Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அருட்தந்தை ஜோசப் அடிகளாருடன் மூத்த உறுப்பினர்கள் சரண்டந்தனர். நேரில் கண்டவர் மன்னாரில் சாட்சியம்

Featured Replies

திங்கட்கிழமை, ஜனவரி 10, 2011

அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் இந்த சம்பவம் 2009 ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை 8 மணிக்கு நடந்ததாகவும் மன்னாரில் சாட்சியம் அளித்துள்ளார் போராளியின் துணைவியார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்துக்கானவிசாரணையின் இரண்டாம் நாள் அமர்வு மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பெரிய பன்றிவிரிச்சானிலுள்ள மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று காலை ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டீ. சில்வா தலைமையிலான குழுவினர் முன்னிலையில் இச்சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றது.

இதன்போது பெரிய பன்றிவிரிச்ச்சான் பகுதியிலள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் அருட்தந்தை உட்பட பலர் சாட்சியளித்திருக்கின்றனர். இதன்போது மூன்று பிள்ளைகளின் தயாரான மிலோனியா ராயப்பு முக்கியத்துவம் வாய்ந்த சாட்சியம் ஒன்றினை ஆணைக்குழு முன் பதிவு செய்தார்.

அவர் வழங்கிய சாட்சியம்,

45 வயதான அந்தோனி ராயப்பு என்ற தமது கணவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக யான் என்னும் பெயரில் கடமையாற்றி வந்ததாகவும் இவர் ஏனைய விடுதலப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களுடன் இராணுவத்தினரிடம் சரணடைந்திருக்கின்ற போதும் அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தொடாபில் எதுவித தகவல்களும் இல்லை எனத்தெரிவித்திருக்கின்றார்.

தமது கணவன் உள்ளிட்ட விடுதலைப்பபுலிகளின் சிரேஸ்ட தலைவர்களான வேலவன், ரூபன், இளம்பரிதி, பாபு, குமரன், மற்றும் கருவண்ணன் ஆகியோருடன் கத்தோலிக்க குருவான அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் ஊடாக முல்லத்தீவில் வைத்து படைத்தரப்பினரிடம் சரணடைந்ததாக அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார்.

அருட்தந்தை உட்பட இவர்கள் அனைவரும் தம் முன்னிலையில் வைத்து பேரூந்து ஒன்றில் ஏற்றப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டிருக்கின்றனர். ஆயினும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியாதிருக்கின்றது.

இந்நிலையில் அருட்தந்தையுடன் சேர்த்து அழைத்துச்செல்லப்பட்டவர்களது நிலவரம் என்ன என்பதை வெளிப்பபடுத்துமாறு ஆணைக்குழு முன் மிலோனியா ராயப்பு கேட்டுக்கொண்டார். இதில் முக்கிய விடயமாக அருட்தந்தையுடனான இந்த குழுவினர் பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் இந்த சம்பவம் 2009 ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை 8 மணி அளவில் இடம்பெற்றதாகவும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிடடிருக்கின்றார்.

தொடர்ந்து சாட்சியமளித்த மிலோனியா ராயப்பு 16.05.2009 அன்று முள்ளிவாய்க்காலிலிருந்து முல்லைத்தீவுக்கு தனது மூன்று பிள்ளைகளுடன் தான் இடம்பெயர்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து 17ஆம் திகதி தனது கணவரும் தம்முடன் வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் முல்லைத்தீவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த சுற்றுவட்டத்தில் தங்கியிருந்தவர்களிடம் ஒலி பெருக்கி மூலமாக விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களை சரணடையுமாறு கேட்டு கொண்டதற்கமையவே தமது கணவர் உட்பட சிரேஸ்ட தளபதிகள் சுமார் 40 பேரளவில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் ஊடாக இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றனர் எனவும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்திருக்கின்றார்.

மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஆணைக்குழுவின் சாட்சிய பதிவு நிகழ்வுகளின் போது மன்னார் மாவட் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், மடு உதவி அரசாங்க அதிபர், என பலரும் கலந்துகொண்டனர்.

Add new comment

ஈழ நாதம்

LLRC%20in%20Mannar002.jpg

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.