Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது கவலையளிக்கிறது

Featured Replies

புது தில்லி, பிப்.16:

சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது சிறிது கவலையளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். இதனால் இந்தியாவும் தனது ஒருங்கிணைந்த படை பலத்தை மறு ஆய்வு செய்து, எத்தகைய சவாலையும் சந்திக்கும் அளவுக்கு கண்காணிப்போடு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது:

ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

எல்லையில் சீன ராணுவம் ஏவுகணைகளை நிறுத்தியவுடன் அதற்குப் பதிலடியாக இந்தியாவும் எல்லைப் பகுதியில் சாலையை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கியது. அத்துடன் இப்பகுதியில் விமானப் படைக்கான வசதியையும் அதிகரித்தது. இப்பகுதியில் எஸ்யு-30 எம்கேஐ ரக விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மலைப் பகுதியில் இரண்டு ராணுவப் பிரிவு காவலுக்கு நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தினரின் பணியை ஆய்வு செய்வது அதில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. உரிய இடைவெளியில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. காவல் பணியில் எங்கெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அவை உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன.

சீனாவுடன் ஒப்பிடுகையில், ராணுவ நவீனமயமாக்கலில் இந்தியா பின்தங்கியுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அந்தோனி, எந்த ஒரு நாட்டையும் மனதில் கொண்டு ராணுவத்தை நவீனமயமாக்கும் பணியை இந்தியா மேற்கொண்டதில்லை. ஒருங்கிணைந்த மறு ஆய்வின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாகத்தான் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அவ்வப்போது எழும் சூழ்நிலையின் அடிப்படையிலும் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து மலபார் பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் இத்தகைய கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை. கடற்படையின் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் இது நடத்தப்படுவதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் பொதுவான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயலாற்ற விரும்புகிறது. குறிப்பாக பருவ நிலை மாற்றம், வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளிடையிலான எல்லை பிரச்னையை

பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றார் அந்தோனி.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=377599&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:%20%E0%AE%8F.%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF

சில பின்னூட்டங்கள்:

"அவன் அவன் இராணுவத்தை அவன் அவன் வலுப்படுத்துவதில் என்ன தவறு. இராசயனக்குண்டு இல்லாதவன் மேலே இராசயனக்குண்டு போடலாம். ஏனென்றால் அவனிடம் இல்லை. அனால் இங்கே அப்படி ஏதும் செய்ய முடியாது கவலையோ. வினை விதைத்தவன் வினை அறுப்பான். திணை விதைத்தவன் திணை அறுப்பான். நீங்கள் விதைத்தது வினை."

"சீனாவில் மக்கள் வரிபணத்தை மக்கள் நன்மைக்க்க்ஹா செலவிடுகிறார்கள். ஆனால் உங்கள் கட்சி ஊழல் செய்பவர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு மக்கள் வரிப்பணத்தை சுரண்டிக்கொண்டு செல்கிறீர்கள். அதனால்தான் சீன முன்னேறுகிறது நீங்கள் அவர்களைப்பர்த்து பயபடுகிரீர்கள். ஐயா அந்தோனியார் அவர்களே, முதலில் சுரண்டிய பணத்தையெல்லாம் உங்கள் கட்சியும் கூட்டு கட்சியும் அரசு கஜானாவில் சேருங்கள். அப்பறம் பாருங்கள் நமது கவர்ன்மென்ட் எப்படி மொதேர்நிசே ஆக்கும் நமது மிளிடரியை. சுரண்டுவதை நீங்களும் உங்கள் திருட்டு கூட்டாளிகளும் முதலில் நிறுத்துங்கள் . அங்களிடமிருந்து வருமானவரித்துறை மூலமாக வசூல் செய்கிறீர்கள் அனால் எங்களுக்கு திருப்பி கொடுக்கப்படவேண்டிய வரியை கேட்டல் வருமானவரி துறை பணம் இல்லை என்கிறது. சிறு சிறு அமௌன்ட் திருப்பி கொடுப்பதற்கு கூட பணம் இல்லை உங்களிடம். ஏனென்றால் மொத்தமாக ஆ ராசா ஆப்பு அடித்துவிட்டான்."

சீனா அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் உலகில் முதன்மையான வல்லரசு , பொருளாதாரத்தில் 5வருடம் போதுமென நினைக்கின்றேன் அமெரிக்காவை பின் தள்ளுவதற்கு. அதன் பின் எல்லாமே சீனாதான், இந்தியாவெல்லாம் ஜுஜுபியாகிவிடும்.(போர்கள் ஏற்படாதபட்சத்தில்)

நல்ல செய்தி. தெற்காசிய பயங்கரவாதிகளை அழிக்க பலமான சீன இராணுவம் வேண்டும்.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.