Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிட் நைட் காங்கிரஸ் மசாலா!.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிட் நைட் காங்கிரஸ் மசாலா!.

காங்கிரஸ் என்றால் கூட்டம். காங்கிரஸ் கட்சிக்கு வயது 125. விடுதலை பெற்ற இந்தியாவுக்கு வயது 63.நள்ளிரவில் பெற்றோம் (விடுதலை) இன்னும் விடியவேயில்லை என்றார்கள். காந்திக் கிழவன் 78 வயது வரை வாழ்ந்து இந்தியாவைக் கெடுத்துவிட்டான் என்கிறார்கள்.

தமிழகத்தில் கருணாநிதி தடுமாறுகிறார். ஜெயலலிதா வரும் சட்டசபை – 2011 தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்றிருக்கிறார். தமிழகத்தில் விஜய்காந்தும்; மருத்துவர் ராமதாசும் எந்தப்பக்கம் பாய்ந்தால் வெற்றியின் சதவீதம் கூடும் என கணக்கிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி கருணாநிதியை சந்திப்பது எனது பயணத்திட்டத்தில் இடம் பெறவில்லை என்கிறார். நதி நீர் இணைப்பு சாத்யமில்லை எனும் இளந்தலைமுறைத் தலைவர்.டெல்லியில் சோனியா,மன்மோகன், பிரணாப் போன்றோர் தி.மு.க.தான் கைப்பிடிக்கு ஏற்றது என எண்ணுகின்றனர். ஜெவின் வழுக்குமரம் ஒத்துவருமா எனத் திணறுகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஒருபக்கம் மெகா டி.வி.யும் கல்லூரிகளும் நடத்திக்கொண்டு; டாக்டர் கலைஞர்தான் சரியான பிடி என்கிறார். மறுபடியும் கக்கன் ஆட்சி; காமராஜ் ஆட்சி என புருடாவும்; ரீலும் விடுகின்றனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வேண்டாம் என்னைத் தோற்கடித்தவர்களுடன் கூட்டா? என்கிறார். ஒரு காலத்தில் ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டு நிலவும்போதும் இவர்தான் அவரையும் கடுமையாக எதிர்த்தவர். கார்த்திக் சிதம்பரம் திராவிடப் பாரம்பரியத்தோடு பிரியாணி பொட்டலமும்; குடையும் இலவசமாக அளித்து கூட்டம் சேர்த்து காங்கிரஸ் கட்சியில் G.K.வாசன்; தங்கபாலு; இளங்கோவன் போன்றவர்களோடு தனது தந்தையின் வாரிசாக ஒரு மையப் புள்ளியாகப் பார்க்கிறார் கூட்டணியை எதிர்த்தும் பேசுகிறார்.

குஷ்பூ வந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எதிர்பார்த்து அழைத்தார்கள் ஆனால் அம்மணி தமிழ்க்கடவுள் காலடியில் பூக்களிட்டு பாதபூஜைக்கு சென்றுவிட்டது தி.மு.க. வுக்குள்.

தமிழக தேர்தல் எனும் களத்தில் ஆட்சியை நெருங்கிவிடலாமா என 3 யுக்திகளையும் கையாள்கிறது 3 வழிகளில்: 3 வது அணி சாத்யமா என்று ஒரு நினைப்பிலும்; தி.மு.க- 1; அ.இ.அ.தி.மு.க – 2 திராவிடர் கழகங்களில் எந்தப்பக்கம் அதிக கனம்; அதிக பலம்; அதிகம் பயன் என சாதுர்யமாக காய் நகர்த்தி வருகிறது.

ராசா 2 G அலைவரிசையில் கருணாநிதி தடுமாறி ஆடிப்போயிருக்கிறார். என்னடா எல்லா ஏழைமக்களின் ஏகோபித்த ஆதரவும் டி.வி. வீடு; பட்டாமனை; அரிசி; பொங்கல் பை; சைக்கிள்; என எல்லா இலவசத் திட்டங்களும் ராசாவின் அலைவரிசையிலும் வெங்காய; புளி; தேங்காய்; தக்காளி காய்கறி விலைவாசியிலும் காணாமல் போய்விடுமா தனது அடுத்த வாரிசுக் கனவு கலங்கிப்போய்விடுமோ என கடைசியாக ராஜதந்திரத்தில் காய் நகர்த்த ஆயத்தமாகிறார். மதுவின் மூலம் அதிகம் உயிர்களைப் பறித்த ஆட்சி முறை மூலம். சாலை விபத்துகள் மூலம் இறந்தவர்களைவிட மதுவால் உயிர்ச்சேதம் அதிகம்.

மத்திய புலனாய்வு,விசாரணை,மத்திய தணிக்கைக் குழு; போன்றவை முடுக்கப் பட்டு ; தேர்தலில் வென்றவுடன் மந்திரி பதவி பேரத்தில் கலைஞர் எவ்வளவு கெடுபிடியாக இருக்கிறாரோ அதேபோல தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைக்குமளவுக்கு ஏதுவாக ஒரு கணிசமான இடப்பகிர்வை இம்முறை பெற்றுவிடவேண்டும் என்று கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த தீர்மானித்திருக்கிறது காங்கிரஸ் தனது முப்பரிமாண முகங்களுடன்.

அம்மா ஜெ ரெடி; காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கலைஞரை வீழ்த்த. திறந்த மனதுடன் அழைக்கிறார்.ஆனால் அவரின் அடி எப்போது இடியாய் இறங்கும் என காங்கிரஸ் ஏற்கெனவே பலமுறை உணர்ந்துள்ளது எனவே சூடு பட்ட பூனையாய் வாயை வைக்க மறுக்கிறது ஜெ வைக்கும் சுடு பாலின் மீது.

விஜய்காந்தும்; ராமதாசும் தங்களால் பலன் பெறும் கதிதான் நிலவுகிறதே தவிர அவர்களை நம்பி காங்கிரஸ் எந்த பலமும், பலனும், பயனும் பெற வழியேயில்லையே எப்படி அவர்களுடன் இணையமுடியும்? 3 வது அணி தமிழகத்தில் சாத்யமா என்று வேறு குழம்புகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் ஏனைய உதிரிக் கட்சிகளை கணக்கில் வைப்பதற்கில்லை.கோவைப் பக்கம் கொங்கு வேறு நெருப்புக் கங்காய் சுடுகிறது. இது போல தேர்தலுக்குத் தேர்தல் நிறைய சாதிக் கட்சிகள் வேறு உறுத்த ஆரம்பித்துள்ளன புது புதுப் பெயர்களுடன்.

எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு வாக்குக்கும்/ஓட்டுக்கும் இந்த முறை தமிழகத் தேர்தலில் சுதந்திர இந்தியாவில் எப்போதும் இல்லாத நல்ல விலை வெங்காயத்துக்குக் கிடைத்தது போல் கிடைக்கும்போலிருக்கிறது. கட்சி பேதமில்லாது எல்லாக் கட்சிகளும் மது; பிரியாணி பேட்டாவை நம்பியே கூட்டம் சேர்த்து வருகின்றன. ஓட்டுக்கும் நல்ல விலை கொடுத்துவருகின்றன.

ஜனநாயகம் பணநாயகத்துடன் இது போன்ற தேர்தல்மூலம் முன் எப்போதும் இல்லாத அளவில் கேலிக்கூத்தாய் முடியலாம். தேர்தல் ஆணையம் தேர்தல் செலவை வங்கிக் கணக்கின் வழிதான் செய்யவேண்டும் எனச் செய்தி. எமது நாட்டின் மன்னர்களுக்கு இதெல்லாம் ஒரு தடையா? தூசு. எந்தத் தடைகளையும் மீற இவர்களுக்குத் தெரியும்.

தமிழகத்தில் என்றுமில்லாத கூட்டணி மந்திரிசபை , கூட்டாட்சி; எளிதில் கவிழும் முறைகள் கர்நாடகா; கோவா; பாண்டி; ஆந்திரா ஸ்டைலில் நடக்கலாம். அல்லது பி.ஜே.பி. பேரம் போல்; காஷ்மீர் போல் நீங்க 2.5 ஆண்டு; நாங்க 2.5 ஆண்டு முதல்வர் பதவியுடன் ஆட்சி நிர்வாகத்தைப் பங்கிட்டுக் கூறு போட்டுக் கொள்ளும் நிர்வாகமும் வரலாம்.

ஆனால் எப்படியோ கலைஞர் எல்லா யுக்திகளிலும் தேறி வந்து ஆட்சி அமைக்கும் படியில் நின்றாலும் அதுவரை சேர்ந்து களம் புகும் சகோதரர்கள் பிரிந்து நின்று ஸ்டாலின் தம்பி உனக்கா? அல்லது மதுரைஅரசர் அழகிர் அண்ணன் எனக்கா என்ற குடும்ப யுத்தம் உட்கட்சிப் பூசலும் ஆரம்பிக்கலாம். முதல்வர் துணை முதல்வர் என அப்போதும் பிரித்துக் கொண்டு ஆளுமை செய்தால் பிரச்ச்னை தீர்ந்துவிடுமா?

ஆனால் தலித் முதல்வர் தரத்தயாராய் இருக்கும் சிதம்பரம் போன்றோர் கனவுகளும்; இளங்கோவன் நினைவுகளும்; தங்கபாலு; கார்த்திக் சிதம்பரம்; ராகுல்; போன்றோர் துளிர்விடும் அரும்பாகும் தமிழக ஆட்சிய ஆசைகளும் தகரப் போவது உறுதி.

ஏன் எனில் அடித்தளம் இல்லாமலே இவர்கள் கட்டடம் கட்ட ஆசைப்படுகிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை; காமராஜ் ஆட்சியைக் கோட்டை விட்டு 50 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. எனினிம் இன்னும் இவர்கள் கட்சியை வலுப்படுத்த ஏதும் நிரந்தரமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

மற்ற கட்சிகளைப் போலவே உறுப்பினர் சேர்க்கையில் சமுதாயக் கிருமிகளும், மதுபான மூட்டைகளும்;பணநோட்டுக் கற்றைகளும் பிரியாணிக் குடை விசிறல்களும் விரவி விட்டதைக் காணமுடிகிறது ; இப்படித்தான் நாமும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கமுடியும் என்ற முடிவுக்கு வந்து வெகு காலமாகிறது.

எந்த ஊரிலுமே. கிளைகளிலுமே காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தோற்றம் ; அடித்தளம் ஏதுமில்லை மற்ற இரு கட்சிகளுக்கும் இருப்பதுபோல. இந்நிலையில் இவர்களால்; காங்கிரஸ் கட்சியால் 3ஆவது அணி அமைத்து ஏதும் செய்ய வழி இல்லை. அ.இ.அ.தி.மு.க; தி.மு.க இரண்டு கட்சிகளின் தலைமையில் பா.ம.கவும்; தே.தி.மு.க. வும் இணைவது போன்றே இரண்டு கட்சி அணியில் ஏதாவது ஒன்றில்தான் காங்கிரஸ் கட்சியும் இணைய முடியும். இல்லையெனில் தமிழகத்தைப் பொறுத்த வரை 125 வயதான கட்சி எந்தப் பலனையும் பெற முடியாது.

தற்போது காமன்வெல்த் விளையாட்டு ஊழல்; ஆதர்ஷ் வீட்டுத் தொகுப்பு ஊழல்; 2 G அலை வரிசை ஊழல் எனப் பாராளுமன்றமே செயல்படாமல் ஸ்தம்பித்திருக்கும் நிலையிலும் காங்கிரஸ் கூட்டுப் பாராளுமன்றக் குழுவின் விசாராணை கிடையாது எனப் பல குரல்களில் ஒலிக்கிறது ஏன் எனில் காங்கிரஸ் கட்சிக்கு; இந்தியக் கட்சிகளுக்கு; இந்திய ஜனநாயகத்திற்கு ஊழல் ஒன்றும் புதிதல்ல.

ஏற்கெனவே ராஜிவ் காந்தி பேரில்யே Fபேர்பாக்ஸ்; போபார்ஸ் பீரங்கி பேர ஊழல் வி.பி.சிங்க் மூலம் வெளிவந்ததுதான். பிறகு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அது ஒன்றுமில்லாதது ஆனது. அந்துலே ஊழல் என்றார்கள்;லாலுபேரில் மாட்டுத்தீவன ஊழல் என்றார்கள் அவர் உலகிலேயே அற்புதமான ரெயில்வேமந்திரியாகி அமெரிக்கப் பல்கலைக் கழக மாணவர்க்கெல்லாம் உரை நிகழ்த்தச் செல்லுமளவு காங்கிரஸ் பதவி தந்தது.

நம் இந்தியத் தாய்த் திரு நாட்டில் இதுவரை எந்த அரசியல்வாதியும் ஊழல் புரிந்ததற்காக நீதிமன்றத்தாலோ வேறு விசாரணை முறைகளாலோ தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.பாபர்மசூதி இடித்த மதவாதிகள் உட்பட.

மது குடிக்காத தேசப் பற்றாளக் குழந்தையாய் இருந்து எனக்குத் தெரிந்த சில; இப்போது என் நினைவில் வரும் சில எண்ணங்களைப் பகிர்கிறேன்.

————————————————————

1. 20 வயது முதல் 60 வயது வரை மட்டுமே அரசியலில் ஈடுபட வேண்டும். அதிலும் முக்யமாக ஆட்சிப் பதவிகளில்; மந்திரிப் பதவிகளில் இடம் பெறவேண்டும்.

2. ஊழல் குற்றம் நிரூபிக்கப் பட்டால் தேசத் துரோகமாக கருதப்பட்டு அப்படிப்பட்ட பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதற்காக வரும் அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் பட வேண்டும்.

3.மது அறவே தடை செய்யப்பட வேண்டும்.

4. வாக்குகள் விற்பனையும்; விலைக்கு வாங்குவதும் முற்றிலும் தடை செய்யப்படல் வேண்டும்;

5. சாதி மத ஏற்றத்தாழ்வுகள் அரசியல் சாசனத்தில் சொன்னபடி அறவே உண்மையாகவே நடைமுறை வாழ்விலும் ஒழிக்கப்படல் வேண்டும்.

6. இரு கட்சி அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்தால் 3 கட்சிகள் மட்டுமே நாட்டில் இருக்க அனுமதிக்கப்படல் வேண்டும்.-இது பெருகி வரும் உதிரிக் கட்சிகளை தடுக்கவும் ஆட்சி முறைகளில் வெளிப்படையாக கண்காணிக்கவும் உதவும்.

7.அப்துல் கலாம் போன்ற பெரியோரின் வழிகாட்டுதலுடன் நதி நீர் இணைப்பைக் கொண்டுவந்தால் மட்டுமே இந்திய மண்ணுக்கும்; இந்திய ஆட்சி முறைகளுக்கும்; எந்தக் கட்சி அந்த மாபெரும் திட்டத்தை ஊழலின்றி அமல்படுத்துகிறதோ அந்தக் கட்சிக்கும் மறுமலர்ச்சி ஆகும்.

இதுபோன்ற ஆக்கபூர்வமான தூயத் திட்டங்கள் இல்லாவிட்டால் இந்திய ஜனநாயகம் இனி ஈடேறுவது என்பது சொல்லமுடியாததே. பிழைப்பது 99% கடினமே.

http://marubadiyumpookkum.wordpress.com/2010/12/29/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2/

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பூ வந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எதிர்பார்த்து அழைத்தார்கள் ஆனால் அம்மணி தமிழ்க்கடவுள் காலடியில் பூக்களிட்டு பாதபூஜைக்கு சென்றுவிட்டது தி.மு.க. வுக்குள்.

குஸ்புவுக்கு தி.மு.க. வில் அதிக முக்கியத்துவம் கொடுத்தால்.... கனிமொழியின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப் பட்டுவிடும் என்று தி.முக.வுக்குள் ஒரு கோஸ்டி, வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு நிற்குது. எப்படியோ குஸ்புவை ஜெ. யிடம் இருந்து பிரித்து.... அடுத்த தமிழக முதலமைச்சாராகாமல் தடுத்ததில் தி.மு.க. வெற்றி பெற்று விட்டது என்று தான் சொல்லவேண்டும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.