Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க முன்னாள் தூதுவர் ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் கூறியுள்ள கருத்துக்களில் புலப்படுவது என்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க முன்னாள் தூதுவர் ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் கூறியுள்ள கருத்துக்களில் புலப்படுவது என்ன?

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக, சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவரான ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் (Teresita Schaffer) எச்சரிக்கை செய்திருக்கின்றார்.

தெற்காசிய கொள்கைகளுக்கான திட்டமிடல் மையமும், அனைத்துலக கற்கையும் (South Asia Programme at the Center for Strategic and International Studies) என்ற அமைப்பின் இயக்குனராக தற்பொழுது திகழும் இவர், தெற்காசியாவின், குறிப்பாக நேபாளம், இலங்கை உட்பட பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவின் பார்வை (US perspective on security in South Asian region with special emphasis on Nepal and Sri Lanka) என்ற தலைப்பில் தமிழ்நாடு சென்னையில் இடம்பெற்ற விவாதத்தில் நேற்று (07-02-2011) கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்கா தமிழீழக் கொள்கைக்கு ஆதரவளிக்கவில்லை எனக்கூறிய அவர், ஆனால் சிறீலங்கா படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப்போர் மிக மோசமாக இருந்தமைக்குரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ராஜபக்ச அரசாங்கம் இன நல்லிணக்கத்தை நேர்மையான முறையில் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், பக்க சார்பான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அது மற்றொரு உள்நாட்டு இனப்பிரச்சினைக்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்தார். இருப்பினும் இன நல்லிணக்கம் தொடர்பில் சிறீலங்கா அரச அதிபரை யாரும் இலகுவில் மனம் மாற்றி விடவோ அன்றி ஒப்பக்கொள்ள வைக்கவோ முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை வரவேற்ற ரெறேசிற்றா ஸ்க்ஹாபர், ஏக காலத்தில் போர்க்குற்றம் பற்றியும் கரிசனை செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தெற்காசியா தொடர்பில் அமெரிக்கா கொண்டிருந்த நிலைப்பாடு கடந்த ஐந்து வருடங்களில் மாறி இருப்பதாகவும், முன்னர் பேர்சியன் வளைகுடாவிலும், யப்பானிலும் அக்கறை கொண்டிருந்த அமெரிக்கா தற்பொழுது இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறி இருக்கின்றமை, ஈழப்போரில் அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்கும் என எண்ண வழி வகுகின்றது.

அமெரிக்க - இந்திய உறவு சீனாவிற்கு எதிரானது அல்ல எனக்கூறிய அவர், ஆனால் இந்த உறவுக்கு சீனாவும் ஒரு காரணம் என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஈழத்தின் இறுதிக்கட்ட வெள்ளைக்கொடி விவகாரத்திலும், அதற்கு முன்னரான கடுமையான போரின்போதும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகள் இணைந்தே முடிவுகளை எடுத்திருப்பதாக தமிழ் மக்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு, ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் கூறியுள்ள கருத்துக்கள் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி தமிழ் மக்களின் வளர்ச்சியடையும் பலம் தொடர்பாக இந்த நாடுகள் கொண்டிருந்த அச்சமும் இங்கே தெளிவாகின்றது.

தமிழ் மக்களின் உரிமைப்போர் தொடர்பாக இவர்கள் கொண்டுள்ள எதிர்மறையான எண்ணக்கருக்கள் பிரதானமாக வெளித்தெரிவதால், இந்த நாடுகளின் அரசாங்கங்கள், மற்றும் அடிமட்ட மக்களின் மனங்களை வெற்றிகொள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னும் எவ்வளவோ தூரம் சலிக்காது பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

http://www.pathivu.com/news/15118/57//d,article_full.aspx

தமிழ் மக்களின் உரிமைப்போர் தொடர்பாக இவர்கள் கொண்டுள்ள எதிர்மறையான எண்ணக்கருக்கள் பிரதானமாக வெளித்தெரிவதால், இந்த நாடுகளின் அரசாங்கங்கள், மற்றும் அடிமட்ட மக்களின் மனங்களை வெற்றிகொள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னும் எவ்வளவோ தூரம் சலிக்காது பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

நாங்களே இந்தசெய்தியை பெரிதாக வாசிக்கவில்லையாம் இந்தலட்சணத்தில் நாம் சார்ந்த நாடுகளின் அரசுக்கும், மக்களுக்கும்....ம்ம்ம்ம்ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தமிழர்களை வைத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தை அச்சுறுத்தி தங்கள்; காலின் கீழ் அடிபணியவைக்கும் ஒரு அந்தரங்கத்தந்திர விளையாட்டுத் தான் அதில் ஏதும் உண்மை இருக்கின்றதா? அங்கேயும் சேர்ந்து ஆடுஆவாம் இங்அகயும் சேர்ந்த ஆடுவோம் நீங்கள் ஈடும் ஆட்டத்தைப் பொறுத்து எங்கள் ஆட்டம் அமையும். நாங்கள் வல்லவர்கள் என்றதை சொல்லாமல் சொல்லிப் புரிய வைக்கும் ஒரு சிறு அச்சுறுத்தல் தான். இதில் தமிழர்களுக்கு ஒரு பருப்பம் கிடையாது என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அல்லது இந்த ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்ப முயல வேண்டும். அப்படித்திருப்பினாலும் அவர்கள் அடிபணிந்துவிட்டால் அங்பே சேர்ந்துவிடுவார்கள். இவர்களுக்குத் தேவையானது ஸ்ரீலங்காவிலிருந்து சீனாவை வெளியேற்றுவது தான். அது வெற்றிபெற்றால் காவல் நாய்க்கு ஒரு கோழிக்கால் கிடைத்தமாதிரித்தான்.

மேற்கூறப்பட்ட விடயம வெற்றிபெறும் வரை போர்க்குற்றம், தமிழர் பிரச்சனை எல்லாம் பக்கத்தரவுகளாகப்பாவிக்கப்படும். உரிமையை வென்றெடுக்க சீனாவை ஸ்ரீலங்காவில் நிரந்தரமாக நிறுத்தும் வேலைகளுக்கு வலுச்சேர்க்கவேண்டும். இதைத்தான் முன்னர் நான் கூறியிருந்தேன் தலைகீழாகச் செயற்படுதல். இவர்களின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுதல். அப்பொழுது தமிழனின் தேவை அதிகமாகத்தேவைப்படும். அந்தத்தேவையை வலுவாக்கம் செய்யும் போது தமிழீழத்திற்குரிய கதவு தானாகத்திறக்கும். இரத்தக்களரி தேவையில்லை. ரேறெசிற்றர் ஒரு கேடி. புலிகளை பயங்கரவாதிகளாக வெளியுலகிற்கு விமரிசிக்க வலுச்சேர்த்தவர். இவர் உண்மையின் பக்கமோ அல்லது நீதியின் பக்கமோ அல்லாது. தங்கள் நடவடிக்கைகளை நியாயம் என்று வாதிடுபவர்கள். அந்த வாதத்திற்குள் எங்கள் உரிமைப்போராட்டம் நியாயம் என்று அவர்கள் வாயில் இருந்து வரவழைக்கவேண்டும். அதற்கான முயற்சிகளைத் தமிழர்கள் செய்யவேண்டும். தலைகீழாகச் செய்ற்படுங்கள். வெற்றி நமதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.