Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இறையாண்மைக்கு எதிரான படமென லீனா மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இறையாண்மைக்கு எதிரான படமென லீனா மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தடை!

தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு பரிச்சயமான, பெண்கவிஞர் லீனா. மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தமிழக திரைப்படத் தணிக்கைக்குழு தடை விதித்திருப்பதாகத் தெரியவருகிறது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான படம் என்ற காரணத்தினாலேயே இதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. இலக்கிய வட்டம், ஆவணப்பட வட்டாரம், ஆகியவற்றில் பிரபலமான பெண் கவிஞர் லீனா. மணிமேகலை. பறை உட்பட்ட இவர் இயக்கிய பல ஆவணப் படங்கள், சர்வதேச அளவில் விருதுகளை அள்ளியிருக்கின்றன.

ஒற்றை இலையென, உலகின் அழகிய இளம்பெண் போன்ற இவரது கவிதைத் தொகுப்புக்களும் நவீன தமிழ் கவிதைப் பரப்பில் நவீன பெண்மொழிக்காக பாராட்டப் பட்டு வருபவை. ஈழத் தமிழர் பிரச்சனையில் இலக்கியவாதிகளை ஒன்று திரட்டும் அமைப்பு ஒன்றை நிறுவி, இந்தியத்தலைநகரான டெல்லியில் இலக்கியவாதிகள், இலக்கிய வாசகர்கள் என பலதரப்பினரையும் திரட்டி, முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு முன்பு போராடியவர்.

இவரது கணவர் ஜெரால்ட் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான மதுர, தற்போது ஒளிபரப்பாகி வரும் என் பெயர் மீனாட்சி ஆகிய மெகா தொடர்களின் இயக்குனர். லீனா மணிமேகலைக்கு கவிதை, ஆவனப்படம் ஆகியவற்றுக்கு அப்பால் நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்ற லட்சியமும் இருந்து வந்ததாம். இதனால் ஈழத்தமிழரின் இன விடுதலைப் போராட்டத்தை பின்புலமாகக் கொண்டு, தனுஷ்கோடி, ராமேஷ்வரம் ஆகிய முகாம்களில் வசித்து வரும் அகதிகள் சிலரின் ஃபிளாஷ் வாழ்க்கையைச் சொல்வது போல செங்கடல் என்ற படத்தை இயக்கி முடித்திருந்தார் லீனா.

இந்தப்படத்துக்கு பிரபல ஈழ புழம்பெயர் எழுத்தாளரான ஷோபா சத்தி திரைகதை வசனம் எழுதியுள்ளார். படத்தில் ஒரு அகதியாகவும் ஷோபா சக்தி நடித்துள்ளார். ஷோபா சக்தி பங்களிப்பு செய்திருக்கும் படம் என்பதால் இது விடுதலை புலிகளுக்கு எதிரான படம் என்ற பேச்சும் இடையில் எழுந்தது.

இவை ஒருபக்கம் இருக்க இந்தப்படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்யும் முகமாக தனிக்கை சான்றிதழ் பெற வேண்டி விண்ணப்பித்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். நேற்று படத்தைப் பார்த்த தமிழக தனிக்கை குழு உறிப்பினர்கள். “ இந்தப்படத்துக்கு தனிக்கைச் சான்றிதழ் தரமுடியாது. இது இந்திய இறையான்மைக்கு எதிரான படம்” என்பதாகக் கூறி தங்களது தங்கள் ராஜவிசுவாசத்தைக் காட்டி, படத்துக்கு தடை விதித்துள்ளனர்.

கருத்துச் சுதந்திரத்தின் குரள்வளையை தொடர்ந்து நெறிக்கும் தமிழக தணிக்கை குழு, ஏற்கனவே காற்றுக்கென்ன வேலி படத்தை தடை செய்தது. தற்போது செங்கடல் படத்தை தடை செய்திருக்கிறது. ஆனால் லீனா இதை விடமாட்டார் என்று நம்பலம். இன்று மாலை இந்தப்படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட உள்ள நிலையில், செங்கடல் படத்தின் மீதான தடை அதுகுறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும்.

http://ww5.4tamilmedia.com/index.php/newses/india/2234-2011-01-10-09-12-11

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைக்குட்டையுடன் நடிக்கும் படங்களுக்கு அனுமதி வழங்கும் போது இவ்வாறான படங்களுக்கு எப்படி அனுமதி தரமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.