Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி தமிழ் மக்கள் ஒன்றுமே செய்யமுடியாது

Featured Replies

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி தமிழ் மக்கள் ஒன்றுமே செய்யமுடியாது:

இயற்கைக் கடன் கழிக்கவும் அனுமதி பெறவேண்டி வரலாம் என எச்சரிக்கிறார் அருட் தந்தை

தமிழ்மக்கள் எதைச் செய்வதென்றாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. இதுவே யதார்த்தமாகும். இதனைத் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நல்லூர் பங்குத்தந்தை அருட்பணி ஐ.டி.டிக்சன் தெரிவித்தார்.

நல்லிணக்கத்துக்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பங்குத்தந்தை இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நல்லிணக்கத்துக்கான சர்வமத ஒன்றியத்தினரே யாழ்ப்பாணத்தில் சமாதான பாதயாத்திரை செய்வதுக்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த நிலையில் தமிழ்மக்களின் நிலைமை எப்படியிருக்கும்?

இவ்வாறான பரிதாப நிலையிலேயே தமிழ்மக்களின் அவல வாழ்வு தொடர்கிறது. இயற்கைக் கடன் கழிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிபெறவேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்படலாம் இதனை தென்பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னால் வட பகுதி மக்கள் சிரிப்பார்கள் ஏன் என்றால் சமாதானத்தின் விளைவை அவர்கள் இன்னமும் அனுபவிக்கவில்லை. சமாதானம் ஏற்பட்டது என்றால் அந்த மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார் அவர். அவர் மேலும் கூறுகையில் எமது நாட்டில் ஐந்து மதங்கள் உள்ளன ஐந்தாவது மதம் கிரிக்கெட். அந்த விளையாட்டின் மூலம் அனைத்து இன மக்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் அணியிலுள்ள சிங்கள வீரர்கள் ஏனைய நாட்டுடன் விளையாடித் தோல்வியடையும் நிலை ஏற்படும் போது தமிழ் மக்கள் அந்தத் தோல்வியை நினைத்துக் கவலைப்படுகிறார் என்றார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கல்முனை ஸ்ரீ சுபத் தாராம மகாவிகாரையைச் சேர்ந்த வணரண்முத்துக்கல சங்கரத்னதேரர் கூறியதாவது:

இன, மத, பேதங்களைக் கடந்து ஒரு நாட்டு மக்கள் என்ற உணர்வு எமக்குத் தேவை. வடபகுதி தமிழ்மக்களுக்குரியது. கிழக்குப் பகுதி தமிழ், முஸ்லிம் மக்களுக்குரியது தென் பகுதி சிங்கள மக்களுக்குரிய என நாம் உணர்வோ மானால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது என்றார்.

தமிழ்மொழியில் உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

எமது அமைப்பிடம் அதிக பணம் இல்லை. ஆனால் அதிக பாசம் இருக்கிறது. நாட்டில் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்று வருகிறோம். இன, மத, பேதங்களுக்கு நாம் இடமளிப்பதில்லை. சமாதானம் தொடர்பாக அதிகம் யோசிக்கவேண்டியதில்லை. அது மக்களது மனதில் ஏற்படவேண்டியது என்றார்.

அனுராதபுரம் சாம விகாரை வண விமல தேரர் கருத்துத் தெரிவிக்கையில்

பொம்மைவெளிப் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளோம். அவர்கள் மனிதர்கள் எதிர்நோக்கமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எமது அமைப்பு இன, மத வேறுபாடின்றி உதவ உள்ளது. என்றார்.ஆரையம்பதி மௌலவி யு.எல்.எம். மக்தி கருத்துத் தெரிவிக்கையில் யுத்தத்தின் பின்னர் பௌதீக ரீதியான அபிவிருத்தி இடம்பெறுகிறது. உடைந்த, நொந்துபோன உள்ளங்களுக்கு ஆறுதல் கூற மதங்களால் மட்டுமே முடியும் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=1413

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கல்முனை ஸ்ரீ சுபத் தாராம மகாவிகாரையைச் சேர்ந்த வணரண்முத்துக்கல சங்கரத்னதேரர் கூறியதாவது:

இன, மத, பேதங்களைக் கடந்து ஒரு நாட்டு மக்கள் என்ற உணர்வு எமக்குத் தேவை. வடபகுதி தமிழ்மக்களுக்குரியது. கிழக்குப் பகுதி தமிழ், முஸ்லிம் மக்களுக்குரியது தென் பகுதி சிங்கள மக்களுக்குரிய என நாம் உணர்வோ மானால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது என்றார்.

தமிழ்மொழியில் உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

எமது அமைப்பிடம் அதிக பணம் இல்லை. ஆனால் அதிக பாசம் இருக்கிறது. நாட்டில் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்று வருகிறோம். இன, மத, பேதங்களுக்கு நாம் இடமளிப்பதில்லை. சமாதானம் தொடர்பாக அதிகம் யோசிக்கவேண்டியதில்லை. அது மக்களது மனதில் ஏற்படவேண்டியது என்றார்.

அனுராதபுரம் சாம விகாரை வண விமல தேரர் கருத்துத் தெரிவிக்கையில்

பொம்மைவெளிப் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளோம். அவர்கள் மனிதர்கள் எதிர்நோக்கமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எமது அமைப்பு இன, மத வேறுபாடின்றி உதவ உள்ளது. என்றார்.ஆரையம்பதி மௌலவி யு.எல்.எம். மக்தி கருத்துத் தெரிவிக்கையில் யுத்தத்தின் பின்னர் பௌதீக ரீதியான அபிவிருத்தி இடம்பெறுகிறது. உடைந்த, நொந்துபோன உள்ளங்களுக்கு ஆறுதல் கூற மதங்களால் மட்டுமே முடியும் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=1413

Edited by Raja Senthooran

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்துடைய சில பௌத்த மற்றும் இஸ்லாமிய மதகுருமாரை நான் இங்கு சந்தித்திருக்கிறேன். இவர்கள் யாழ்ப்பாணம் வரும்போதுதான் இப்படிப் பேசுகிறார்கள் என்றில்லை. தென்னிலங்கையிலும் இப்படியான கருத்துக்களைத் தயக்கமின்றிக் கூறுகின்றனர். எல்லா இனங்களிலும் எல்லா மாதிரியான ஆட்களும் இருக்கின்றனர். அதைத் தெரியாததுபோல நாம் பாசாங்கு செய்தால், நஷ்டம் அவர்களுக்கல்ல... எமக்குத்தான்!

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

:D:D:D:D:D:D

  • தொடங்கியவர்

இப்படியான கருத்துடைய சில பௌத்த மற்றும் இஸ்லாமிய மதகுருமாரை நான் இங்கு சந்தித்திருக்கிறேன். இவர்கள் யாழ்ப்பாணம் வரும்போதுதான் இப்படிப் பேசுகிறார்கள் என்றில்லை. தென்னிலங்கையிலும் இப்படியான கருத்துக்களைத் தயக்கமின்றிக் கூறுகின்றனர். எல்லா இனங்களிலும் எல்லா மாதிரியான ஆட்களும் இருக்கின்றனர். அதைத் தெரியாததுபோல நாம் பாசாங்கு செய்தால், நஷ்டம் அவர்களுக்கல்ல... எமக்குத்தான்!

ஒரு சிறுபான்மை இனத்திற்கு சம உரிமைகளை மறுக்கும், அவர்களை அழிக்கும் பெரும்பான்மை இனத்திற்குள் ஒரு சிறுபான்மை மத குருமார்கள் அந்த சிறுபான்மை இனம் மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள் என்பது நல்ல விடயம்.

ஆனால், சிறுபான்மை இனம் அதை தெரியாமல் பாசாங்கு செய்கிறார்கள் என்று குற்றம் சுமத்தாதீர்கள்.

காரணம், பெரும்பான்மை இனத்திற்குள் உள்ள சிறுபான்மை மத குருமார்கள் உண்மையில் குரல் கொடுக்க வேண்டிய பெரும்பான்மை மக்களிடத்தில் + அரசியல்வாதிகளிடத்தில் என்ன சொல்லுகிறார்கள்? என்ன செய்துள்ளார்கள் இதுவரை?

அதை பண்டாவை கொன்ற மதகுருவில் இருந்து ஒவ்வொரு இராணுவ(?) நடவடிக்கைக்கும் பிரித் ஓதும் குருக்கள் வரை, இன்று நல்லிணக்க ஆணைக்குழு முன்வந்தவர்கள் வரை செய்து காட்டியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='Raja Senthooran' timestamp='1301671820' post='650218'

இப்படியான கருத்துடைய சில பௌத்த மற்றும் இஸ்லாமிய மதகுருமாரை நான் இங்கு சந்தித்திருக்கிறேன். இவர்கள் யாழ்ப்பாணம் வரும்போதுதான் இப்படிப் பேசுகிறார்கள் என்றில்லை. தென்னிலங்கையிலும் இப்படியான கருத்துக்களைத் தயக்கமின்றிக் கூறுகின்றனர். எல்லா இனங்களிலும் எல்லா மாதிரியான ஆட்களும் இருக்கின்றனர். அதைத் தெரியாததுபோல நாம் பாசாங்கு செய்தால், நஷ்டம் அவர்களுக்கல்ல... எமக்குத்தான்!

ஒரு சிறுபான்மை இனத்திற்கு சம உரிமைகளை மறுக்கும், அவர்களை அழிக்கும் பெரும்பான்மை இனத்திற்குள் ஒரு சிறுபான்மை மத குருமார்கள் அந்த சிறுபான்மை இனம் மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள் என்பது நல்ல விடயம்.

ஆனால், சிறுபான்மை இனம் அதை தெரியாமல் பாசாங்கு செய்கிறார்கள் என்று குற்றம் சுமத்தாதீர்கள்.

காரணம், பெரும்பான்மை இனத்திற்குள் உள்ள சிறுபான்மை மத குருமார்கள் உண்மையில் குரல் கொடுக்க வேண்டிய பெரும்பான்மை மக்களிடத்தில் + அரசியல்வாதிகளிடத்தில் என்ன சொல்லுகிறார்கள்? என்ன செய்துள்ளார்கள் இதுவரை?

அதை பண்டாவை கொன்ற மதகுருவில் இருந்து ஒவ்வொரு இராணுவ(?) நடவடிக்கைக்கும் பிரித் ஓதும் குருக்கள் வரை, இன்று நல்லிணக்க ஆணைக்குழு முன்வந்தவர்கள் வரை செய்து காட்டியுள்ளார்கள்.

பெரும்பான்மை இனத்துக்குள் ஒரு சிறுபான்மை மதகுருமார், சிறுபான்மை இனத்தின் பிரச்சனையின் சில உண்மைகளைப் பேசுகிறார்கள் என்பதே எனது கூற்று.

அப்படியிருந்தால் அது நல்ல விடயம் என்பது உங்கள் கூற்று. ஒத்த கருத்துக்கு நன்றி.

பெரும்பான்மை இனத்தின் சிறுபான்மை மதகுருமார் இதே கருத்தை ஏன் பெரும்பான்மை மக்களிடையே எடுத்துச் செல்வதில்லை என்பது உங்கள் கேள்வி.

அதற்கான பதிலையும் எனது முதல் பதிவில் கொடுத்திருக்கிறேன் - தென்னிலங்கையிலும் இப்படியான கருத்துக்களைத் தயக்கமின்றிக் கூறுகிறார்கள் என்று.

ஆனால் அவர்கள் நீங்கள் கூறுவதுபோல அவர்கள் பெரும்பான்மை இனத்தில் சிறுபான்மையானவர்களே.

அதாவது மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள்.

இந்தக் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் தமிழரின் இனப்பிரச்சினை பற்றி நாம் தெரியாதது போல பாசாங்கு செய்வது சரியில்லை என்பது எனது கூற்று.

தெரியாததுபோல பாசாங்கு செய்வது சிறுபான்மை இனத்தில் சிறுபான்மையானவர்கள் என்றால் சிக்கல் இல்லை. கணக்கில் எடுக்காமல் விட்டுவிடலாம்.

ஆனால் அதுவே சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையானவர்கள் என்றால் என்ன நடக்கும்?

பெரும்பான்மை இனத்தின் சிறுபான்மையானவர்கள் வாயைத்திறப்பதை நிறுத்திக் கொள்வார்கள். (இதுவரை புரிந்தால் தொடர்ந்து படிக்கவும்)

சொற்களில் விளையாடாமல் சுருக்கமாகச் சொன்னால், எமக்காகக் குரல் கொடுப்பவர்களைத் தட்டிக் கொடுங்கள். தட்டி வைக்காதீர்கள்.

ஏற்கனவே எமக்காகக் பேசுவதற்கு எமது இனத்துக்கு வெளியே பெரிதாக யாருமில்லை. அமெரிக்கா முதல் ஐ.நா.வரை, ஐரோப்பிய ஒன்றியம் முதல் ஐஸ்லாந்துவரை யாருமே கண்டுகொள்கிறார்கள் இல்லையே என்று (இடையிடையே முள்ளிவாய்க்கால் ஞாபகம் வரும் நேரங்களில்) நாம்தான் புலம்புகிறோம் (அல்லது உறுமுகிறோம்)

இந்த லட்சணத்தில்... யாரோ ஓரிருவராவது எமது பிரச்சினை பற்றிப் பேசுகிறார்கள். அதுவும் இலங்கைக்குள் பேசுகிறார்கள்.

இதைத் தெரியாதது போல யாரும் பாசாங்கு செய்யவில்லை என்பது உங்கள் கருத்து. அப்படியா? இதற்குப் பதில்கொடுத்த மற்றயவர்களின் பதிவுகளையும் இதே திரியில் பார்க்கவும்.

Edited by Raja Senthooran

  • தொடங்கியவர்

இந்த லட்சணத்தில்... யாரோ ஓரிருவராவது எமது பிரச்சினை பற்றிப் பேசுகிறார்கள். அதுவும் இலங்கைக்குள் பேசுகிறார்கள்.

இதைத் தெரியாதது போல யாரும் பாசாங்கு செய்யவில்லை என்பது உங்கள் கருத்து. அப்படியா?

நீங்கள் கூறியது போல, அப்படி பேசுபவர்களை நாம் ஆதரிக்கவேண்டும், நாம் அவர்களை ஆதரிக்கின்றோம் என்பதை, அவர்கள் நம்ப நடக்கவேண்டும்.

அதேவேளை நாம் உலக அரங்கில், மாறும் உலக ஒழுங்குகள் ஊடாக, எமது விடிவுக்கு ஆதரவையும், சிங்களத்திற்கு அழுத்தமும் கொடுக்கவேண்டும். வெளி அழுத்தம் ஊடக மட்டுமே அடிப்படை உரிமைகளை கூட நாம் பெற முடியும், உள்ளுக்குள் இருந்து.

நீங்கள் கூறியது போல, அப்படி பேசுபவர்களை நாம் ஆதரிக்கவேண்டும், நாம் அவர்களை ஆதரிக்கின்றோம் என்பதை, அவர்கள் நம்ப நடக்கவேண்டும்.

அதேவேளை நாம் உலக அரங்கில், மாறும் உலக ஒழுங்குகள் ஊடாக, எமது விடிவுக்கு ஆதரவையும், சிங்களத்திற்கு அழுத்தமும் கொடுக்கவேண்டும். வெளி அழுத்தம் ஊடக மட்டுமே அடிப்படை உரிமைகளை கூட நாம் பெற முடியும், உள்ளுக்குள் இருந்து.

உங்கள் கருத்தும் எனது கருத்தும் இந்த இடத்தில் 100 சதவீதம் ஒத்துப்போகின்றன. நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.