Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களால் காரைநகரில் அறுக்கப்பட்டு நாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களால் காரைநகரில் அறுக்கப்பட்டு நாசம்

2011-02-14 05:52:16

நேற்றைய தினமும் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டிருப்பதாக அப்பிரதேச மீன்பிடி சமாஜம் அறிவித்துள்ளது.

மீனவர் பிரச்சினை குறித்து இரு தரப்பு மீனவர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைமூலம் தீர்வொன்றை எட்டுவது குறித்த கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகப் பிரதான அதிகாரி மகாலிங்கத்திற்கும், யாழ் மீனவர் கூட்டுறவுச் சங்கங்க ளின் சமாஜப் பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றிருந்தது.

இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் அழைப்பின் பேரிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ். தவரட்ணம் தெரிவித்தார்.

ஆனால் நேற்றய தினமும் அத்துமீறல் நடைபெற்றுள்ளது. இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இலங்கை கடற்படையினர் மற்றும் இந்தியக் கரையோரப் பாதுகாப்புத் தரப்பினரை மீறியும் இவ்வாறான சம்பவங்கள் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது தமக்குப் புரியாதிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்திய மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி மீன்பிடித்துறை அமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர், இவ்விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தவரட்ணம் தெரிவித்தார்.

newjaffna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய-இலங்கை அரச உறவின் சதி வேலைகளில் ஒன்றாக இருக்கலாம்.

இது காலம் காலமாக நடந்து கொண்டுதானிருக்கின்றது. அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் புகுந்து எமது மீனவர்களின் வலைகளை இந்திய றோலர்கள் வெட்டிச் செல்வதும்.இலங்கை கற்படை வெள்ளி பார்ப்பதும் .சுடுவது தப்பென்று சொல்பவர்கள் இலங்கை மீனவர்களுடன் பேசினீர்களானால் உண்மை நிலை விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது காலம் காலமாக நடந்து கொண்டுதானிருக்கின்றது. அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் புகுந்து எமது மீனவர்களின் வலைகளை இந்திய றோலர்கள் வெட்டிச் செல்வதும்.இலங்கை கற்படை வெள்ளி பார்ப்பதும் .சுடுவது தப்பென்று சொல்பவர்கள் இலங்கை மீனவர்களுடன் பேசினீர்களானால் உண்மை நிலை விளங்கும்.

பரவாயில்லையே! நல்லாத் தான் தமிழக- தமிழீழ மீனவர்களுக்கிடையே பிரச்சனையைத் தூண்டி விடுகின்றீர்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது காலம் காலமாக நடந்து கொண்டுதானிருக்கின்றது. அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் புகுந்து எமது மீனவர்களின் வலைகளை இந்திய றோலர்கள் வெட்டிச் செல்வதும்.இலங்கை கற்படை வெள்ளி பார்ப்பதும் .சுடுவது தப்பென்று சொல்பவர்கள் இலங்கை மீனவர்களுடன் பேசினீர்களானால் உண்மை நிலை விளங்கும்.

உலகத்திலேயே ஆக இலங்கையிடம் மட்டும்தான் கடல் இருக்கின்றது.

மீனவர்களும் இலங்கைக்கு மட்டும்தான் இருக்கின்றது.

மீன் பிடித்தொழிலும் இலங்கைக்கு மட்டும்தான் இருக்கின்றது.

ஏன் என்றால் இதுவரையில் உலகில் எங்கும் இந்தப் பிரச்சினை இலங்கையில் எழுந்த போல் எழவில்லையே,

அடுத்தவன் கடல் எல்லைக்குள் நுளைந்தால் உயிரை விடவேண்டும் என்ற நிலைகூட இல்லாத இடங்களில் நிகழாத இந்த மீன்பிடிப் பிரச்சினை இலங்கையில் மட்டும் ஏன்?

மீன்களின் விலையை விட மலிவாகப் போனதா தமிழக மீனவர்களுக்கு தங்கள் உயிர்களின் விலை?

இதுவரை கொல்லப்பட்ட மீனவர்களின் மீதாக இருந்த அநுதாப, பரிதாப நிலையை இல்லாது செய்ய மகிந்தா-சோனியாவின் கள்ள உறவு சித்து விளையாட்டு செய்கின்றது என்றுதான் எதிர்பார்க்க வேண்டி இருக்கின்றது.

தமிழ் செய்திகளிவருவது போல்.. தெற்கு மீனவர்கள் வடக்கு வந்து மீன்பிடிப்பதில்லை.. அதிக வருவாய் தரும் டூனா, சுவார்ட், பில்சார்ட் போன்ற மீன்கள் வடக்கில் இல்லை.... சிங்களவர்கள் வடக்கு வந்து மீன் புடிக்கிறார்கள் என்பது... சிங்களவனை காரணம் காட்டி இந்திய மீனவர்கள் மீன் திருட்டை நியாயப்படுத்த ரோவினல் இயக்கப்படும் எங்சியிருக்கும் தமிழ்குழுக்களினால் கட்டப்பட்ட கதை.. வடக்கில் இருக்கும் பாரை, சூரை போன்றமீன்கள் அனேகமாக தமிழ் மீனவர்களால்தான் புடிக்கப்படுகிறது... தெற்க்கிற்க்கு ஏற்றுமதி செய்பவர்களும் இவர்கள்தான்... இந்த வகை மீன்களைதான் இந்திய மீனவர்கள் நூற்றுக்கனக்கன படகுகளில் வந்து கணக்குவழக்கில்லாமல் சூரையாடிவிட்டுபோவார்கள்.. தென்னிந்திய கடற்பரப்பில் மீன்வகைகள் அழிந்து போய்விட்டதுக்கு இந்த கட்டுபாடற்ற மீன்புடித்தல்தான் காரணம்.. இப்போது புலி இல்லை. சிங்களவன் இந்த மாதிரி சட்டி வழிச்சான் கூட்டங்களை அனுமத்திக்கப்போவத்தில்லை. இவை வழிச்சு வழிச்சு மீன் புடிப்பதும் தங்களுக்கில்லை.. ஏற்றுமதிக்கே.. வரும் வருவாயும் கோடீஸ்வர படகுதலைகளுக்கேதவிர.. நாள்சம்பள மீனவர்களுக்கல்ல...... அதுக்காக மீனவர்களை கொல்வது சரியில்லை, தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையும் வன்முறையை கை விட்டு விட்டு பேச்சுவார்த்தை மூலமாக இதுக்கு ஒரு முடிவு காணவேண்டும்..

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்கு வராமலிருந்தால் பயன் பெறுவது இலங்கை தமிழர்களே......

Edited by Panangkai

இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போது கண்ணீர் வடிப்பவர்கள், அதற்கு இன்னொரு பக்கமும் உண்டென்பதை விளங்கிக் கொள்வதில்லை.

உலகத்திலேயே ஆக இலங்கையிடம் மட்டும்தான் கடல் இருக்கின்றது.

மீனவர்களும் இலங்கைக்கு மட்டும்தான் இருக்கின்றது.

மீன் பிடித்தொழிலும் இலங்கைக்கு மட்டும்தான் இருக்கின்றது.

ஏன் என்றால் இதுவரையில் உலகில் எங்கும் இந்தப் பிரச்சினை இலங்கையில் எழுந்த போல் எழவில்லையே,

அடுத்தவன் கடல் எல்லைக்குள் நுளைந்தால் உயிரை விடவேண்டும் என்ற நிலைகூட இல்லாத இடங்களில் நிகழாத இந்த மீன்பிடிப் பிரச்சினை இலங்கையில் மட்டும் ஏன்?

மீன்களின் விலையை விட மலிவாகப் போனதா தமிழக மீனவர்களுக்கு தங்கள் உயிர்களின் விலை?

இதுவரை கொல்லப்பட்ட மீனவர்களின் மீதாக இருந்த அநுதாப, பரிதாப நிலையை இல்லாது செய்ய மகிந்தா-சோனியாவின் கள்ள உறவு சித்து விளையாட்டு செய்கின்றது என்றுதான் எதிர்பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஐயா ஒருதடவை மயிலிட்டிக்கோ குரு நகருக்கோ நெடுந்தீவுக்கோ போய் மீனவவர்களின் பரிதாபத்தைக் கேளுங்கோ இங்க இருந்து கொண்டு பீத்தாமல்.

பரவாயில்லையே! நல்லாத் தான் தமிழக- தமிழீழ மீனவர்களுக்கிடையே பிரச்சனையைத் தூண்டி விடுகின்றீர்கள்!!

நீங்கள் கடைசியாக வடக்கில் மீனவர்களுடன் பேசியது எப்போ. பித்தலாட்டமெல்லாம் வேண்டாம் உண்மையை சொல்லுங்கள்.

இது தமிழின விரோத இந்திய - சிங்கள அரச பயங்கரவாதிகளின் சதிவேலையாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.