Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் பெரும்போர் ஆரம்பம் - புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பழைய மாணவர்கள்

Featured Replies

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான 3 நாள் கொண்ட கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் கூட பழைய மாணவர்கள் படையெடுத்து வந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது. இது 105 வது வடக்கின் பெரும் போராகும். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி சென்ஜோன்ஸ் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் 118 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் சென்ஜோன்ஸ் கல்லூரி இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 2வது இனிங்சில் மீண்டும் சென்ஜோன்ஸ் கல்லூரி 13 ஓட்டங்களுடன் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் என இரு நாட்களுக்கு இந்த ஆட்டம் தொடரும்.

யாழ் நகரப் பகுதியில் இடம்பெறும் இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

globaltamilnews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிய எழும்ப மேட்ச் முடிஞ்சிடும் போல இருக்கு... :unsure::rolleyes:

"மன நிறைவான வாழ்த்துக்களை இரு அணிகளுக்கும் தெரிவிக்கிறேன். இரசித்து இன்புறத்தக்க விளையாட்டை வழங்குமாறு கேட்டுக்கிறேன்" -முன்னாள் அதிபர் ராசரட்ணம்..அதிபர் மத்திய கல்லூரி 1990

மத்திய கல்லூரி ஒரு பலமற்ற அணி என்று தெரிந்தும், பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்லுவதற்காக, 1990 ஆண்டு பிக் மேட்ச்ஐ மீள ஆரம்பித்து வைத்தவர்..1986 இல் இருந்து 1989 போட்டிகள் நடைபெறவில்லை.. மத்திய கல்லூரி மைதானம் பாவனையில் இல்லாதபடியால்.. பலமுறை தூதுவிட்டும் பரியோவான்கள் தங்கள் மைதானத்தில் போட்டி நடைபெற அனுமதிக்கவில்லை ...அந்த போட்டியின் போதும் அவர் தெரிவித்த பகுதி ஒன்று .."என்றோ ஒருநாள் நடத்த அசம்பாவிதர்ற்காய் பரியோவானில் போட்டிகளை நாடத்தாது தவிற்காது இனி வரும் காலங்களில் ஆவது போட்டியை இரு பாடசாலைகளும் நடாத்த இருபகுதியினரும் முன்வர வேண்டும்"..

முடிவாக

"விளையாடு சென்ரல் ஓய்ந்து விடாது நிறைவெய்தாது நேற்றைய வெற்றி"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொரு இணைப்பில் பார்த்தேன் லிமிடெட் ஓவர்ஸ் மேட்ச் இந்த முறை பரியோவான் கலூரியில் நடப்பதாக. வாழ்த்துக்கள்..என்ன நாங்கள்/ நான் நினைப்பதை விட உலகம் வேகமாக சிந்திக்கிறது...எனக்கு இன்னுமொரு ஆசை, பற்றிக்சயும் சென்றலையும், சென்யோன்சையும் சேர்த்து ஒரு புட்பால் மேட்ச் தொடங்க வேண்டும்..அதே போல சென்டல், சென்ஜோன், வட்டுகோட்டை யாழ்ப்பான கல்லூரி சேர்த்து பாஸ்கட் பால் :blink::D

Edited by Volcano

  • தொடங்கியவர்

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 105 ஆவது மாபெரும் துடுப்பாட்டப் போட்டியின் 2ஆம் நாளான இன்று வழமைக்கு மாறாக பொலிசாரின் கெடுபிடி அதிகமாகவே காணப்பட்டது.

யாழ். மத்திய கல்லூரியில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற போட்டியில் இரு அணி ஆதரவாளர்களும் அணிகளுக்கு உற்சாகத்தை வழங்கினர். இன்றைய தினம் வழமைக்கு மாறாக அதிகளவான போலீசார் கடமையில் ஈடுபடுத்த பட்டு இருந்தனர்.

போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த நேரம் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது இதனை தொடர்ந்து பொலிசார் மாணவர்களை தாக்கியதுடன் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இசம்பவதை ஆட்சேபித்து சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆதரவாளர்கள் போட்டியினை புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர் இச் சம்பவத்தினால் மாணவர்கள் மத்தியில் சிறிது நேரம் குழப்பம் ஏட்பட்டதாக மணவர் தரப்பில் இருந்து தெரிய வருகிறது.

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி!

சென்றால் , சென் .ஜோன்ஸ் பாடசாலை அணிகளுக்கு வாழ்த்துக்கள்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உதயன்

வடக்கின் பெரும் போர் :ஐந்தாவது தடைவையாக சென்றல் சம்பியன்

சுரேஸ் மற்றும் நாவண்ணன்

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லாரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான மாபெரும் துடுப்பாட்டப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது யாழ். மத்திய கல்லூரி அணி.

வருடா வருடம் இடம்பெற்று வரும் வடக்கின் பெரும் போரின் 105 வது போட்டி கடந்த 10 ஆம் திகதி முதல் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது இறுதி நாளான இன்று 12ம் திகதி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியிலும் இரு அணிகளும் வெற்றி தமக்கே என்ற துடிப்புடன் களமிறங்கிய போதிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இரண்டு விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது தடவையாகவும் கிண்ணத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

கடைசியாக களத்திலிருந்த இரண்டு இலக்கினையும் 6 ஓட்டங்களுக்குள் கைப்பற்றினால் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி பெறும் என்ற சிக்கலான நிலையுடன் 2 நாள் ஆட்டம் நேற்று நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் -

06 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் யாழ்.மத்திய கல்லூரி துடுப்பெடுத்தாட, இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி வெற்றி இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் சென்ஜோன்ஸ் கல்லாரியினர் களத்தடுப்பிலும் ஈடுபட்டனர்.

சென்.ஜோன்ஸ் கல்லூரியின் களத்தடுப்பு மிக நெருக்கமாகவும் தீவிரமாகவும் இருந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரன் டர்வின் சென்ஜோன்ஸ் கல்லூரி வீரன் சத்தியேந்திரன் வீசிய பந்தை தடுத்து விளையாடி முதல் ஓவரில் ஒரு ஓட்டத்தை மட்டும் பெற்றார். தங்களது வெற்றிக்காக மிக கவனமாக களத்தடுப்புக்களை தலைவர் தெரிவு செய்தார் .ஆனால் இரண்டாவது ஓவரை சஞ்சிவன் வீச மத்திய கல்லூரி வீரன் டார்வின் மிக திறமையாகவும் நிதானமாகவும் லோங் ஒன் திசையில் அடித்து 4 ஓட்டங்கனைப் பெற்று மத்தியகல்லூரியினது வெற்றியை உறுதிப்படுத்தினார். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி என்ற நிலையில் மூன்றாவது ஓவர் ஹரிவதனனினால் வீசப்பட்டபோது மூன்றாது பந்தை பில்சன் ஓங்கி அடித்து ஒரு நான்கைப் பெற ஆட்டம் முடிவடைந்தது.யாழ்.மத்திய கல்லூரி தனது தொடர் வெற்றியைத் தீர்மானித்து 5வது தடைவையாக தொடர்ந்து கிண்ணத்தைப் பெற்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.

மத்திய கல்லாரியைச் சேர்ந்த ஜெறிக் துசாந் ஆட்டநாயகனாகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் விருதுகளைப் பெற்றுக்கொண்டார். எட்வேட் எடின் சிறந்த துடுப்பட்ட வீரராகவும். யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ரஜிதன் சிறந்த களத்தடுப்பாளராகவும் சகல துறை வீரனாக டக்சனும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லாரி அணிக்க ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.