Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளுக்கு ஆயுத பயிற்சி - இந்திரா காந்தி வகுத்த திட்டம்

Featured Replies

1983 ஜூலைக் கலவரத்துக்குப் பிற்பட்ட காலத்தில் ஈழப் பிரச்சினையைக் கையாள்வதில் இரண்டு விதமான நிலைமைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. இவை தொடர்பாக கடந்த வாரம் விரிவாகப் பார்த்திருந்தோம். அவையாவன:

1. ஈழப் போராளி அமைப்புக்கள் தமிழகத்திலுள்ள தமது ஆதரவுச் சக்திகளின் உதவியுடன் தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி முகாம்களை அமைத்துச் செயற்படத் தொடங்கியிருந்தன. இவற்றை மூடிவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன.

2. மேற்குலகுக்கு ஆதரவான வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்த இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கையில் அமெரிக்கா தளம் அமைப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தார். இது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற கருத்து இந்தியாவிடம் இருந்தது.

இந்த இரு விடயங்களையும் கவனத்திற்கொண்டதான ஒரு அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டியவராகவே இந்திரா காந்தி இருந்தார். இந்தியாவைப் பொறுத்தவரையில் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பில் பிரதான பாத்திரத்தை வகிப்பவராக இந்திரா காந்தியே இருந்தார். அவருக்கு ஆலோசனை வழங்கக்கூடியவராக பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆர்.என்.காவ், பிரதமர் செயலகத்தின் பணிப்பாளர் கே.சங்கரன் நாயர், மற்றும் றோவின் தலைவர் கிரிஷ் சந்திர செச்சானா ஆகியோர் இருந்தார்கள்.

ஜெயவர்த்தனவையும் தமிழ்ப் போராளி அமைப்புக்களையும் எந்தவகையில் கையாள்வது என்பதையிட்டு இந்த மூன்று பேருடனும் நடத்திய ஆலோசனைகளின் மூலமாகவே தன்னுடைய தந்திரோபாயங்களை இந்திரா காந்தி வகுத்துக்கொண்டார். இதனை மற்றொரு வகையில் சொல்வதானால் தமிழ்ப் போராளிகளைப் பயன்படுத்தி ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவருவது என்பதுதான் இந்திரா காந்தியின் திட்டமாக இருந்தது. இதற்காக தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியை வழங்கி நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று இந்திரா காந்தியினால் தீட்டப்பட்டது.

இதன் மூலம் தமிழக அரசின் ஆதரவுடன் சுயாதீனமான முறையில் இடம்பெற்றுவந்த போராளிகளுடைய ஆயுதப்பயிற்சி முகாம்களை மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. போராளி அமைப்புக்களைப் பயன்படுத்தி ஜெயவர்த்தன அரசைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும், இந்தியா கணக்குப் போட்டது. குறிப்பாக இலங்கையில் அதிகரித்துவந்த மேற்கு நாடுகளின் செல்வாக்கை களைவதற்கு இதனைப் பயன்படுத்திக்கொள்வதுதான் இந்தியாவின் உபாயமாக இருந்தது.

தம்மால் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு முன்னர் மற்றும் சில தரப்பினரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இந்திரா காநதிக்கு இருந்தது.

இதனால், புலனாய்வு அமைப்புக்களுடனான ஆலோசனையுடன் இந்திரா காந்தியினால் தயாரிக்கப்பட்ட ஈழப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சியளிப்பது என்ற இந்தத் திட்டம் தொடர்பிலான விபரங்கள் இந்தியாவின் கொள்கைத் திட்டமிடல் பிரிவுத் தலைவர் ஜீ.பார்த்தசாரதிக்கும், தமிழக முதுதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களுடைய ஆலோசனை பெறப்பட்டது. அப்போது ஜீ.பார்த்தசாரதி இதனையிட்டுத் திருப்தியடைந்தவராகக் காணப்படவில்லை. இதனை அவர் மௌனமாக எதிர்த்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், எம்.ஜி.ஆர். இதனையிட்டு மகிழ்ச்சியடைந்தவராகக் காணப்பட்டார். (ஆதாரம்: Indian Intervention In Sri Lanka றோஹான் குணரட்ண)

ஈழப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சியளிப்பது என்ற இந்திய அரசின் முடிவின் முதலாவது கட்டம் என இதனை வர்ணிக்கும் சர்வதேச இராணுவ விவகார ஆய்வாளரும் பேராசிரியருமான றோஹான் குணரட்ண, இதனுடைய இரண்டாவது கட்டம் தொடர்பாக பின்வருமாறு விவரிக்கின்றார்:

"இலங்கை விவகாரம் தொடர்பிலான இரண்டாவது கட்டப் பேச்சுக்கள் அப்போதைய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஆர்.வெட்கடராமன் (பின்னர் இந்திய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டவர்), வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ (பின்னர் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றவர்), வெளிவிவகாரச் செயலாளர் ராஷ்கோத்ரா, பிரதமரின் செயலாளர் பி.சி.அலெக்ஸான்டர் ஆகியோருடன் நடத்தப்பட்டது.

இந்த இரகசிய இராணுவ நடவடிக்கையை வெட்கடராமன் கடுமையாக எதிர்த்தார். நரசிம்மராவ் வெளிவிவகார அமைச்சராக இருந்த போதிலும் வெளிவிவகாரக் கொள்கையை வகுக்கக்கூடியவராக இருக்கவில்லை. வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் இந்திரா காந்தி எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் ஒருவராக மட்டுமே அவர் இருந்தார். இந்திரா காந்தி வகுத்த இந்தத் திட்டத்தை ராஷ்கோத்ரா எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. இந்திரா காந்தியின் இந்த முடிவை அவர் தனிப்பட்ட ரீதியில் நியாயப்படுத்திய போதிலும், இலங்கையில் இரகசிய இராணுவ நடவடிக்கை எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை என்றே அவர் தெரிவித்துவந்தார்.

இவர்கள் அனைவரும் பிரதமர் இந்திரா காந்திக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும், விசுவாசமானவர்களாகவும் இருந்தார்கள். இந்தத் திட்டத்தை எவ்வாறு செயற்படுத்துவது என்பதையிட்டு விரிவான திட்டம் ஒன்றை வகுத்து பிரதமரிடம் கையளிக்குமாறு இவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்."

அதாவது போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களை ஜெயவர்த்தனவுக்கு எதிராகப் பயன்படுத்துவது என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு முக்கிய தரப்பினருடைய அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுவிட்ட நிலையை இது உணர்த்துகின்றது. போராளி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதுதான் அடுத்த கட்டமாக இருந்தது.

போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சியளிப்பது என்ற முடிவுடன், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கான இரட்டை அணுகுமுறை ஒன்றை பதுடில்லி வகுத்துக்கொண்டது. அதாவது, சமாதானப் பேச்சுக்களுக்கான ஒரு மத்தியஸ்த்தர் என்ற முறையில், இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்கான அழுத்தங்களைக் கொடுப்பது மறுபுறத்தில் இரகசியமான இராணுவ அழுத்தங்களை போராளி அமைப்புக்களின் மூலமாகக் கொடுப்பது என்பனவே புதுடில்லியின் தந்திரோபாயமாக இருந்தது.

இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களான காவ், சங்கரன் நாயர், கிரிஷ் சந்திர சக்சேன மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் இணைந்தே இதற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டார்கள்.

இதன்படி போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சியளிப்பதற்கான திட்டம் இந்தியப் புலனாய்வு அமைப்புக்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதேவேளையில், அரசியல் ரீதியிலான நகர்வுகளை முன்னெடுக்கும் பொறுப்பு இந்திய வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. குறிப்பாக பார்த்தசாரதி இதனைக் கவனித்துக்கொண்டார். இந்த இரு தரப்பினருக்கும் இடையிலான இணைப்பாளராக இந்திரா காந்தியே செயற்படுவார் எனவும் சொல்லப்பட்டது.

இதனையடுத்து தமது அடுத்த கட்டத்தை நோக்கி இரு தரப்பினரும் செல்லத் தயாரானார்கள்.

அது பற்றிய தகவல்களுடன் அடுத்த வாரம்...

http://pooraayam.com/pathivukal/354-eelamindia10.html

பூராயத்துக்காக

சிவயோகன்

குறிப்பாக இலங்கையில் அதிகரித்துவந்த மேற்கு நாடுகளின் செல்வாக்கை களைவதற்கு இதனைப் பயன்படுத்திக்கொள்வதுதான் இந்தியாவின் உபாயமாக இருந்தது.

இப்ப மேற்குலகு இந்தியா ஆதரவாகவும் .....சீனா சிறிலங்கா ஆதரவாகவும் உள்ளது......

வெற்றி அடைந்தது சிறிலங்கா ..... இந்தியா ..மண் கவ்வியது....

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.