Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: இன்று மாலையில் காப்பர் அரசாங்கம் கவிழும்!

Featured Replies

கனேடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: இன்று மாலையில் காப்பர் அரசாங்கம் கவிழும்!

கனேடியப் பிரதமர் காப்பரின் கென்சவேட்டிவ் அரசாங்கத்தினது நடவடிக்கைகள் தங்களுக்கு எதிருத்தியினையினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலேயே தாங்கள் வாக்களிக்கப்போகிறோம் என கனேடிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்திருக்கும் நிலையில் இன்று மாலை காப்பர் அரசாங்கம் வீழ்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் மற்றும் அவரது சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிரான பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டுவரப்பபோவதாக கடந்த வாரம் லிபரல் கட்சியினர் அறிவத்திருந்தனர். லிபரல் கட்சியினர் கொண்டுவரும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் காப்பர் அரசாங்கம் தோல்விகாணுமிடத்து கனேடிய அரசாங்கம் வீழ்ச்சிகாணுவதோடு கனேடியர்கள் மிக விரைவில் தேர்தல் ஒன்றை எதிர்கொள்வார்கள்.

'கனேடியப் பாராளுமன்றினது வரலாற்றில் எப்போதும் இருந்திராததைப் போல முறைகேடான முனைப்புக்களைக் காப்பர் அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கிறது. இதனை நாங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது. இன்றைய அரசாங்கத்தில் பாராளுமன்று வைத்திருந்த நம்பிக்கையினை அது இழந்துவிட்டது' என காப்பர் அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த செவ்வாயன்று கனேடிய மத்திய அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தினைத் தாங்கள் ஆதரிக்கப்போவதில்லை என லிபரல் கட்சியினரும், புதிய சனநாயகக் கட்சியினரும் புளொக் கியூபெக்கி என்ற கட்சியினரும் அறிவித்திருக்கும் நிலையில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

இன்று காலை 10.00 மணிக்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கும். இந்த விவாதத்தின் போது புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் லெய்ரொன் உரைநிகழ்த்துவாரா எனத் தெரியவில்லை. ஆனால் தங்களது கட்சி லிபரர் கட்சியினருடன் இணைந்துநின்று, கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என புதிய சனநாயகக் கட்சியினர் அறிவித்திருக்கிறார்கள்.

கனேடிய நேரப்படி மாலை 1.30 மணிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக வாக்கெடுப்பு இடம்பெறும். இந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடையுமிடத்து கனடாவின் 40ஆவது பாராளுமன்றத்தினைக் கலைக்குமாறு காப்பர் ஆளுநரைக் கோருவார். காப்பர் அரசாங்கம் தோல்வியைத் தழுவுமிடத்து எதிர்வரும் சனியன்று காலையில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்.

http://www.thedipaar.com/news/news.php?id=26032

Edited by நிழலி

ஹார்பர் அரசு (கன்சர்வேட்டிவ்) நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் வீழ்த்தப்பட்டுள்ளது

Government loses non-confidence vote

Conservative government falls in non-confidence vote

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.