Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குள் இருந்த புத்தருக்குக் கதகதப்பு தேவைப்பட்டது.

Featured Replies

கடும் குளிர் காலம். ராத்திரி நேரம். அந்த ஆசிரமத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தார் ஒரு துறவி.

‘இந்த நேரத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்களே’ என்று யோசித்தார் அவர். ‘நான் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இங்கேயே படுத்துத் தூங்கிவிடுவதுதான் நல்லது.’

ஆனால் அவரிடம் போர்வையோ, கம்பளியோ எதுவும் இல்லை. இருக்கிற ஒற்றை ஆடையை முடிந்தவரை நீட்டிச் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்க முயன்றார்.

சிறிது நேரத்தில் குளிர் மிகவும் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கதகதப்புக்காக ஏங்கினார் அந்தத் துறவி. ‘எங்கேயாவது கொஞ்சம் மரக்கட்டைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். பற்றவைத்துக் குளிர் காயலாம்.’

தேடியபோது ஆசிரமத்துக்கு வெளியே சில புத்தர் சிலைகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் போட்டு அங்கிருந்த ஒரு தீபத்தில் பற்றவைத்தார். குளிர் காய்ந்தார். அங்கேயே படுத்து உறங்கிவிட்டார்.

அடுத்த நாள் காலை, ஆசிரமத்தைச் சேர்ந்த துறவிகள், மாணவர்கள் தூங்கி எழுந்து வெளியே வந்தார்கள். அங்கே புத்தர் சிலைகள் பாதி எரிந்து கிடந்தன. பக்கத்தில் ஒருவர் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.

பதறிப்போன அவர்கள் அவரைத் தட்டி எழுப்பினார்கள். ‘யாரப்பா நீ? நாஸ்திகனா? புனிதமான புத்தர் சிலையைப்போய் நெருப்பு வெச்சுக் கொளுத்திருக்கியே? நியாயமா?’

துறவி அவர்களை மேலும் கீழும் பார்த்தார். ‘எனக்குள் இருந்த புத்தருக்குக் கதகதப்பு தேவைப்பட்டது. அதனால்தான் மர புத்தரை எரித்து அவரைக் குளிர் காயவைத்தேன்’ என்றார்.

.

திருகோணமலை கோணேசர் கோவிலின் முன்பாகவுள்ளது பிள்ளையார் கோவில். (ஒல்லாந்தர் கோட்டையின் வெளிப்புறமாக) சிங்களக் காடையர்கள் பிள்ளையார் சிலையை உடைத்தெடுத்து கடலில் வீசினார்கள்.

அவர்கள் சொன்ன காரணம் "பிள்ளையார் கடலில் குளிக்கச் சென்றுவிட்டார்."

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜென் குரு ஆசிரமத்துக்குள் ஒரே புழுக்கமாக இருப்பதை உணர்ந்தார். உடனே ஆசிரமத்தை விட்டு வெளியில் வந்தால் திண்ணையில் நல்ல காற்றும், மலர்களின் மனமும் உடலுக்கு இதமாக இருந்தது. உடனே உள்ளே ஓடிய குருவானவர் அங்கிருந்த புத்தாவின் சிலையை தூக்கிக்கொண்டு "வாரும் புத்தரே நீரும் எம்முடன் வந்து திண்ணையில் இரும், இங்கு நன்றாக காற்று வருகிறது என்றார்!

ஆம் இதுதான் ஒப்பற்ற ஜென் குருமாரின் வாழ்க்கை. ஒவ்வொரு நொடியும் தத் தமது எண்ணங்கள், செயல்களில் விழிப்புடன் இருப்பது.

இவருக்கு இந் நேரம் புத்தர் சிலையாக மரமாகத் தெரியவில்லை, புத்தராகவே அவரை வெளியில் அழைத்து வந்தார்.

இரவு குளிர் வாட்டிய பொழுது அவருக்கு எரிப்பதற்கு மர விறகுதான் தேவைப் பட்டதேயன்றி மரத்தாலான புத்த உருவங்களல்ல.

மிகவும் எளிமையாய் வாழ்பவர்களிடம்தான் உயர்ந்த எண்ணங்களும் வாழும்!! :D:D

இணைப்புக்கு நன்றி அகூதா!! :lol::lol:

  • தொடங்கியவர்

கடந்த சில நாட்களாக கனடாவில் அதன் மத்திய வங்கி ஆணையாளர் சொல்வது இது:

" மலிவான வட்டி வீதம் இருப்பதால், பலரும் அதிகளவு பணத்தை கடனாக பெற்று, வட்டி வீதங்கள் கூடும் போது மிகவும் ஒரு கடின நிலைக்கு தள்ளப்பட உள்ளார்கள்".

ஆம், எளிமையான ௦ விரலுக்கு ஏற்ற வாழ்க்கை வேண்டும். அதுவே சிறப்பானது, நிம்மதியானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.