சியில் வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் பல கோடி ரூபா வைப்பில் இடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆதனால் அவர்களே தமக்குத் தேவையான வீடுகளை அமைத்துக்கொள்ளட்டும் எனவும் ஜனாதிபதி கடுமையான தொனியில் கூறியபோது அரங்கத்தினரால் வாய் திறக்க முடியவில்லை.

இறுதியாக - இடம்பெயர்ந்து இன்னும் முகாம்களில் உள்ள மக்களுடைய மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என அரங்கத்தினர் கேட்டுக்கொண்டனர். அதற்காகவாவது உருப்படியான ஒரு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…

அதற்கும் குறுக்கிட்ட மகிந்தர், அதற்கும் தன்னிடம் ரெடிமேட்டாக இருந்த பதிலை எடுத்துவிட்டார். வவுனியா மெனிக் பாம் முகாமில் தற்போது சுமார் 12,000 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறிய அவர், அவர்களைப் போகச் சொன்னாலும் போக மாட்டார்கள், ஏனெனில் முகாம்களில் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றது. அதனால் அதனைவிட்டு அவர்கள்தான் போகின்றார்கள் இல்லை என அழுத்தமாகப் பதிலளித்த போது திறந்த வாயை மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பதைவிட அரங்கத்தினருக்கு வேறு வழி இருக்கவில்லை!

இதனைவிட முக்கியமாக அரங்கத்தின் சார்பில் மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கக் கொடுக்கப்பட்டது. இதில் 12 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அரங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் அதில் கையொப்பமிட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டபோது டக்ளஸ் தேவானந்தா மெதுவாக நழுவிவிட்டார். ஒரு அமைச்சராகவும் இருந்துகொண்டு ஜனாதிபதியிடம் மகஜரும் கொடுத்தால் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியாததல்ல.

டக்ளஸை விட்டுவிட்டு மற்றவர்கள் கையொப்பமிடுவது பொருத்தமானதாக இருக்காது என்பதால் இறுதியில் யாரும் கையொப்பமிடாமலேயே இந்த மகஜர் கையளிக்கப்பட்டது. கையொப்பம் இட்டுக்கொடுத்திருந்தாலேயே கவனிக்கப்போவதில்லை..இந்த நிலையில் கையொப்பம் கூட இல்லாத மகஜரைப் படித்தா ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கப்போகின்றார்?

இந்தச் சந்திப்பின்போது அரங்கத்தினருக்கு ஜனாதிபதி கொடுத்த பதில் தமிழ் மக்களை அவர் எவ்வாறு நோக்குகின்றார் என்பதைத் தெளிவாகக் காட்டியது. ஜனாதிபதியுடன் பேசி எதனையும் கண்டுவிட முடியாது என்பதை இந்தச் சந்திப்பு அரங்கத்தினருக்கு உணர்த்தியிருக்கும். ஆனால், இது ஆரம்பம்தானே எனக் கூறி அவர்கள் தம்மையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை!

http://www.pooraayam.com/news-analysis/1611-2010-12-02-02-51-10

பூராயத்துக்காக

கொழும்பிலிருந்து அபிமாறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.