Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து பனங்கிழங்கை வேண்டி யாழ்ப்பாணத்தாருக்கே விற்பனை

Featured Replies

அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்தின் புற நகர்ப் பகுதியில் அதிகாலையிலும் மாலையிலும் இளைஞன் ஒருவர் மோட்டார் வண்டி ஒன்றில் பாண், பணிஸ், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங் களை வீடுவீடாகச் கொண்டு சென்று விற்பனை செய்கின்றார். சுகாதார முறைப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.

குச்சொழுங்கைக்கெல்லாம் சென்று தனது விற்பனையை அந்த இளைஞர் முடுக்கி விட்டுள்ளார். வியாபாரம் தாராளம். அதிகாலை வேளையில் வீடுதேடி உணவுப் பண்டம் வருவது எவ்வளவோ வசதியல்லவா? அந்த இளைஞனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு இந்த இளைஞனை விசாரித்தபோது அவர் ஒரு சிங்கள இளைஞர் என்பது தெரிய வந்தது. பார்த்தீர்களா அப்படியயாரு முயற்சி பற்றி நாம் சிந்தித்தோமா எனில் இல்லவே இல்லை. இப்போது அந்த இளைஞன் வீடுவீடாகச் சென்று பாணை விற்பனை செய்வதால் அப்ப குதிக் கடைகளில் பாணின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

வியாபாரம் என்றால் நுட்பம் இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கவேண்டும். தென்பகுதி இளைஞன் ஒருவன் அதிகாலை வேளையில் யாழ்ப்பாணத் துக் குச்சொழுங்கை எல்லாம் சென்று தனது விற்பனை முயற்சியைச் செய்வது கண்டு நாம் விழிப்படைய வேண்டும். எத்தனையோ முயற்சிகள் உண்டென்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நாங்கள் உறங் கும்போது அவர்கள் விழித்திருந்து விற்பனை நடத்தும் திறனை மரியாதையோடு கற்றுக் கொள்வது அவசியம்.

இது மட்டுமல்ல யாழ்ப்பாணத்து பனங்கிழங்கை வேண்டி யாழ்ப்பாணத்தாருக்கே விற்பனை செய் யும் சிங்கள வியாபாரிகளின் முயற்சியை நினைக் கும்போது தலை சுற்றுகின்றது. எங்கள் பொருளை எங்களிடம் வேண்டி எங்களுக்கே விற்பனை செய்து இலாபமீட்டுதல் என்பதில் அவர்களின் திறமை மட்டுமல்ல எங்களின் பலவீனமும் உண்டென்பது உணர்தற்குரியது.

யாழ்ப்பாணத்தவர்கள் வேலை செய்வதில் பின்னிற்பவர்கள் மட்டுமல்ல, இன்ன வேலை என்றால்தான் அதைச் செய்யமுடியும் என்றும் நிபந்தனை விதிப்பவர்கள். இதனால் அவர்கள் வேலை செய்யக்கூடிய பொன்னான காலத்தை வீணடிக்கின்றனர். இப்போதெல்லாம் தென் பகுதியைச் சேர்ந்த பலர் யாழ்ப்பாணத்தில் எத்தனையோ வகையில் பணம் சம்பாதிக்கின்றனர்.

thx

thx

NJ200x200.gif

http://newjaffna.com

Edited by புறோக்கர்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்தின் புற நகர்ப் பகுதியில் அதிகாலையிலும் மாலையிலும் இளைஞன் ஒருவர் மோட்டார் வண்டி ஒன்றில் பாண், பணிஸ், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங் களை வீடுவீடாகச் கொண்டு சென்று விற்பனை செய்கின்றார். சுகாதார முறைப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.

குச்சொழுங்கைக்கெல்லாம் சென்று தனது விற்பனையை அந்த இளைஞர் முடுக்கி விட்டுள்ளார். வியாபாரம் தாராளம். அதிகாலை வேளையில் வீடுதேடி உணவுப் பண்டம் வருவது எவ்வளவோ வசதியல்லவா? அந்த இளைஞனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு இந்த இளைஞனை விசாரித்தபோது அவர் ஒரு சிங்கள இளைஞர் என்பது தெரிய வந்தது. பார்த்தீர்களா அப்படியயாரு முயற்சி பற்றி நாம் சிந்தித்தோமா எனில் இல்லவே இல்லை. இப்போது அந்த இளைஞன் வீடுவீடாகச் சென்று பாணை விற்பனை செய்வதால் அப்ப குதிக் கடைகளில் பாணின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

வியாபாரம் என்றால் நுட்பம் இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கவேண்டும். தென்பகுதி இளைஞன் ஒருவன் அதிகாலை வேளையில் யாழ்ப்பாணத் துக் குச்சொழுங்கை எல்லாம் சென்று தனது விற்பனை முயற்சியைச் செய்வது கண்டு நாம் விழிப்படைய வேண்டும். எத்தனையோ முயற்சிகள் உண்டென்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நாங்கள் உறங் கும்போது அவர்கள் விழித்திருந்து விற்பனை நடத்தும் திறனை மரியாதையோடு கற்றுக் கொள்வது அவசியம்.

இது மட்டுமல்ல யாழ்ப்பாணத்து பனங்கிழங்கை வேண்டி யாழ்ப்பாணத்தாருக்கே விற்பனை செய் யும் சிங்கள வியாபாரிகளின் முயற்சியை நினைக் கும்போது தலை சுற்றுகின்றது. எங்கள் பொருளை எங்களிடம் வேண்டி எங்களுக்கே விற்பனை செய்து இலாபமீட்டுதல் என்பதில் அவர்களின் திறமை மட்டுமல்ல எங்களின் பலவீனமும் உண்டென்பது உணர்தற்குரியது.

யாழ்ப்பாணத்தவர்கள் வேலை செய்வதில் பின்னிற்பவர்கள் மட்டுமல்ல, இன்ன வேலை என்றால்தான் அதைச் செய்யமுடியும் என்றும் நிபந்தனை விதிப்பவர்கள். இதனால் அவர்கள் வேலை செய்யக்கூடிய பொன்னான காலத்தை வீணடிக்கின்றனர். இப்போதெல்லாம் தென் பகுதியைச் சேர்ந்த பலர் யாழ்ப்பாணத்தில் எத்தனையோ வகையில் பணம் சம்பாதிக்கின்றனர்.

இது புதிதல்ல. போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்த காலத்திலும் இந்தியப் படைகள் காலத்திலும்.. 1990 களுக்கு முன்னரும் முஸ்லீம் வியாபாரிகள்.. பாண்.. பணிஸ் மற்றும் பொருட்களை மூன்று சக்கர "பாண்" வண்டியில் தள்ளி வந்து விற்பனை செய்திருக்கின்றனர். நம்மவர்கள் அவர்களிடமும் கடன் புத்தகம் வைத்து பொருட்களை வாங்கிவிட்டு.. பின்னர் மாத இறுதியில் சம்பளம் பெறும் போது கொடுத்து வந்திருக்கின்றனர். தமிழர்களும் இப்படிச் செய்துள்ளனர். யாழ் நகரப் பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். மற்றப் பகுதிகளில் நான் இவற்றைக் காணவில்லை. :D:)

Edited by nedukkalapoovan

குச்சொழுங்கைக்கெல்லாம் சென்று தனது விற்பனையை அந்த இளைஞர் முடுக்கி விட்டுள்ளார்.

நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு இந்த இளைஞனை விசாரித்தபோது அவர் ஒரு சிங்கள இளைஞர் என்பது தெரிய வந்தது.

  1. ஒரு தமிழ் இளையவர் இப்படி வீடு வீடாக செல்ல முடியாது, வியாபாரமும் செய்யமுடியாது
  2. இந்த சிங்கள இளையவர் ஒரு இராணுவ புலனாய்வு உறுப்பினராக கூட இருக்கலாம்
  • கருத்துக்கள உறவுகள்

  1. ஒரு தமிழ் இளையவர் இப்படி வீடு வீடாக செல்ல முடியாது, வியாபாரமும் செய்யமுடியாது
  2. இந்த சிங்கள இளையவர் ஒரு இராணுவ புலனாய்வு உறுப்பினராக கூட இருக்கலாம்

1990 முஸ்லீம்களை வெளியேற்ற முதல்.. இந்த மூலை முடுக்கெல்லாம் சென்று.. வண்டியில் பாண் விக்கிறவை சிலரை போராளிகள் கைது செய்தனர்.

அவர்கள் பாண் கொண்டு வந்து விட்டு சென்ற சில மணித்தியாலங்களில் சியாமாசெட்டி வந்து குண்டு போடும். இறுதியில் விசாரணையில் தெரிய வந்தது.. போராளிகளின் முகாம்களின் அமைவிடம் பற்றிய ரகசியங்களை பாண் வியாபாரிகள் என்ற போர்வையில் மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி திரட்டி.. விமானிகளுக்கு வழி காட்டிகளாக மாறி இருந்தமை.

போராளிகள் விமானிகளின் உரையாடலை ஒட்டுக் கேட்டதில் இருந்து இது தெரிய வந்திருந்ததாக அப்போது மக்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் இந்த வண்டி பாண் வியாபாரம் தடை செய்யப்பட்டிருந்தது. காரணம் இதுதான்.

Edited by nedukkalapoovan

எங்கடை பிள்ளைகள் டாக்டர் அல்லது எஞ்ஜினியர்தான் .

உந்த வேலைகள் எல்லாம் மோட்டுசிங்களவனுக்குத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.