Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்...

Posted by: on Jan 16, 2011

வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்...

''அப்புக்குட்டி... எட அப்புக்குட்டி...'' என்று குரல் கொடுத்தவாறே வந்து சேர்ந்தார் முகத்தார்.

''எடி செல்லமணி, முகத்தார் குடும்ப சமேதரராய் வாறதைப் பார்த்தால்... மாட்டுப் பொங்கல் கொண்டாட வாற மாதிரி இருக்கு. நம்மட வீட்டில மாடு இல்லையெண்டு மனுசனுக்குத் தெரியாது போல கிடக்குது... இண்டைக்கு என்ன வில்லங்கத்தோட வாறரரே தெரியாது... நான் ஒளிச்சிருக்கிறன். வெளிய போயிட்டன் எண்டு சமாளி...'' என்றவாறே அப்புக்குட்டி உள்ளே சென்றார்.

''இஞ்ச நில்லுங்கோ... நீங்கள் ஒளிக்கிறதும்... முகத்தார் அண்ணன் தேடிப் பிடிக்கிறதும் எப்பவும் நடக்கிற சங்கதிதானே... அவர் உங்கட மணத்தை வைச்சே பிடிச்சிடுவார்.'' என்று செல்லமணி தடுத்து நிறுத்தினார்.

''எடி பிள்ளை... உவன் என்னக் கண்டவுடன் நழுவப் பாத்தானோ... எடே அப்புக்குட்டி... நான் பாத்திட்டனடா... பாத்திட்டனடா... நீ ஓடி ஒளிச்சாப் போல நான் உன்னை விட்டுடுவனா...?'' என்றவாறே அப்புக்குட்டிக்குக் கடிவாளம் போட்டு, பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

''அத்தாருக்கு எப்பவும் என்னோட பகிடிதான்... கொஞ்சம் வயித்தக் கலக்கிச்சுது... அதுதான் போயிட்டு வரலாமெண்டு...''

''ஓமடா...ஓமடா... என்னைக் கண்டாத்தான் உனக்கு வயித்தக் கலக்கும்... எனக்கு உன்னைத் தெரியாதோடா...'' என்று முகத்தார் எரிச்சலுடன் கூறினார்.

''அது சரி அத்தார்... என்ன அக்கவையும் கூட்டிக்கொண்டு சோடியாக வெளிக்கிட்டிட்டீங்கள்... இங்க ஒருத்தரும் மாட்டுப் பொங்கல் பெங்கிறதாகத் தெரியேல்லை...''

''எட அப்புக்குட்டி... நீ தானேயெடா சொன்னாய்... அந்த எட்டுப்பேரையும் கண்டுபிடிக்கலாம் எண்டு... இண்டைக்கு அவங்களின்ர கூட்டம் ஒண்டு நடக்குதாம்... அதுதான் அந்த எட்டுப்பேரையும் கண்டுபிடிக்கலாம் எண்டு வெளிக்கிட்டனாங்கள்...'' என்றார் முகத்தார்.

''என்ன முகத்தாரண்ணை... அதென்னண்ணை எட்டுப் பேர்...? எனக்கெண்டா ஒண்டுமாய் விளங்கயில்லை...'' என்று செல்லமணி கழுத்தை நீட்டினார்.

''எல்லாம் உன்ர மச்சாளின்ர கூத்துத்தானடி பிள்ளை... உவளின்ர கையில ஒரு நோட்டீஸ் கிடைச்சுது... அதிலதானடி பிள்ளை ஆரம்பிச்சுது இந்தப் பிரச்சினை...''

''என்ன நோட்டீஸ்...? அதில என்ன கிடந்தது...?'' என்று செல்லமணி ஆவலாகக் கேட்டார்.

''உவன் அப்புக்குட்டி உனக்கு ஒண்டும் சொல்லயில்லையே... அதடி பிள்ளை... அந்த நோட்டீசில ஒரு படம் போட்டிருந்தது. மஞ்சள் நிறத்தில ஒரு மேசை... நடுவில, இரத்தம் தோஞ்ச தமிழீழம்... சுத்தி அதைப் பிச்சுத் தின்னுகிறது மாதிரி எட்டுப்பேர் இருக்கிறாங்கள். அந்த எட்டுப்பேரும் ஆர் எண்டு என்னைப் போட்டு இவள் குடைஞ்சு எடுத்துப்போட்டாள்... அந்த நோட்டீசை விட்டவங்கள் இண்டைக்கு ஒரு கூட்டம் போடுறாங்கள்... அதுதான் அங்க போனால் அந்த எட்டுப்பேரையும் கண்டு பிடிச்சுப்போடலாம் எண்டு வெளிக்கிட்டம்'' என்று முகத்தார் செல்லமணியின் சந்தேகத்தைப் போட்டு உடைத்தார்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்புக்குட்டியார் அடக்க முடியாத சிரிப்பால் அந்த இடத்தையே அதிர வைத்தார்.

''என்னடா... அப்புக்குட்டி... உனக்கு நக்கலாயிருக்குதோடா...?'' என்று கோபித்துக்கொண்டார்.

''அத்தார்... வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்... போங்கோ... போங்கோ... அங்க அடையாள அட்டையும் குடுக்கப்போறாங்களாம்... அதையும் வாங்கிச் சொருகிக்கொண்டு வாங்கோ... பிறகு தெரியும், வேட்டியுக்குள்ள ஓணான் என்ன செய்யுமெண்டு...'' என்று அடக்க முடியாத சிரிப்பினால் அந்த இடத்தையே அதிர வைத்தார்.

''எடேய் அப்புக்குட்டி... என்னை மாங்காய் மடையனெண்டு நினைச்சிட்டியோடா...? முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து வரிசம் ரெண்டாகப் போகுது... அந்தச் சனங்களுக்கும் ஒண்டும் செய்ய இல்லை... இந்தச் சனங்களையும் ஒற்றுமையாக இருக்க விடயில்லை... இந்த லட்சணத்தில உப்புக்கும் பெறாத அடையாள அட்டையை என்ர தலையில கட்டிக் காசு பிடுங்க முடியுமோடா...? இப்பவே, ஆளை ஆள் காட்டிக்குடுக்கிறதில போட்டி போடுகிறாங்கள்... அடையாள அட்டை தாறன் எண்டு விவரங்களை எடுக்கிறவங்கள் ஒரு விலையைப் பேசி, கோத்தபாயவிட்ட வித்துப்போட மாட்டாங்கள் எண்டு எப்பிடி நம்பிறது...?''

''முகத்தாரா... கொக்கா... அத்தார்... எட்டுப்பேரையும் தேடுகிற பிராக்கில அதுக்குள்ள சறுக்கி விழுந்துடுவீங்களோ... எண்டு நினைச்சன்... நீங்கள் விசயகாறன்தான்...'' என்று முகத்தாருக்குச் சான்றிதழ் கொடுத்தார் அப்புக்குட்டி.

''எடி பிள்ளை... செல்லமணி... இவன் அப்புக்குட்டி அசையமாட்டான். அவன் புலியளை விட்டு வெளிய வரமாட்டான். நீ வாவனடி பிள்ளை... உன்ர மச்சாளுக்கும் பிராக்காக இருக்கும்...''

''ஐயோ முகத்தாரண்ணை... என்னையும் விட்டிடுங்கோ... பாக்கிற சனங்கள் என்னையும் இவங்கட கோஸ்டி எண்டு வறுத்து எடுத்துப்போடுங்கள்...'' என்று அப்புக்குட்டியின் பின்னால் ஒதுங்கிக்கொண்டார் செல்லமணி.

- சிரித்திரன்

www.tamilkathir.com

  • கருத்துக்கள உறவுகள்

அட பாரப்பா சிரித்திரன் விவரமாய்த்தான் சிந்திக்க வைக்குது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை. இப்பிடி ஆசை காட்டி எங்கட வெளிநாட்டு சனத்திட்ட பிடுங்கிறவை நிறைய பேர் இருக்கினம்.

எங்கட தமிழ் ஆக்களிலும் நிறைய பேர் சொற்ப காசுக்கு ஆசைப்பட்டு விலை மதிப்பில்லாதா மண்ணை விற்கினம்.

எங்கட தீவிலிருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீர்வழி வட்டாரத்தில் மக்கள் தொகையில் அறுபது விகிதம் இருக்கிறது.

மூன்று இலட்சம் ஆக்கிரப்பு படை பிடித்து வைத்திருக்கும் யாழில் ஏக்கர் எண்பதாயிரம் பவுண்ட்சுக்கு போகிறது.

தமிழ் ஈழம் கிடைத்தால் ஏக்கர் ஐந்து மில்லியன் பவுண்ட்ஸ் இலகுவாக தாண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.