Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவனீதம் பிள்ளையை சந்திக்க சிங்கள அரசின் தூதுக்குழு ஏற்பாடு

Featured Replies

சனிக்கிழமை , பெப்ரவரி 12, 2011

மாத இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொள்ளும் அரசாங்க தூதுக்குழு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.

நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்டுவருகின்ற தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கையின் சார்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தகவல் வெளியிடுகையில், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளன. அதில் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நானும் சட்டமா அதிபரும் மேலும் சில அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளோம். இம்மாதம் 24 ஆம் திகதி நாங்கள் ஜெனிவா பயணமாகவுள்ளோம். இதேவேளை, ஐ.நா. அமர்வில் கலந்துகொள்ளும் எமது தூதுக்குழு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையையும் சந்தித்துப் பேச்சுநடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது நாங்கள் தயாரித்துவருகின்ற மனித உரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.

நாட்டில் மனித உரிமையை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்தின் இறுதி வரைபுக்கு விரைவில் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்று அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான ஆரம்பகட்ட வரைபு தயாரிக்கப்பட்டு சிவில் அமைப்புக்களிடம் வழங்கப்பட்டது. மேலும் அதில் அமுல்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு சட்டமா அதிபர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்து.

அந்தக் குழுவின் ஆலோசனைகள் மற்றும் ஏனைய யோசனைகளையும் அடிப்படையாக வைத்து இறுதி வரைபுத்திட்டம் தயாரிக்கப்படும். அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படுவதுடன் அது நாட்டில் அமுலுக்கு கொண்டுவரப்படும்.

மனித உரிமைகளை ஊக்குவிக்க இவ்வாறு தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் உறுதியளிக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டுவருகின்றோம் என்றார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட உரையாற்றவுள்ளார். சுமார் ஒரு வருடகாலமாக வெளிவிவகார அமைச்சின் கீழ் இருந்த மனித உரிமை பிரிவு தற்போது மீண்டும் மஹிந்த சமரசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மனித உரிமை பேரவை அமர்வில் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றத்தை முன்வைக்க முயற்சிப்பதாக அண்மையில் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.