Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் பகுதியில் அதிகரிக்கும் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் பயப்பீதியில் உறையும் மக்கள்

Featured Replies

யாழ். மாவட்ட வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னா கம் பொலிஸ் பிரிவுகளில் துப் பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் குற்றச் சம்பவங்கள் இடம் பெறுகின்றமையால் இப் பகுதி மக்கள் இரவில் நிம்மதியா கத் தூங்க முடியாமலும், பகலில் பெண்கள் தயக்கமின்றி நட மாடமுடியாமலும் திண்டாடு கின்றனர்.

இரு மாதங்களுக்குள் ஏழு இடங்களில் இடம்பெற்ற வழிப் பறி கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த மாதம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள உடு வில் தெற்கு, மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற வீட்டிற்குள் இரவு நேரம் புகுந்த கொள்ளையர் கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களைக் காட்டிப் பய முறுத்தி பதிவுத் திருமணம் செய்த இளம் பெண் உட்பட அங்கிருந்த ஏனைய பெண் களும் அணித்திருந்த சுமார் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றி ருந்தனர்.

அன்றைய தினம் மானிப் பாய், ஆனந்தன் வீதியிலுள்ள வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் கைத் துப்பாக் கியைக் காட்டிப் பயமுறுத்தி ஆறு பவுண் எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித் துச் சென்றுள்ளனர்.

இதே போல் சங்குவேலியி லுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்தி ஆசிரிய ரும் அவரின் தாயாரும் அணிந் திருந்த 10 பவுண் தங்க நகை களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.

பட்டப்பகலில் சண்டிலிப் பாய்ப் பகுதியில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய கொள்ளையர், அப்பகுதி இளைஞர்களினால் துரத்திப் பிடிக்கப்பட்டுப் பொலிஸாரி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சுதுமலையி லுள்ள மாப்பியன் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துச் சென்றுள் ளனர்.

கடந்த வாரம் சங்கானையி லுள்ள அந்தணர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற கொள்ளை யர் அங்கிருந்தவர்களைத் துப் பாக்கியால் சுட்டுவிட்டு மோட் டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் சங்கானைப் பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்ற கொள்ளை யர், அங்கிருந்தவர்களைத் துப் பாக்கிமுனையில் பயமுறுத் திப் 15 பவுண் தங்க நகைக ளைக் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர்.

இவ்வாறு வலிகாமம் பகுதி யில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களால் மக்கள் நிம் மதி இழந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரி விக்கப்படுகின்றது.

http://www.uthayan.innovay.net/pages/news_full.php?nid=3340

யாழ்.நகரில் கடை உடைத்துத் திருட்டு

யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப் பட்டு அங்கிருந்த பொருள்கள் சில திருடப்பட்டுள்ளன.

கே.கே.எஸ்.வீதியில் வண்ணைச் சிவன் கோயிலுக்கு முன்பாக வுள்ள வர்த்தக நிலையமே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திருடர்களின் கைவரிசைக்கு இலக்கானது.

வர்த்தக நிலைய முன்கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் அங்கிருந்த சில பெறுமதி மிக்க பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://www.uthayan.innovay.net/pages/news_full.php?nid=3341

சங்கானையில் தொடரும் துப்பாக்கிமுனை கொள்ளையர்களால் பதற்றத்தில் மக்கள்! நேற்று முன்தினமும் 15 பவுண் நகைகள் சூறை!!

சங்கானைப் பகுதியில் துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியுடனேயே இரவுப்பொழுதைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு சங்கானை, பிரதான வீதி யில் 7 ஆம் கட்டைப் பகுதியில் செல்லத்துரை திருஞானம் என்ப வரது வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் 15 பவுணுக்கும் மேற்பட்ட நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

அன்றைய தினம் இரவு குறித்த வீட்டில் கணவன், மனைவி ஆகிய இருவர் மட்டுமே தங்கியிருந்தனர். நள்ளிரவு நெருங்கும் சமயத் தில் இரவு 11.15 மணியளவில் துப்பாக்கிகளோடு அங்கு வந்த நால்வர் வீட்டின் கதவைப் பலமாகத் தட்டி, வீட்டில் உள்ளோரை எழுப்பியுள்ளனர். எனினும் நிலைமையில் விபரீதத்தை உணர்ந்த வீட்டார் கதவைத் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமுற்ற கொள்ளையர்கள் முன்பக்கமாகவுள்ள நான்கு ஜன்னல்களையும் உடைத்து, அதனூடாகத் துப்பாக்கிகளை நீட்டி, ""கிட்டடியில ஐயருக்கு நடந்தது தெரியும் தானே?' என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன வீட்டார் தம்மிடமுள்ள தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுணுக்கும் அதிகமான நகைகளைக் கொள்ளையரிடம் ஜன்னல் ஊடாகக் கொடுத்தனர்.

கொள்ளையர்கள் அங்கிருந்து அகன்றவுடன் மானிப்பாய் பொலிஸாருக்கு கொள்ளைச் சம்பவம் பற்றி தொலைபேசி ஊடாக அறிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அண்மையில் சங்கானைப் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அந்தணர் ஒருவர் கொல்லப்பட்டு சில நாள்கள் செல்வதற்கு இடையில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கி முனைக் கொள்ளையால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

http://www.uthayan.innovay.net/pages/news_full.php?nid=3339

ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க சவாரி மாட்டைத் திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டிய வி­மிகள்

சவாரி மாடு திருடப்பட்டு புத்தூரில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தோட்டக் காணியில் இறைச்சி அப் புறப்படுத்தப்பட்ட நிலையில் தலை உட்பட எலும்புக்கூடு எச்சங்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. மாட்டின் உரிமை யாளர் கண்ணீர் விட்டு, மாட்டின் பெரு மைகளைக் கூறி அழுதது அனைவரை யும் கவலை கொள்ளச் செய்தது.

சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சவாரி மாட்டைக் கடந்த திங்கள் இரவு திருடி கடத்தி வந்த திருடர்கள் புத்தூர் சிறுப்பிட்டி முடக் கில் உள்ள தோட்ட வெளியில் (பிரதான வீதிக்கு கிழக்குப் புறத்தில்) மாட்டைக் கொன்று இறைச்சியை அப்புறப்படுத் திவிட்டு, மாட்டின் தலை, தோல், எலும் புக் கழிவுகளை வீசிவிட்டுச் சென்று விட்டனர்.

காலையில் சவாரி மாட்டைக் காண வில்லை எனத் தேடிய மாட்டின் உரிமை யாளர் தோட்டவெளியில் மாட்டின் எச்சங்கள் வீசப்பட்டதை அறிந்து அதிர்ச் சியடைந்தார்.

யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற மாட்டுச் சவாரிப் போட்டியில் பல வெற்றிகளைப் பெற்ற மாட்டின் உரிமை யாளர், மாட்டின் பெருமையைக் கூறி கண்ணீர் விட்டு அழுது புலம்பியதைப் பார்த்தவர்கள் கவலையுடன் அனுதாபம் தெரிவித்தனர்.

பலமான சவாரிக் காளை மாட்டைக் கொல்வதற்கு பலர் ஒரே நேரத்தில் முயற்சித்திருப்பதும்; மாடு இடறி அடித்த அடையாளங்களும் பெரிய கல்லால் மாட்டின் தலையில் அடித்த அடையா ளங்களையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இச் சம்

பவம் குறித்து அச்சு வேலிப் பொலிஸில் முறைப்பாடு செய் யபட்டுள்ளது.

http://www.uthayan.innovay.net/pages/news_full.php?nid=3334

  • தொடங்கியவர்

,,, இது இன்றைய உதயன் பேப்பரில் வந்த செய்திகளில் இருந்து!!! ... வடக்கின் வசந்தமோ??????????

அங்கு யாழில் பரவலாக நடைபெறும் களவுகள், கொள்ளைகள், போன்ற அனைத்து சமூக விரோத செயல்களும் ஈபிடிபி ஒட்டுக்குழு, சிங்கள பாதுகாப்புப்படைகளின் ஆதரவுடனோ அல்லது அவர்களினாலேயோதான் மேற்கொள்ளப்படுவதாக, யாழ் மக்கள் பகிரங்கமாகவே கூறுகிறார்கள்!

epdpgpg.gif

படத்தில் இருப்பவர் ஈபிடிபி ஆயுதக்குழுவின் யாழ் அமைப்பாளர். கடந்த காலங்களில் யாழில் நடைபெற்ற பல கொலை, கொள்ளைகளில் நேரடியாக தொடர்புடையவராம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள உடுவில் தெற்கு, மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற வீட்டிற்குள் இரவு நேரம் புகுந்த கொள்ளையர் கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களைக் காட்டிப் பய முறுத்தி பதிவுத் திருமணம் செய்த இளம் பெண் உட்பட அங்கிருந்த ஏனைய பெண் களும் அணித்திருந்த சுமார் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றி ருந்தனர்.

மானிப்பாய், ஆனந்தன் வீதியிலுள்ள வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் கைத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஆறு பவுண் எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித் துச் சென்றுள்ளனர்.

சங்குவேலியி லுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்தி ஆசிரிய ரும் அவரின் தாயாரும் அணிந் திருந்த 10 பவுண் தங்க நகை களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.

சுதுமலையிலுள்ள மாப்பியன் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துச் சென்றுள் ளனர்.

சங்கானைப் பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்ற கொள்ளையர், அங்கிருந்தவர்களைத் துப் பாக்கிமுனையில் பயமுறுத்திப் 15 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர்.

சங்கானையில் தொடரும் துப்பாக்கிமுனை கொள்ளையர்களால் பதற்றத்தில் மக்கள்! நேற்று முன்தினமும் 15 பவுண் நகைகள் சூறை!!

ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க சவாரி மாட்டைத் திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டிய வி­மிகள்

இலங்கைவாழ் தமிழ்மக்களெல்லாம் வழமைக்கு திரும்பீட்டினம் எண்டு சொல்ல.... வெளிநாட்டிலை இருக்கிற படிக்காதபட்டிக்காடுகள் ஒண்டும் நம்புதுகளே இல்லை.உதுகளை என்ன செய்யுறது????

இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் ... கிட்டத்தட்ட1980க்கு முந்தி உதுதான் அங்கை நோமல்! இடையிலை உவங்கள் வந்தெல்லே எல்லாத்தையும் குழப்பினவங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

,,, இது இன்றைய உதயன் பேப்பரில் வந்த செய்திகளில் இருந்து!!! ... வடக்கின் வசந்தமோ??????????

அங்கு யாழில் பரவலாக நடைபெறும் களவுகள், கொள்ளைகள், போன்ற அனைத்து சமூக விரோத செயல்களும் ஈபிடிபி ஒட்டுக்குழு, சிங்கள பாதுகாப்புப்படைகளின் ஆதரவுடனோ அல்லது அவர்களினாலேயோதான் மேற்கொள்ளப்படுவதாக, யாழ் மக்கள் பகிரங்கமாகவே கூறுகிறார்கள்!

epdpgpg.gif

படத்தில் இருப்பவர் ஈபிடிபி ஆயுதக்குழுவின் யாழ் அமைப்பாளர். கடந்த காலங்களில் யாழில் நடைபெற்ற பல கொலை, கொள்ளைகளில் நேரடியாக தொடர்புடையவராம்!!

உண்மை இப்படி இருக்க அவையள் சொல்கிறார்கள் புலியில் இருந்து சரணடைந்து பின்னர் ஆமியால் விடுபட்டவர்கள் தான் இப்படி களவுகளில் ஈடுபடுகிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவாழ் தமிழ்மக்களெல்லாம் வழமைக்கு திரும்பீட்டினம் எண்டு சொல்ல.... வெளிநாட்டிலை இருக்கிற படிக்காதபட்டிக்காடுகள் ஒண்டும் நம்புதுகளே இல்லை.உதுகளை என்ன செய்யுறது????

இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் ... கிட்டத்தட்ட1980க்கு முந்தி உதுதான் அங்கை நோமல்! இடையிலை உவங்கள் வந்தெல்லே எல்லாத்தையும் குழப்பினவங்கள். :D

தமிழரின் பரவணிக் குணத்தை மாத்தேலாதுதானே. அது தெரியாமல் எல்லாம் மாறீட்டுது எண்டு விசர்க்கதை கதைக்கிறாங்கள் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.