Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக-ஈழ மீனவர்களிடையே பகைமூட்ட முயற்சி

Featured Replies

தமிழக-ஈழ மீனவர்களிடையே பகைமூட்ட முயற்சி:சீமான்

சென்னை, பிப்.18,2011

தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் மத்தியில் பகையை தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும், இந்தியா மறைமுகமாகவும் செய்துவருகின்றன என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 106 பேரை பலவந்தமாகவும் சட்ட விரோதமாகவும் சிறைபிடித்துச் சென்று பருத்தித் துறை நீதிமன்றத்தில் நிறுத்தி 15 நாட்கள் சிறையிலடைத்திருக்கிறது சிங்கள அரசு.

இந்நிலையில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மேலும் 26 மீனவர்களைப் பிடித்துச் சென்று இளவாலை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். ஆக மொத்தம் பேரினவாத இராணுவத்திடம் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 132.

அத்தோடு சிங்கள கடற்படையால், பெட்ரோல் குண்டுவீசி எரிக்கப்பட்ட மீனவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். இவர்களை இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் கைது செய்து போலீசிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் மத்தியில் பகையை தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும், இந்தியா மறைமுகமாகவும் செய்துவருகின்றன. பிரச்னை இருதரப்பு மீனவர்களிடமில்லை. இரு அரசுகளிடமே உள்ளது. அவர்கள் ஈழத் தமிழ் மீனவர்களா அல்லது சட்டவிரோத கூலிப்படையினரா என்ற கேள்விக்கு போருக்குப் பின்னர் சட்டவிரோத கூலிப்படைகளை தமிழக மீனவர்கள் மீது ஏவுதாக மீனவ மக்கள் அச்சத்தோடு தெரிவிக்கிறார்கள்.

கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை ராணுவ நிழலில் வைத்து அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்று அதையே எமது மீனவர்களுக்கு எதிராகத் திருப்புகிற பச்சோந்தித் தனத்தை கண்டிக்கவோ, தட்டிக் கேட்கவோ மத்திய மாநில அரசுகள் தயாராக இல்லை.

இலங்கைக் கடற்படையால் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்றுவரை கொலைகள் நின்றபாடில்லை. இப்போது கூட்டம் கூட்டமாக எமது மீனவர்களைக் கடத்தவும் தொடங்கி விட்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தங்களின் அரசியல் தோல்விக்கு இதுவும் ஒரு அச்சாரமாக ஆகி விடுமோ என்ற அச்சத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் ஆளும் திமுகவும் வெகுவேகமாக மீனவர் படுகொலை தொடர்பாக நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசோ நிருபமா ராவ் போன்ற அதிகாரிகளை அனுப்பி இலங்கையை கண்டிப்பதாக நாடகம் ஆடுகிறது. கருணாநிதியோ கடிதமாக எழுதி நாடகம் நடத்தி வந்த நிலையில், தேர்தல் நெருங்குவதால் திமுகவினர், இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் சம்பிரதாயப் போராட்டத்தை நடத்தி போலீசாரின் சர்வ மரியாதையோடு ஆர்ப்பாட்டத்தை நடத்தி காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எப்போதெல்லாம் கருணாநிதிக்கு எதிராக தமிழ் மக்களின் கோபங்கள் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் அபத்த நாடக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது கருணாநிதிக்கு வாடிக்கைதான்.

ஈழ மக்கள் மீதான படுகொலைகளின் போது இரண்டரை மணி நேர உண்ணாவிரதம் இருந்து விட்டு போரே நின்று விட்டது என்று எழுந்து சென்ற கருணாநிதியின் நாடகத்தை தமிழ் மக்கள் மறந்து விடவில்லை.

இந்தப் பிரச்னையில் பிரச்னைக்கு காரணமான, பிரச்னையைத் தீர்க்க வேண்டிய காங்கிரசும், திமுகவும் போராடுவது கேலிக்கூத்தின் உச்சம். இன்னும் ராஜபக்ஷே மட்டும் தான் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படும் பிரச்னையில் தனக்கு எதிராகத் தானே போராடும் கொடுமையைத் தமிழக மக்கள் பார்க்கவில்லை.

நிருபமாவின் இலங்கைப் பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது இப்போது உறுதியாகி விட்டது. இந்தக் கொலைகள் மற்றும் கடத்தலில் இந்திய அரசுக்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகம் மீனவ மக்களிடையே பரவி வருகிறது. அந்தப் பகுதியில் மீனவ மக்கள் வாழ்வதற்கும் தொழில் செய்யவும் இந்தியா விரும்பவில்லையோ என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள்.

தமிழர்களின் கடல்வளத்தை தமிழர்களிடமிருந்து பிடுங்குகிற முயற்சியை சிங்கள அரசும், இந்திய அரசும் இணைந்து மேற்கொள்வதாகவே இதைக் கருதவேண்டியிருக்கிறது. இந்தியாவை சுற்றியுள்ள கடற்பரப்புகளில், தமிழர்கள் பிழைப்புநடத்தும் கடற்பரப்பில் மட்டுமே இந்த அடாவடிகள் தொடர்கின்றன. இத்தனைக்கும், அடுத்த வீட்டுக்கு போய்வருவதுபோல், இந்திய அதிகாரிகள் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லி பயணம் போய்வரும் நிலையில் இந்த அடாவடிகள் தொடர்கின்றன.

ஆக, இனியும் இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலையில், தமிழர்களின் கடல்வளம் திட்டமிட்டு இந்திய, சிங்கள அரசுகளால் தமிழர்களிடமிருந்து பறிக்கப்படும் சதிக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அந்த ஒற்றுமையும், போராட்டமுமே, சிங்கள அரசின் மீனவர் படுகொலைகளை மட்டுமல்ல, தமிழரின் கடல்வளம் பறிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும்," என்று சீமான் கூறியுள்ளார்.

http://vikatan.com/news.php?nid=1135

சீமானுக்கு விளங்கியது - ஏனையோருக்கு விளங்காதது ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.