Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான்' - சுவிஸ் கொள்ளையர்கள்.

Featured Replies

'பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான்' - சுவிஸ் கொள்ளையர்கள்.

'தர்மத்தை ஏமாற்ற நினைத்தால் தர்மம் ஏமாற்றிவிடும்' என்ற உண்மையின் தத்துவத்தை அறியாத 'எம்புரோட்டிக்' கள்ளர்கள் இன்று பிடிபட்டு மக்கள் முழி பேந்தப் பேந்த நிற்பதைப்பார்க்க நகைப்பாக உள்ளது.

சர்வதேசத்திலே 'தமிழருக்கான' அந்தஸ்த்து(செம்மொழி) உயர்ந்துள்ளதன் காரணம் தமிழ்மொழியின் செழுமையும் அதன் பழமையும் ஆகும். அதே போல தமிழரின் வீரவரலாறு உயர்வதற்கு காரணம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் தன்மையாகும். அந்தப் புனிதமான மாவீரர்களை உட்கொண்ட விடுதலைப்போரின் காரணமாக சுவிஸ் நாட்டில் உணர்வுள்ள மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி உரிய இடத்திற்கு போகாமல் மோசடி செய்யப்பட்டது, உலகில் எந்த சக்தி மன்னித்தாலும் புனிதமான மாவீரர்களின் ஆத்மா மன்னிக்காது. இந்தக் 'கள்ளர் கூட்டங்கள்' மாவீரரின் ஆத்மாக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடுவதை பார்க்கத்தான் போகின்றோம்.

நான் பெரிய தீர்க்கதரிசி என்று சொல்ல வரவில்லை. ஏற்கனவே பல கட்டுரைகளில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சேர்க்கப்பட்ட நிதி எங்கு போகவேண்டுமோ அங்கு போய்ச் சேரவில்லை என்ற கருத்தை பலமுறை சொல்லியிருக்கின்றேன். அதற்காக எனக்கு பல துரோகிப்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக நான் அஞ்சவில்லை. காரணம் இந்த துரோகிப்பட்டங்கள் இப்பேர்பட்ட கள்ளர்களால் வழங்கப்பட்டதால் அது எனக்கு பெரிய தாக்கத்தை தரவில்லை. கொள்கையில் கொண்ட பிடிப்பாலும், கொள்ளையில் கொண்ட வெறுப்பாலும் இப்பொழுதும் நான் தொடர்ந்து எழுதுகின்றேன். மக்கள் முன்னால் அம்பலமாகி கைகட்டி இவர்கள் விரட்டி அடிக்கப்படும் காலம் வரும்வரை பார்த்திருக்கிறேன்.

தேசத்தின் விடுதலைக்காக சேர்க்கப்பட்ட நிதி, முள்ளிவாய்க்கால் போர் நடந்துகொண்டிருந்த வேளையில் அங்கு அனுப்பப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. தமக்குத் தாமே பதுக்கிக் கொண்டு, நல்ல பிள்ளைகளாக திரிந்தவர்கள், பிடிபட்டவுடன் இப்பொழுது பொதுமக்களுக்கு பல காரணங்களைச் சொல்ல வெளிக்கிடுவார்கள்.

உதாரணத்திற்கு!

* தேசியத்தலைவர் மீண்டும் வெளியில் வந்து மீண்டுமொரு ஆயுதப்போராட்டத்தை நடாத்த முற்படுகையில் அதற்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்தோம் என்பார்கள்.

* இந்த நிதி விடுதலைப் போராட்டத்திற்காகவேண்டியே சேர்க்கப்பட்டது எனவே அதை வேறு தேவைகளுக்காக செலவழிக்கக் கூடாது என்பார்கள்.

* இறந்துபோன ஒரு தளபதியின் பெயரைச் சொல்லி, அவர்தான் சேர்க்கச் சொன்னவர். இந்த நிதியை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வைத்திருக்கிறோம் என்பார்கள்.

* தமிழீழ விடுதலிப்புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைத்தால் அதை இலங்கை அரசாங்கள் பறித்துவிடும் என்ற கதையும் அளப்பார்கள்.

* நாங்கள் சேர்த்த நிதியில் பெருமளவு ஆயுதங்கள் வாங்கப்பட்டு பின்னர் அதைக் கப்பலில் அனுப்பினோம். அது இலங்கை, இந்தியக் கூட்டு முயற்சியில் கடலில் வைத்து அழிக்கப்பட்டு விட்டது என்று கதையளப்பார்கள்.

* ஆயுதம் அனுப்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு வெறும் கப்பலை அனுப்பிவிட்டு அதை இலங்கை அரசாங்கத்திடம் தாங்களே காட்டியும் கொடுத்துவிட்டு அது அத்தனையும் அழிந்துவிட்டது என்று கதையளப்பார்கள்.

இப்படிப் பல காரணங்களைச் சோடிப்பார்கள். ஆனால் இதில் எந்த உண்மையும் இருக்காது. பொதுமக்கள் இந்தக் காரணங்களைக் கூறுவோருக்கு நல்ல பதிலடி(செருப்படி) கொடுக்கவேண்டும். ஏனென்றால், வன்னி யுத்தத்தால் இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் ஒரு 'செப்புச் சல்லியைக்' கூட அனுப்பவில்லை. அல்லது இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிக்கு அனுப்பவில்லை. இவைகளுக்கும் மேலாக மாவீரர் தெய்வங்களின் குடும்ப நலனிற்காக செலவிட்டிருந்தால் உலகத் தமிழர்களுக்கு பெருமையாகவும், ஆறுதலாகவும் இருந்திருக்கும்.

இறுதியாக சுவிசில் நடந்த(2010) மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமையை விடவும் மிகவும் பிரம்மாண்டமாக அதுவும் வன்னிமக்கள் அவலப் பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய உணர்வாளர்களை அழைத்து நடாத்தப்பட்டத்தை ஒரு தரம் நினைத்துக் கொள்ளுவோம். மாவீரர் நாளை அனுட்டிப்பதற்கு நான் எதிப்பானவன் அல்ல. நிலைமையைக் கருத்திற்கொண்டு எளிமையாக நடாத்தியிருக்கலாம். அதைவிட இதற்கெல்லாம் செலவிடுவதற்கு பணம் எங்கிருந்து கிடைத்தது. டிக்கெட் விற்றுப் பணம் சேர்த்து நடாத்தினோம் என்றார்கள். ஆனால் சுவிசில் வாழும் 90 சதவிகிதமான தமிழ்மக்கள் இந்த டிக்கற்றை கண்ணால் கூடப் பார்க்கவில்லை. அப்படியே சேர்த்திருந்தாலும் கூட பொதுமக்களுக்கு அதுபற்றிய கணக்கறிக்கை தெரியப்படுத்தப்படவுமில்லை.

சுவிசில் சேர்க்கப்பட்ட நிதி இந்தக் கள்ளர்களினால் தங்கள் தேவைகளைப் பொறுத்து பெற்றுக்கொள்ளுமுகமாக சுவிசில் பங்குச் சந்தைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் நிதிப்பங்களிப்பை செய்த தேசியத்தையும், தலைவனையும் நேசித்த மக்கள் உண்மையை பகுத்தறிந்து பொருத்தமான என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளார்கள்.

நாகலிங்கம் மதியழகன்

mathiyalakan1@hotmail.com

பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.

வணக்கம் மதியழகன் நலமா?

நீங்களும் அந்த கொள்ளையர்களுடன் இருந்தவராமே நீங்கள் பொறுப்பாக இருந்த அந்த பகுதி படுத்துவிட்டதால் புலம்புகின்றீர்கள் என்று சுவிஸ் நண்பர்கள் சொல்கின்றார்கள். அது உண்மையென்றால் நீங்களும் வெல்லத்தில் விரலைவிட்டு சூப்பியவர்தான். நீங்கள் வன்னி மக்களுக்காக புலம்புகின்றீர்கள் வேதனைதான். உங்கள் சேகரிப்பிலுள்ளதில் சிறிதை கொடுத்துதவ மனமில்லை.

நான் அறிந்தவரை விடுதலைக்காக வங்கி கடன்(ஒரு இலட்சம் வரை) எடுத்து கொடுத்துதவியவர்கள் பணத்தை இவர்கள் வங்கிகளுக்கு கட்டாமையினால்தான் இந்த பிரச்சனையாமே? நீங்கள் எல்லோருமாக சேர்ந்து நாமம் போட முயன்றீர்கள் இடையில் உங்களுக்கு நாமம் போட்டு விட்டார்கள். இன்னமும் பல விடயங்கள் இருக்கின்றது அதை நான் கூற விரும்பவில்லை.

வெறும் நன்றி சொன்னாலே போதும் என்ற நிறுவன முகாமையாளருக்குதானாம் பெரிய பிரச்சனைகள் காத்திருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.