Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளி விழாவுக்கு படைத் தரப்பை அழைத்தது ஏன்? உதயன் பத்திரிகை விளக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி விழாவுக்கு படைத் தரப்பை அழைத்தது ஏன்? உதயன் பத்திரிகை விளக்கம்!

வியாழன், 24 பெப்ரவரி 2011 22:38 .உதயன் பத்திரிகையின் வெள்ளி விழாவுக்கு படைத் தரப்பை அழைத்தமைக்கு புலம்பெயர் தமிழ் ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்து உள்ளது அப்பத்திரிகை.

இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

அறிக்கையை அப்படியே பிரசுரிக்கின்றோம்.

"உதயன் அதன் இருபத்தைந்தாவது நிறைவு விழாவைக் கொண்டாடி பூரிப்புடன் ஊடகப் பயணத்தில் முன்னோக்கி செல்லும் நேரிய பணியில் நிமிர்ந்து நிற்கிறது.

நெருக்கடிகள் மேல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த போதிலும் உதயன் தொடர்ந்தும் தேசியத்தின் குரலாக திடசங்கற்பத்துடன் நடை பயின்று வந்தது. இன்னும் நடை பயிலும்.

எனினும் இவ்விழாத் தொடர்பாக புலம்பெயர் இணையத் தளங்களில் வெளிவந்த விமர்சனங்களையும், கண்டனங்களையும் உதயன் அக்கறையுடனும் பொறுப்புடனும் கவனத்தில் எடுக்கின்றது.

தமிழ் தேசியத்துக்காகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் பற்றுதியுடன் செயற்படும் இந்த இணையத் தளங்களுக்கு உதயனை விமர்சிக்கவோ, கண்டிக்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ பூரண உரிமை உண்டு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றோம்.

அவைகளால் விமர்சிக்கப்பட்ட விடயங்களை மறந்து அவற்றை நியாயப்படுத்த நாம் இங்கு முயலவில்லை. அப்படியான சம்பவங்களை மேற்கொள்ளப்பட்டமைக்கான சில தவிர்க்க முடியாத காரணங்கள் தொடர்பாக சில விளக்கங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அன்னை பார்வதியம்மாளின் மரணச்செய்தி எங்களை வந்தடைந்தபோது விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுவிட்டன. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற தொலைதூரங்களிலிருந்தும் கூட ஊடகவியலாளர்களும், ஆதரவாளர்களும் வந்து சேர்ந்து விட்டனர்.

ஏற்கனவே இவ்விழா கடந்த ஜனவரி 22ஆம் திகதி இடம்பெற இருந்து சில கெடுபிடிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. எல்லாத் தயாரிப்புக்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் விழாவை மீண்டும் ஒரு முறை ஒத்தி வைக்கின்றமை நியாயமற்றதாகவே தென்பட்டது.

அதுமட்டுமன்றி இறுதிச் சடங்குகள் வேறு நாளில்இடம்பெறுவதால்அன்று விழாவை நடத்துகின்றமையில் பாதகம் எதுவுமில்லை என நம்பினோம்.

எனவே நாம் அன்னையைக் கௌரவிக்கவில்லை என்றோ, அவரின் மறைவுக்கு மனம் வருந்தவில்லையென்றோ தயவு செய்து எண்ணி விட வேண்டாம் என அன்புடன் வேண்டுகின்றோம்.

கடந்த காலங்களில் உதயன் பத்திரிகை பலமுறை தாக்கப்பட்டு பெரும் சேதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. பல பணியாளர்கள் எமது வேலைத் தளத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயப்படுத்தப்பட்டனர். எமது பிரதம ஆசிரியர் படுகொலை செய்யப்படுகின்றமையில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பி படுகாயப்படுத்தப்பட்டார். விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள்கூட மிரட்டப்பட்டிருக்கின்றனர். இவை அனைத்தும் இனம் தெரியாதவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன.

இவர்கள் யார்? என்பதை மக்கள் அறிந்து இருந்தாலும் பொலிஸாரோ, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களோ இனங்கண்டு நடவடிக்கை எடுக்கின்றமையில் சிரத்தை கொள்ளவில்லை.

இன்றும் இந்த இனம் தெரியாதவர்கள் யாழ். குடாநாட்டில் கொலை, கொள்ளை உட்பட பல வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

25 வருடங்களை நிறைவு செய்து பெருவிழா எடுத்தமை மட்டுமன்றி ஊடக வரலாற்றிலேயே ஒரு முன்னுதாரணமாக ஆசிரிய பீடத்தினர், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், விநியோகஸ்தர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் என இப்பணியுடன் தொடர்புடைய அனைவரையும் விருது வழங்கி கௌரவித்தோம்.

இப்படியான ஒரு நிலையில் விழாவில் இனம் புரியாதவர்களால் சில அசம்பாவிதங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று கடந்த கால அனுபவங்கள் எமக்கு நினைவூட்டின. இதில் உயிர்கள் பலவும் கொல்லப்படவும் கூடும்.

ஒரு சில குறிப்பிட்ட நபர்களை அழைக்கின்றமையும்,அதை வெளியில் பிரசாரம் செய்கின்றமையும் இவ்விழாவை இந்த இனம் புரியாதவர்களிடம் இருந்து பாதுகாக்கும் என நம்பினோம்.

ஊடகம் சம்பந்தப்படாத எவரும் இங்கு உரையாற்றி கருத்துக்களைத் திணிக்க நாம் மேடை அமைத்து இருக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

நீட்டப்பட்ட துப்பாக்கிகள் நடுவிலும் ஊடக பணியாற்றும் எமது பணியை நேர்மையாகவும், இடையறாமலும் செய்ய சில ஆபத்தற்ற விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றோம் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.

எமது நேர்மையான துணிச்சலான பணியைப் பாராட்டிய அ தேசமயம் எமது குறைபாடுகளை சுட்டிக் காட்டியமைக்கும் எம்மேல் காட்டிய அன்புக்கும், அக்கறையுடன் கூடிய விமர்சனத்துக்கும் எமது நன்றிகள்.

கள நிலைமைகளைக் கருத்தில் எடுத்து இனம் புரியாதவர்களால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கின்றமைக்கு சமயோசித முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை புலம் பெயர்ந்த அன்பு உள்ளங்கள் மறக்கமாட்டீர்கள் என நாம் நன்கு அறிவோம்."

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=18760:2011-02-24-17-39-35&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.