Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமசாமி பிராபாகரன் UNல் முறைப்பாடு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 மார்ச் 2011

பிராபாகரன் UNல் முறைப்பாடு:- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

காட்டு மிராண்டித்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு பொய்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளளேன்

நான் காட்டுமிராண்டித்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளேன் - பொய்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளளேன்:- பிராபாகரன் ல் முறைப்பாடு:-

நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் வர்த்தகர் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தாலும் புலனாய்வுத் துறையினராலும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்கு எதிராகவும் தன் மீதான சித்திரவதைக்கு எதிராகவும் நீதி கோரி ஐநாவிடம் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கூறி இலங்கையின் புலனாய்வுப் பொலிஸாரால் தான் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது கடும் சித்திரவதைகளை எதிர்கொண்டதாக கொழும்பு நியூ மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரபல்யமான தமிழ் வர்த்தகர் ஒருவர் ஜெனிவாவிலுள்ள ஐநாவின் மனித உரிமைக் காரியாலயத்துக்கு தனது முறைப்பாட்டை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஐநாவிடம் நீதி கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் இலங்கையின் இடதுசாரிக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

எனது பெயர் ராமசாமி பிரபாகரன். கடந்த ஐந்து மாதங்களாக கொழும்பு நியூ மகஜின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன். நான் கைது செய்யப்பட்ட போது அங்கீகாரம் பெற்ற ஒரு வர்த்தகராக இருந்தேன். எனது அடிப்படை உரிமைகள் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தினாலும் புலனாய்வுப் பொலிஸாராலும் மீறப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தினால் நான் வலுக்கட்டாயமாக மரணத்திற்கு வழி கோலுகிற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். அதிலிருந்து என்னைக் காப்பாற்றுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பலவந்தமாக என்மீது சுமத்தப்பட்டிருக்கிற குற்றச்சாட்டுக்களிலிருந்து என்னை விடுவிப்பதற்கும், அநீதியான இந்த நிலைமையிலிருந்து எனது பாதுகாப்பான விடுதலைக்கும் எனக்கு உதவுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனது வர்த்தகம் தொடர்பான விபரங்கள், சட்டத்துக்குப் புறம்பான தடுத்து வைப்பு, மிருகத்தன்மையான தாக்குதல், குரூரத்தனமான மனிதாபிமானமற்ற கீழ்த்தரமான சித்திரவதை, உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை, தடுத்து வைக்கப்ப்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், என்மீது சுமத்தப்பட்ட என்னை இடருக்குள் தள்ளிவிடக்கூடிய பொய்க் குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை இத்துடன் இணைத்துள்ளேன். தங்களுடைய அவதானமான பார்வையை வேண்டி.

நான் கொழும்பிலுள்ள பனாமா ரேடர்ஸ் என்கிற இலத்திரனியல் விற்பனை நிலையத்தின் உரிமையாளர். இது 1983இல் ஸ்தாபிக்கப்பட்டது. சொனி, சம்சுங், பனசோனிக், அப்பிள், பிளக் அன்ட் டெக்கர் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஏஜென்டாகவும் மிகப் பிரபல்யமான காட்சி அறையாகவும் இது இருந்து வருகிறது. வருடாந்தம் 180 மில்லியனுக்கு மேற்பட்ட பணப் புரள்வைக் கொண்டிருந்தது. இது தவிர கொழும்பு சுவிமிங் கிளப், ஒற்றேர்ஸ் அக்குவான்ரிக் கிளப், கொழும்பு கோல்ப் கிளப், சிங்களீஸ் ஸ்போற்ஸ் கிளப் போன்றவற்றில் அங்கத்தினராக இருக்கிறேன். எனது வர்த்தக நோக்கங்களிற்காக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்து வந்திருக்கிறேன். அதுமட்டுமன்றி விடுமுறைக்காகவும் நான் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் மலேசியா, தாய்லாந்து, ஹொங்கொங், அவுஸ்ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்குப் பிரயாணம் செய்துள்ளேன்.

நான் வர்த்தகராகச் செயற்பட்ட போது நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு நான் பல கடிதங்களை எழுதி இருக்கிறேன். பல அப்பாவி உயிர்களைப் பறிக்கக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளைக் கைது செய்வதற்கான பல தகவல்களை நான் இராணுவ உயரதிகாரிகளுக்கு வழங்கி இருக்கிறேன்.

என்னுடைய மருத்துவ அறிக்கை தற்போது எனது அடிப்படை மீறல் மீதான மனுவுக்காக உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதியை அடுத்த அஞ்சலில் உங்களுக்கு அனுப்புகிறேன்.

கடந்த மே 19ஆம் திகதியிலிருந்து எவ்விதக்குற்றச்சாட்டுமின்றி 15 மாதங்களுக்கு மேலாக நான் சட்டத்திற்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். 12 மே 2010இல் நான் பொரளையிலுள்ள மகஸீன் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன்.

நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மிக மோசமான கீழ்த்தரமான மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டி நேர்ந்தது. நாள் முழுவதுமே நான் தலைகீழாகக்கட்டித் தொங்கவிடப்பட்டேன். அப்போது மரக்கட்டைகளால் மோசமாகத் தாக்கப்பட்டேன். எனது நகங்கள் பிடுங்கப்பட்டன. இந்தச்சித்திரவதைகளுக்குப் பின்னர் நிலத்தில் கொட்டியிருந்த குருதியை நாக்கினால் நக்கிச் சுத்தப்படுத்தப் பணிக்கப்பட்டேன். இந்த நிலைமை நான்கு மாதங்களுக்கு நீடித்தது. தற்போது நான் சித்திரவதைகளுக்குப் பின்னான உடல் உபாதைகளால் மிகவும் சிரமப்படுகிறேன். மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது என்னைப் பரிசோதித்த வைத்தியர் எனது நிலைமை கண்டு அதிர்ந்து போனார். எனது உடல் முழுவதையும் பரிசோதித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் கடந்த 15 வருடத்தில் தாம் கண்ட மோசமான சித்திரவதை இது எனத் தெரிவித்தனர்.

நான் சரணடைவதற்கு முன்னதாக இந்தியாவில் இருந்தேன். தொண்டையில் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். என் மீதான குற்றச்சாட்டுக்களைக் கேள்விப்பட்டு நான் உடனடியாகவே இலங்கை வந்தேன். அந்த சத்திரசிகிச்சை இன்னமும் மேற்கொள்ளப்படவே இல்லை.

தற்போது நான் சிறையில் இருந்தாலும் எனது உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலை தான் இருக்கிறது. நான் கைது செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். தற்போது நான் மேற்கொண்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் வழக்கை வாபஸ் பெறப்படாது விடில் கொலை செய்யப்படுவேன் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளேன்.

இந்நிலையில் தங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களைப் பரிசீலித்து எனது விடுதலைக்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1. சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்படும் போதும் திருப்பி சிறைக்குக் கொண்டு வரப்படும் போதும் எனது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

2. சிறையிலிருந்து விடுதலையானதும் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் அரசியல் புகலிடம் வழங்க ஆவன் செய்தல் வேண்டும்.

3. இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும், இலங்கைப் புலனாய்வுப் பொலிஸாருக்கும் எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர சட்ட உதவி வழங்க ஆவன செய்தல் வேணடும்.

Edited by கறுப்பி

நான் வர்த்தகராகச் செயற்பட்ட போது நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு நான் பல கடிதங்களை எழுதி இருக்கிறேன். பல அப்பாவி உயிர்களைப் பறிக்கக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளைக் கைது செய்வதற்கான பல தகவல்களை நான் இராணுவ உயரதிகாரிகளுக்கு வழங்கி இருக்கிறேன்.

தன்வினை தன்னைச் சுடும்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்உறுதியாகத்தான்இருக்கின்றான் தமிழனை எங்கு வைப்பது, எதுவரை வாழ விடுவது என்று.

தமிழன்தான் என்ன செய்தும் தோற்றுப்போகின்றான் சிங்களவனுடன் வாழ. தமிழனாக வாழாதிருக்க. :(

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.