Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாஸ்கோ விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு

Featured Replies

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள டோமொதேடோவா விமான நிலையில் இன்று பயங்கர குண்டு வெடித்தது.

இதில் 34 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 168 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுளனர். ரஷ்யாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மிக மோசமான நிகழ்வாகும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் 40 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Moscow Airport Attack Kills 35, Wounds 180

  • தொடங்கியவர்

ரஸ்ய விமான நிலையத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சில கேள்விகளை எழுப்பியுள்ளது:

  • பயங்கரவாதத்திற்கு எதிரான போரை கடந்த ஏழு வருடங்களாக நடாத்தியும் அதன் தாக்கம் குறையவில்லை என்ற கவலை முதலாவதாகும்.
  • இத்தகைய தாக்குதல்களை குறைத்து இயல்பான உலக மாந்தர் வாழ்வைக் கொண்டுவர தற்றுணிபுடன் கூடிய சில மாறுதல்கள் அவசியம் என்பதையே அனைத்து நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.
  • பயங்கரவாத தாக்குதல்களை நடாத்துவோர் அப்பாவிகளை கொன்று அடையப் போவது எது என்ற கேள்விக்கு பதில் தராமலே இருப்பதும், இத்தனைக்குப் பிறகும் பொறுப்பற்று நடப்பது கண்டிக்கத்தக்க செயல் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதேவேளை ஜோர்ஜ் புஸ், ரொனி பிளேயர் பயங்கரவாத எதிர்ப்புப் போர்த்திட்டத்தின் பிரதான ஓட்டைகளும் மறு பரிசீலனைக்கு வரவேண்டிய நிலையை மறுக்க முடியாதுள்ளது.

http://www.alaikal.com/news/?p=55407#more-55407

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய விமான நிலையத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சில கேள்விகளை எழுப்பியுள்ளது:

  • பயங்கரவாதத்திற்கு எதிரான போரை கடந்த ஏழு வருடங்களாக நடாத்தியும் அதன் தாக்கம் குறையவில்லை என்ற கவலை முதலாவதாகும்.
  • இத்தகைய தாக்குதல்களை குறைத்து இயல்பான உலக மாந்தர் வாழ்வைக் கொண்டுவர தற்றுணிபுடன் கூடிய சில மாறுதல்கள் அவசியம் என்பதையே அனைத்து நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.
  • பயங்கரவாத தாக்குதல்களை நடாத்துவோர் அப்பாவிகளை கொன்று அடையப் போவது எது என்ற கேள்விக்கு பதில் தராமலே இருப்பதும், இத்தனைக்குப் பிறகும் பொறுப்பற்று நடப்பது கண்டிக்கத்தக்க செயல் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதேவேளை ஜோர்ஜ் புஸ், ரொனி பிளேயர் பயங்கரவாத எதிர்ப்புப் போர்த்திட்டத்தின் பிரதான ஓட்டைகளும் மறு பரிசீலனைக்கு வரவேண்டிய நிலையை மறுக்க முடியாதுள்ளது.

இத்தகைய மனநிலைக்கு அவர் என்ன விலை கொடுத்தாரோ...?

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற நூற்றாண்டு மத்திவரை நிறைவான பயிர்செய்கை, தானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடுகள் எல்லாம் இப்ப ஏராளமான குண்டுகளைத்தான் உலகம் முழுதும் விதைத்து வைத்திருக்கின்றன. அதனால் கிடைக்கிற அறுவடையையும் அனுபவிக்கத்தானே வேண்டும்! :(

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்கோவில் குண்டு வெடித்து 35 பேர் இறந்ததிற்கு இத்தனை ஆராய்ச்சிகள். இதே மாஸ்கோ குண்டு செய்து கொடுத்து சிங்களம் கொண்டோ கொட்டென்று கொட்டி 30,000 பேரைக் கொன்றதில் யாரும் அப்பாவிகளை காணவும் இல்லை.. தேடவும் இல்லை. வந்திட்டாங்கைய்யா நீதி.. மனித உரிமை என்று கொண்டு. :o:(

யார் விதைத்தார்களோ அதற்காக அறுவடைகளே இவை..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

மொஸ்கோ குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி மஹிந்த அனுதாபம்

மொஸ்கோவின் டொமேடொடோவோ சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதைத் தெரிவித்துள்ளார்

நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 35 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு மனித சமுதாயம் கொடுக்கும் விலையை நான் நன்றாக அறிவேன். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் பாதிக்கப்பட்டோர் விரைவாக குணமடைவதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15473-2011-01-25-15-05-43.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.