Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு எதிராக இன்னொரு யுத்தம்!! இராணுவ தளபதி அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக இன்னொரு யுத்தம்!! இராணுவ தளபதி அச்சம்

செவ்வாய், 22 பெப்ரவரி 2011 22:56

"இலங்கை மீது எதிரிகளால் மீண்டும் ஒரு யுத்தம் எந்நேரமும் தொடுக்கப்படலாம்.' கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற Cyber Warfare - 2011மாநாட்டில் கலந்து கொண்டு நீண்ட உரை ஒன்றை ஆற்றியபோது இவ்வாறு தெரிவித்து உள்ளார் இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய.

இலங்கை அரசுக்கு எதிராக இணையத் தள பிரசார நடவடிக்கைகளையே இவர் இவ்வாறு வர்ணித்தார்.

இவர் இவ்வுரையில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு:-

உலகம் பூராவும் உள்ள புலி ஆதரவு சக்திகள் மற்றும் இலங்கைப் படையினருக்கு எதிரான சக்திகள் ஆகியவற்றின் இணையத் தள பிரசார யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய பேராபத்தில் இலங்கை உள்ளது.

இந்த இணையத் தள பிரசார யுத்தத்தால் இலங்கை எந்நேரமும் தாக்கப்படலாம். புலி ஆதரவு இணையத் தளங்கள் ஏராளமானவை பல்லாயிரக்கணக்கான பொய்ப் பிரசாரங்களை இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றன.

பல இலட்சக் கணக்கான மக்கள் அப்பிரசாரங்களை நம்பி இலங்கை மீது காழ்ப்புணர்வு அடைய கூடும். இலங்கை மீது எவரும் இராணுவ தாக்குதல்களை நடத்த முடியாது என்கிற உத்தரவாதத்தை என்னால் தர முடியும்.

அவர்களால் யுத்த களத்தில் சண்டையிட முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை எதிரிகளாக எமக்கு கடந்த 30 வருடங்களாக யுத்த களத்தில் தெரியும்.

ஆனால் இலங்கைக்கு எதிராக இணையத் தள தாக்குதல்களை முடுக்கி விடக் கூடிய எதிரிகள் யார்? என்பது கண்களுக்கு தெரியாமலேயே உள்ளது.

இவர்கள் புலிகளை விட எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருக்கக் கூடும். இவர்கள் யார்? இவர்களின் தாக்குதல் இலக்குகள் எவை என்பவற்றை ஒரு போதும் அறிந்து விட முடியாது.

இத்தாக்குதலில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டியமை அரச படையினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரதும் கடமையும், பொறுப்பும் ஆகும்.

tamilcnn

இருக்கக் கூடும், செய்யக் கூடும் ,நடக்கக் கூடும் இப்படியே சாத்திர காரன் மாதிரி.

இன்று மத்திய கிழக்கு, வாடா ஆபிரிக்கா நாடுகளில் நடந்த / நடக்கும் மக்கள் எழுச்சிகள்/போராட்டங்கள் இந்த பீதியை சிங்களத்திற்கு ஏற்படுத்தி உள்ளது. அதாவது எந்த இலட்சியத்திற்காக தமிழர் தரப்பு போரடிவருகின்றதோ அந்த தேவை இன்னும் உள்ளது. இந்த உண்மையுடன், அதிகரிக்கும் விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம் என்பனவும் இணைந்து ஒரு போராட்டமாக மாறலாம்.

- நாங்களும் முடிந்தால் முகநூல் (பேஸ்புக்), ட்விட்டர் மூலம் சிங்களம் செய்யும் அடக்குமுறைகளை வெளியில் கொண்டுவரல் வேண்டும்.

- மகிந்தரை, கடாபி - முபாரக் போன்ற கொடுங்கோலாளர்களுடன் இணைத்து உலகில் செய்திகளை இணைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.