Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துரோகி ப(ட்)டத்திற்கு சீமான், சிம்பு தெரிவு!

Featured Replies

துரோகி ப(ட்)டத்திற்கு சீமான், சிம்பு தெரிவு!

ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர தாகம் அகில உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இலங்கையில் யுத்தகாலங்களில் ஏற்பட்டிருந்த மாறுபட்ட அபிப்பிராயங்களும், கருத்துக்களும் தற்பொழுது மாறுதலடைந்து வருகிறது. இதனிடையே சில சக்திகள் ஊடுருவி மக்களின் தாகத்தை வேறு திசைக்கு திருப்ப முயற்சிப்பதும் தெளிவாகிறது. ஒரு நாட்டுப்பழமொழி நினைவுக்கு வருகிறது. 'கூத்தாடிக் கூத்தாடி கூட்டத்தைக் கலைக்கும் அண்ணாவிபோல' உள்ளுக்குள் நின்று நஞ்சை விதைப்பவர்கள் அதிகரித்துக்கொண்டு வருபவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் தேசவிடுதலையை தளமாகக் கொண்டு உடல் வருத்தப்படாமல் 'பிறர் உழைப்பில்' சுகம் கண்டகார்கள் ஏராளம். இப்பொழுது இலங்கையில் யுத்தமென்ற சந்தை மூடுப்பட்டதன் முன்னர் இந்த உழைப்பு பின்னடைவைக் கண்டிருந்தாலும், அந்த சுகமான உழைப்பு பற்றி சிந்திக்காமலும் இருக்க முடியாது. அதற்கான வழிகளில் இந்த சிம்பு, சீமான் போன்றவர்களை வரவழைப்பதும், இதைப் பொறுக்காத இதேபோன்ற ஏனைய சக்திகளும் அதற்கு மாறாக நிகழ்ச்சிகள் நடாத்துவதும் கலாசாரமாகிவிட்டது. இவைகளை வெளிக்கொண்டுவருபவர்களை துரோகிகளாகவும், எட்டப்பர்களாகவும் சோடிக்கப்படுவர்கள். ஏன்? தேசியத்தலைவர் பிரபாகரனே நேரில் வந்து மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், அதைக்கூட அரசாங்கத்தின் சதியில் வீழ்ந்துவிட்டாரென துரோகிப்பட்டம் கட்டுவதற்கு வெகுநேரம் போகாது. இது இப்படியிருக்க, அழைப்புக்கு வராமல் விட்ட சீமானும் சிம்புவும் கூட எட்டப்பனாக சோடிக்கப்பட்டால் அது ஒரு புதினமாக இருக்காது. இனியும் புலம்பெயர் மக்கள் மத்தியில் 'இந்த புளித்துப்போன துரோகிப்பட்டம் என்ற பருப்பு வேகாது' என்பதும் மக்கள் தேசியத்தின் பால் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதும் சம்பத்தப்பட்டவர்களுக்கு புலனாகியிருக்கும்.

2010 ம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கவிஞர் தாமரை தம்பதியினர் சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது அவர்களை இலங்கை அரசாங்கம் கொலை செய்ய முயற்சி செய்ததும் இதனால் சுவிஸ் அரசாங்கத்திற்கும் ஈழத்தமிழர்களும் ஒரு நெருக்கடியை உருவாக்க முயன்றதையும் நினைவு படுத்துவோம். இதனால், ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் இந்தியத் தமிழ் உணர்வாளர் எவரும் எதிர்காலத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாக மூச்சு விடக்கூடாதென குரல்வளையை நசுக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திலும், தேவையற்ற விதத்தில் இலங்கை அரசாங்கம் கபடத்தனமாக ஈழத்தமிழர்களை பகடைக்காயாக்கி வழங்கும் துரோகிப்பட்டத்திலும் அப்பாவி ஈழத்தமிழர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு சீமானையும் சிம்புவையும் பலிக்கடா ஆக்குவதற்கு ஈழத்தமிழர்கள் ஒரு துளியேனும், அறியாமல் கூட உடந்தையாக இருந்து விடக்கூடாது. இந்தப் பழி பெரும் அழிவை ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி விடும். இதையே சிங்களம் எதிர்பார்க்கின்றது. சிங்களத்திற்கு வெற்றி வாய்ப்பைக் கொடுப்பவர்கள் ஈழத்தமிழர்களாகவே இருந்தால் யுகங்கள் தோறும் ஒரு வரலாற்றுப்பழியாக இருக்கும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சீமானைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கான விடிவையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளையும் திடமாக ஏற்றுக்கொண்டவர் ஆவார். இதுவரைக்கும் சீமானைப்பற்றி, வழமையான இந்திய அரசியல் வாதிகளின் விலைபோகின்றதன்மையிலிருந்து வேறுபட்டு நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஈழத்தமிழர்களின் நல்ல காலத்தைப் பொறுத்து காலங்கள் சீமானை மாற்றாமல் இருக்க வேண்டுமென நம்புவோமாக.

இந்திய தமிழக தேர்தலைப் பொறுத்தவரையில் சீமானுக்காக அரசியல் எதிர்காலம் சிறப்பாக அமையக் காத்துக் கிடக்கிறது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமைத்துவம் சீமான் கைக்கு வரும்பொழுது ஈழத்தமிழர்களின் நிலையிலும் பெரும் மாற்றமேற்பட வாய்ப்புண்டு. இதற்கு அனைத்து ஈழத்தமிழ்மக்களும் ஆதரவாக இருக்காவிடினும் உபத்திரவம் கொடுக்காது இருப்பவர்களாக இருக்கவேண்டும். சீமானை ஒரு தர்ம சங்கடத்துக்குள் ஆக்குவதால் அவரின் தமிழகத்து எதிரணிக்கு(கருணாநிதி-ஜெயலலிதா-காங்கிரஸ்)ம் ஈழத்தமிழர்களின் அராஜக வாதியான மகிந்தா கொம்பனிக்கும் பெரும் வாய்ப்பாகவும் அமையும். இந்த நிலையில் நீண்டகால நோக்கைக் கருத்திற் கொண்டு ஈழத்தமிழர்கள் மிக நிதானமாக காய்களை நகர்த்த வேண்டும். சில்லறைத் தனமான புலம்பெயர் நப்பாசை கொண்ட முதலைகளின் பிடியில் சீமான், சிம்பு உட்பட ஈழத்தமிழர்களின் விடிவை நோக்கிச் சிந்திக்கின்ற எவருமே சிக்கிவிடக்கூடாது.

தூர நோக்கோடு சிந்திக்கும் பொழுது சீமான், சிம்பு வருகை இரத்துச் செய்யப்பட்டது ஈழத்தமிழர்களின் சார்பில் விடிவு நோக்கிய ஒரு வெளிச்சத்தைக் காட்டுகிறது என்று கூறலாம்.

* புலம்பெயர் நாடுகளில் பிரிந்து நின்று கடை விரித்தவர்களுக்கு சீமான், சிம்புவின் வருகை இரத்து ஒரு பாடமாக அமையும். மேலும் இந்தப் பிரிவினையால் காட்டமாகக் கற்றுக்கொண்ட பாடத்திலிருந்து 'பிறர் உழைப்பில் வாழுகின்ற இவர்கள்' திருந்த வேண்டும்.

* சீமான் தனது எதிர்காலத்தை கணக்கிட்டு, அதுவும் புலம்பெயர்நாடுகளில் ஈழ விடுதலையை நோக்கிய அமைப்புகள் ஒரு குடையின் கீழ் வரவேண்டுமென சீமான் நிபந்தனை விதித்ததும் ஈழத்தமிழர் சார்பில் வரவேற்கவேண்டிய கருத்தாகும்.

மிகப்பெரிய புத்திசாலியாகவும் சாதுரியம் மிக்கவராகவும் சீமான் தன் வருகையை இரத்துச் செய்ததிலிருந்து அவரைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக புயம்பெயர்நாட்டுத் தமிழர்கள் இனிவரும் காலத்தில் ஈழத்தில் உள்ளவர்களின் 'பிறர் உழைப்பில் வாழுபவர்களின்' தலைமைத்துவத்தை ஏற்காது இந்தியத் தமிழ்நாட்டில் ஈழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களை(MGR போன்றவர்கள்) தலைமையாக ஏற்றுக்கொள்ளும் காலம் சீமானில் இருந்து ஆரம்பிக்கிறது எனலாம். அதுவும் சீமான், கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தம்மைக் காப்பாற்றிக் கொள்பவராக இருந்தால் மட்டுமே.

நாகலிங்கம் மதியழகன்

mathiyalakan1@hotmail.com

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி ப(ட்)டத்திற்கு சீமான், சிம்பு தெரிவு!

* சீமான் தனது எதிர்காலத்தை கணக்கிட்டு, அதுவும் புலம்பெயர்நாடுகளில் ஈழ விடுதலையை நோக்கிய அமைப்புகள் ஒரு குடையின் கீழ் வரவேண்டுமென சீமான் நிபந்தனை விதித்ததும் ஈழத்தமிழர் சார்பில் வரவேற்கவேண்டிய கருத்தாகும்.

நல்லதொரு எடுத்துக்காட்டான முயற்சி

சீமானுக்கு வாழ்த்துக்கள்

இதைத்தானே எங்கள் கடல் புலி தளபதியும் சொல்லி விட்டு சென்றார்.

http://www.youtube.com/watch?v=mDswgVmn1o8

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஐரோப்பிய பயணத்தை கைவிட்டதற்கும், தமிழர் எங்கும் எப்போதும் ஒரே குடையின்கீழ் செயற்படல்வேண்டுமென உறைக்கக் கூறியதற்கும், ஆயிரம்கோடி நன்றிகள் சீமானுக்கு உரித்தாகட்டும். சீமான் வந்துதான் இங்குள்ள தமிழர்கட்டு உணர்வுவந்து தமிழிழதேசத்தின் விடிவுக்காகப் போராட வேண்டுமென யாராவது நினைத்தால் அதைப்போன்ற முட்டாள்தனம் எதுவுமில்லை (அதாவது தமிழீழ தேசம் விடுதலை அடைய ஓய்வின்றிப்போராட வேண்டியது புலத்துத் தமிழர்களதும் புலம்பெயர்தமிழர்களதும் எக்காலத்திலும் தப்பித்துக்கொள்ள முடியாத கடமை, அதற்காக சீமான் அவர்கள் வந்துதான் எல்லாரையும் நித்திரையை விட்டு எழுப்பிவிடவோண்டுமென்பதில்லை எனும் பொருள்படவே என் கருத்தை இடுகிறேன் மற்றும்படி திரு சீமான் அவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கவில்லை காரணம் தமிழினத்தின் தற்போதைய நம்பிக்கை அவர் மட்டுமே). மேற்கூறிய இடுகையில், சீமான் இன்றுவரைக்கும் தமிழர் மீது விசுவாசமாக இருக்கிறார் எனும் பொருள் தொனிக்கின்றது. சிலவேளை சீமான் இந்திய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நாளை தமிழின விடுதலை வேள்வியிலிருந்து பின்வாங்கலாம் (எக்காலத்திலும் எதுவும் நடக்கலாம்), அப்போது நான் வந்துதானே புலம்பெயர் தேசத்தில தமிழுணர்வூட்டினனான் போங்கடா புண்ணாக்குகளே எனச்சொல்லும் ஒரு சந்தர்ப்பத்தை எற்படுத்திவிடாதீர்கள்.

சீமானின் அரசியல் பிரவேசம் கருணாநிதியைப் போன்றோ, இல்லை ஜெயலலிதா அல்லது ஏன் MGR போன்று இருக்கவில்லை.... அவரது அரசியல் பிரவேசம் ராமேசுவரத்தில் வெடித்து கிளம்பியது..... அவர் எதிர்த்து நிற்பது தமிழர்களை கண்டாலே கேலிப்பொருளாக பார்க்கும் ஆரிய காங்கிரசினை... தமிழினத்திற்கு விடிவு வர கருணாநிதியையும் எதிர்க்கிறார்..... எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாமல் எத்தனையோ சவால்களை எத்தைனையோ மரண அச்சுறுத்தல்களை தனித்தே சந்தித்து இருக்கிறார். பெரியாரை தன் ஆசானாகவும் மேதகு பிரபாகரனை தன் உயிரினும் மேலான ஒப்பற்ற தலைவனாகவும் ஏற்று போராடி வருகிறார்.....சீமான். பெருவீரன் பிரபாகரன் இந்தியப் படைகளை துணிந்து நின்று எதிர்த்ததை போல சீமான் ஆசியாவின் பலம்பொருந்திய இந்திய காங்கிரசையும் துணிந்து எதிர்த்து வருகிறார்.... சீமான் கருணாநிதி, ராமதாஸ், திருமா, அல்லது ஜெயலலிதா போன்ற ஒரு அரசியல்வாதி இல்லை. சீமான் துணிச்சல் மிக்க ஒரு மனிதர்.

Edited by Rudran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.