Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆரை கொல்ல தி.மு.க செய்த சூழ்ச்சிகள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆரை கொல்ல தி.மு.க செய்த சூழ்ச்சிகள்!!

எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார் என்பதற்காக கலைஞர் தி.மு.க வை விட்டு நீக்கினார் என்பது மட்டும் காரணம் அல்ல..தான் தி.மு.க கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றியது போல நாளடைவில் எம்.ஜி.ஆரும் இதை கைப்பற்றிவிடுவார் என கலைஞர் பயந்தார்..எம்.ஜி.ஆருக்கு சினிமாத்துறை இருக்கிறது..அதனால் கட்சியை அர்சியலை அவர் எப்போதும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை..தி.மு.க வின் பொருளாளராக எம்.ஜி.ஆர் இருக்கிறார்..முதல்வராக கருணாநிதி இருக்கிறார்..கட்சிப்பணத்தையும் ,அர்சின் கஜானா பணத்தையும் தன் குடும்பத்திற்காக,கணக்கு வழக்கில்லாமல் ஒதுக்குகிறார்..என நன்கு தெரிந்தபின்பே எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்...உடனே எம்.ஜி.ஆரை கலைஞர் விலக்க தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி..எம்.ஜி.ஆரையே இந்த கருணாநிதி நீக்கிட்டாருய்யா...என மக்கள் கடும் ஆத்திரத்துடன் கலைஞர் மீது இருந்தனர்...தாய்மார்கள்,பெண்கள்,முதியோர்கள் அனைவரும் கலைஞர் இருக்கும் திசை நோக்கி மண்ணை வாரி சாபம் விட்டனர்...எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் பெரும்படையுடன் ஆவேசமாக கிளம்பியது..முசிறிமுத்தன்தான் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற தலைவர்... மிகவும் கொதிப்புடன் இருந்தார்..நீதி கேட்டு பயணம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆர்ப்பரிப்புடன் கொந்தளிப்புடன் வருகிறார்கள்...எம்.ஜி.ஆர் அவர்களுடன் நடக்கிறார்..அமைதியாக செயல்படுங்கள் என்கிறார் அண்ணாசாலையில் நடக்கிறார்கள்..அப்போதுதான் முசிறி முத்தண் புரட்சித்தலைவர் வாழ்க..என்ற கோஷம் கிளம்பியது..தமிழகம் முழுவதும் கெட்டியாக ஒட்டிக்கொண்ட்து....

ராமவரம் தோட்ட்த்தில் எம்.ஜி.ஆருடன் முசிறிமுத்தண் வாக்குவாதம் செய்கிறார். தலைவரே நீங்கள் கட்சி ஆரம்பிங்க..இந்த கருணாநிதிக்கு நாம யாருன்னு சரியான பாடம் புகட்டுவோம் என்கிறார்..எம்.ஜி.ஆர் அது எல்லாம் வேண்டாம்..சினிமாவே எனக்கு போதும்..நாம கட்சி ஆரம்பிச்சா மக்கள் ஏத்துக்குவாங்களா..என்கிறார்,,

தலைவரே நீங்க சரின்னு சொல்லுங்க நாங்க பார்த்துக்குறோம் என்கிறார் முத்தன்...

எம்.ஜி.ஆர்..சம்மதம் தெரிவிக்க,அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உதயமாகிறது....

உலகில் முதன்முதலாக ஒரு நடிகர் ஒரு கட்சி தொடங்குகிறார்..கலைஞர் இதை வளர விடக்கூடாது என கட்சிக்கு அனுமதி கிடைக்க விடாமல் பல வழிகளில் தடை போடுகிறார்...மாநில கட்சிகள் தொடங்க அனுமதி இல்லை என கலைஞரின் சூழ்ச்சியால்சென்னை தேர்தல் கமிஷனில் சொல்கிறார்கள்....தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் டில்லி சென்று அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என இந்திய அளவில் உள்ள கட்சியாக பதிவு செய்து கலைஞருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்களை சந்திக்க கூடாது எனவும் அவரை எப்படியும் போட்டுதள்ளிவிடும்படி தன் கட்சியினருக்கு மறைமுக அசைன்மெண்ட் கொடுத்திருந்தார் கலைஞர்...அக்காலத்தில் தி.மு.க என்றாலே ரவுடிகள்தான்..மக்கள் நடுங்குவார்கள்..அந்தளவு தி.மு.கவினர் அராஜகம் செய்வார்கள்..இந்திராகாந்தியையே மதுரையில் கொல்ல முயற்சித்தார்களே...அதுபோல எம்.ஜி.ஆருக்கும் பலவகையில் தொல்லை கொடுத்தார்கள்..அவரை கொல்ல பெரும் தி.மு.க படை தயாரானது...இவரை உயிரோடு விட்டால் நாம் ஆட்சியை இழக்க வேண்டிவரும்..என மொத்த தி.மு.க வும் களத்தில் இறங்கியது..

அக்காலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தி.மு.க வை விமர்சனம் செய்தால்..உடனே சுற்றிவளைத்து அடிஉதை விழும்..மேடை ஏறி வெட்டுவார்கள்.. அல்லது கொலை செய்து ஆற்றில் வீசிவிடுவார்கள் தி.மு.க வினர்..அப்படிப்பட்டவர்கள் தனக்கே இன்று குறிவைக்கப்பட்ட்தை அறிந்த எம்.ஜி.ஆர் அதை எப்படி சமாளித்தார் தெரியுமா..?..

http://sathish777.blogspot.com/2011/04/blog-post_07.html

எம்.ஜி.ஆர் உயிர் தப்ப செய்த தந்திரம்-தி.மு.க ஏமாற்றம்-பாகம்-2

சினிமாவில் இருந்த முக்கிய ஸ்டண்ட் கலைஞர்களை எல்லாம் அழைத்து அதில் உண்மையான ஆட்களை தன் மீது விசுவாசம் கொண்டவர்களை மட்டும் பொறுக்கியெடுத்து மெய்காவல்படை போல அமைத்துக்கொண்டார்..எம்.ஜி.ஆருக்கு அரண்போல இவர்கள் காவல் இருந்தனர்...ஸ்டண்ட் மாஸ்டர் ஜஸ்டீன் உட்பட பலர் இருந்தனர்...தளபதி நடராஜன்,சோடாக்கடை பெரியண்ணன் தலமையில் பறக்கும்படை அமைக்கப்பட்ட்து..இன்று ஒரு ஊருக்கு எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்ய வருகிறார் என அறிவித்தால் ,போலீசார்..பந்தோபஸ்து பலமடையும்..பலபோலிஸார் அவரது ரசிகர்கள் என்பதால் அவரது பாதுகாப்பு பணியை உற்சாகமாக செய்தனர்.அதே சமயம்.. அவரை தீர்த்துக்கட்ட தி.மு.க கும்பலும் ஆயுதங்களுடன் அந்த பாதையில் காத்திருப்பார்கள்..ஆனால் எம்.ஜி.ஆர்..சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பாதையில் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்துகோண்டிருப்பார்..தி.மு.க வினரை ஏமாற்ற எம்.ஜி.ஆர் பல தந்திரங்கலை உபயோகிப்பார்..சுற்றுப்பயண விவரம் வெறும் ஏட்டளவில்தான் இருக்கும்..நொடிக்கு நொடி தன் பயண திட்ட்த்தை மாற்றிக்கொண்டே இருப்பார்..அந்தளவு தி.மு.கவினர் அச்சுறுத்தல் இருந்தது...

இரவில்..செல்லும்போது இன்னும் போராட்டமாக இருக்கும்..மீடியாக்கள் இல்லாத காலம் என்பதால் மக்கஊக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது..இதனால் பல வன்முரைகளை நட்த்த தி.மு.க வினருக்கு வசதியாக இருந்த்து..போலீஸாரும் இதை அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள்..மக்களால் பெரிய அளவில் பேசப்பட்டாலோ..அல்லது நகரத்தில் பலர் முன்னிலையில் நடக்கும் கொலைகளுக்கு மட்டும்தான் போலீஸ் கேச்..இந்த காலத்திலேயே கொலை செய்து ஆற்றில் போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பித்தால் போலீஸ் திணறுகிறது. தற்கொலை என கேஸை மூடுகிறார்கள்.மீடியாக்கள்.இல்லாத காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருக்கின்ற லைட் வெளிச்சம் இல்லாத காடுகள் அதிகமுள்ள அக்காலத்தில் (இருபது வருடத்திற்கு முன்).யாரை கொன்றால் யாருக்கு தெரிய போகிறது..?

அப்போது எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த நேரம் மக்கள் எம்.ஜி.ஆர் வருகிறார் என தெரிந்தாலே வண்டி கட்டிக்கொண்டு முக்கிய நகர்களுக்கு சாரை சாரையாக வந்துவிடுவார்கள்..எங்க ஊரில் குருசாமி டீக்கடை இருக்கிறது..இந்த கடையில் இரண்டு நாட்களாக டீ,மிகசர் சாப்பிட்டுக்கொண்டு காத்திருந்து எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு போவார்கள்..அப்படி இரண்டு நாட்களாக காத்திருந்து எம்.ஜி.ஆர் பார்த்தவர்கள் கிராமத்தில் இன்றும் நிறைய இருக்கிறார்கள்..இந்த சக்தி உலக அளவில் எந்த தலைவருக்கும் கிடையாது...இரண்டு தின்ங்களாக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றால் இன்று வருகிறேன் என எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டால் அன்று வரும் வழியெல்லாம் மக்கள் எம்.ஜி.ஆர் வேனை மறித்துக்கொண்டு விடுவர்...100.200 மக்கள் ஒன்றாக சுற்றிக்கொண்டு எங்கள் கிராமத்தில் எம்.ஜி.ஆர் காலடி பட வேண்டும் என அடம்பிடித்தால் அவர் என்ன செய்வார்..?அங்கு இறங்கி அந்த மக்களுடன் சந்தோஷமாக பேசிவிட்டு போவார்..இது போல ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கத்தி கதறுவார்களாம்..உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிடுவாராம்..இதனால் பிரச்சாரத்திற்கு இந்த நாளில் இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் வருவதாக சொன்னால் அங்கு வர இரண்டு நாட்கள் ஆகும்...இந்த அளவு எம்.ஜி.ஆர் மக்கள் ஆதரவை பெற்றிருந்தார்...

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் முதன்முதலாக போட்டியிட்டபோது வரலாரு காணாத வெற்றி..அவர் கைகாட்டிய வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி..எம்.ஜி.ஆர் கைகாட்டினால் கழுதை கூட ஜெயிக்கும் என்பார்கள் கிராமத்தினர்...அந்தலவு எம்.ஜி.ஆரை மக்கள் கடவுளாக மதித்தனர்...

பல சூழ்நிலைகளிலும் எம்.ஜி.ஆரை சுற்றி மக்கள் எப்போதும் இருந்த்தால் தி.மு.க வினர் எம்.ஜி.,ஆரை கொல்லும் முயற்சி பலிக்கவில்லை...ஆனால் வேட்பாளர்கள்..?அவர்களையும் எம்.ஜி.ஆர் காப்பாற்ற வேண்டுமே..? அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் தன் சொந்த கைகாசைபோட்டுத்தான் அப்போது முதல் இன்றுவரை கட்சி பணியாற்றுவார்கள்..

ஆனால் கருணாநிதியோ...நிதி வசதி அதிகம் உள்ளோர் பொற்க்குவியல் தாரீர்..நிதிவசதி குறைந்தோர் காசுகள் தாரீர் என அண்ணா பிறந்த நாள்,தனது பிறந்தநாள்,தேர்தல்காலம் என எப்போது பார்த்தாலும் துண்டு ஏந்தி பிச்சை எடுப்பார்...வசதி மிக்கவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி தருகிறோம்..துண்டு ஏந்தாதீர்கள் என்றாலும் கேட்கமாட்டாராம்...

கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தார் என்கிறார்கள்..இந்த முறை மட்டுமே முழுதாக 5 வருசம் ஆட்சி செய்தார்..மீதி பதவியேற்ற காலங்களில் எல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்..இவர் முதல்வர் ஆனாலே பாலியல் வல்லுறவு,கொலை கொள்ளை தான்..சிறையில் இருக்கும் ரவுடிகளை எல்லாம் விடுதலை செய்வதுதான் இவர் முதல் பணியாக இருக்கும்..ஏனென்றால் ரவுடிகள் என்றாலே அவர்கள் தி.மு.க தானே....இப்போதுகூட..அண்ணா பிறந்த நாள் என பல கொடூரமான ரவுடிகளை திறந்துவிட்டார் தெரியுமா..?இரவில் 7 மணிக்கு மேல் தி.மு.க வின் கோட்டையான சென்னையில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தனியாக நடக்க முடியாது தெரியுமா..?

கலைஞர் அக்காலத்தில்,எத்தனையோ ஸ்டண்டுகள் அடித்தும்,எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை...

தன் தொண்டர்களையும் வேட்பாளர்களையும் தி.மு.க வினர் கொலைவெறியுடன் தாக்கௌகிறார்கள் என கேல்விப்பட்ட்தும் எம்.ஜி.ஆர் ஒரு உத்தரவு பிறப்பித்தார்..உங்கள் வீட்டு கூரையின் மீது நம் கட்சிக்கொடியை ஏற்றுங்கள்...ஒவ்வொருவரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்..உயிருக்கு ஆபத்து என்றால் தாக்குங்கள் என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்..என்றார்..எம்.ஜி.ஆர் இப்படி சொன்னதும்..அ.தி.மு.கவினர் வெறி கொண்ட வேங்கை ஆகினர்...

தி.மு.க ரவுடிகளை தூக்கி போட்டு மிதித்தனர்...தேர்தல் காலத்தில் அப்போதெல்லாம் வெட்டுகுத்து சர்வ சாதரணம்...வீதிக்கு ஒரு பிணம் விழுமாம்..காரணம் தி.மு.க..காங்கிரஸ் தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போக ஆட்சியை இழக்க,முதல் காரணம்,தி,மு,க வின் வன்முரைதான்..காங்கிரஸ்காரன் பெரும்பாலும் அய்யர்தான் என்பதால்.தி.மு.கவால் சுலபமாக அவர்களை உதைத்து துரத்த முடிந்தது...காங்கிரஸ் காரன் வீட்டுக்குள் புகுந்து பெண்களை தூக்கி சென்றுவிடுவார்களாம்...இதனால் வேட்பாளர் பஞ்சம்,பிரச்சாரம் செய்ய பயம் என காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது....மற்றபடி கொள்கை முழக்கமெல்லாம் மண்ணாங்கட்டி வாதம்...எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கால் வளர்ந்தார்..தி.மு.க வன்முறையால் வளர்ந்தது....

கலைஞர் எம்.ஜி.ஆருக்கு விட்ட சவால் ..கலைஞரை கைது செய்ய சொன்ன எம்.ஜி.ஆர் –விரைவில்

http://sathish777.blogspot.com/2011/04/2.html

கலைஞரை கைது செய்த எம்.ஜி.ஆர் -உண்மை பிண்ணணி

எம்.ஜி.ஆர் முதன்முறையாக ஆட்சி பொறுப்பேற்ற போது கலைஞரால் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல..மக்களின் பெரிய ஆதரவுடன் எம்.ஜி.ஆர் ஆட்சி பொறுப்பேற்றதும் இவர் சும்மா இருக்க வேண்டியதுதானே..தினசரி ஒரு போராட்டம்,ஆர்ப்பாட்டம் என அறிவித்துக்கொண்டே இருந்தாராம்..

வன்முறையை தூண்டிவிடுவது...அரசிற்கு எதிராக அரசு ஊழியர்களை தூண்டி விடுவது..எனவும்,தினசரி ஒரு கூட்டம் போட்டு எம்.ஜி.ஆரை தரக்குறைவாக பேசுவது..அட்டைக்கத்திவீரன்..என கிண்டல் செய்வது என கலைஞர் வயித்தெரிச்சலுடன் என்னென்னவோ செய்தாராம்..எம்.ஜி.ஆர் கலைஞர் ஆள் ஒருவரை கூப்பிட்டு கருணாநிதிகிட்ட சொல்லி வை..இப்படியெல்லாம் செஞ்சா சிறைக்கு போக வேண்டியிருக்கும்....’

என்றாராம்..நடுங்கிபோன அவர் கலைஞரிடம் மூச்சிரைக்க வந்து எம்.ஜி.ஆர் உங்களை சும்மா இருக்க சொல்றார்...இல்லைன்னா தூக்கி உள்ளே போட்ருவாராம்..என்கிறார்..என்னை சிறையில போட்ருவானா பார்த்துக்குறேன்..என அன்று மாலையே ஒரு கூட்டம் கூட்டி என்னை கைது செய்து பார்...தமிழ்நாடு பஞ்சாப்(வன்முறை அப்போது அங்கு மிக அதிகம்)ஆகிவிடும்...தமிழ்நாட்டில் ரத்த ஓடும்..ரணகளமாகிவிடும்..என வடிவேலு போல பூச்சாண்டி காட்டியிருக்கிறார்..

கடுப்பான எம்,.ஜி.ஆர்...அவரை தூக்கி உள்ளே போடு என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம்..என்று உத்தரவு போட்டுவிட்டார்..கலைஞர் கைது செய்யப்பட்டார்..இதை எதிர்பாராத கலைஞர் மட்டுமல்ல..ஒட்டுமொத்த தி.மு.க வும் ஆடிப்போனது...திகிலில் உறைந்துபோனார்கள்...ஜாமீன் கிடையாது என்று சொல்லி விட்டார்கள்..யாரும் பார்க்கவும் அனுமதி இல்லையென்று சொல்லிவிட்டார்கள்....தினசரி உடன்பிறப்புகளுக்கு கண்ணீர் கம்பலையுமாக கலைஞர் கடிதம் எழுதுவார்..இவ்வாறு 145 நாட்கள் கடிதம் எழுதினார்...துவண்டு தவித்து போன கலைஞர் எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்ட பின்பே வெளியில் வரமுடிந்த்து...17 வருடங்கள் கலைஞர் எம்.ஜி.ஆரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை என்பது தமிழக அரசியலின் முக்கிய பக்கங்கள்..எம்.ஜி.ஆரின் நட்புக்கு கலைஞர் அன்று செய்த துரோகத்திற்கு தண்டனையாக 17 வருடங்கள் அர்சியலில் இயங்க முடியாமல் செல்லரித்துபோனது தி.மு.க.எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தி அசைக்க முடியாததாய் இருந்தது..அந்த வெறித்தனமான பாசத்தை எதிர்கட்சிகள் ஒன்றும் செய்ய முடியவில்லை....

அண்ணா இறந்தபின் கலைஞர் எம்.ஜி.ஆரிடம் கெஞ்சி முதல்வர் பதவியேற்றுகொண்ட காலகட்டத்தில் தமிழகத்தில் பெரிய பஞ்சம்...மக்கள் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள்..கலைஞர் பற்றி இயற்கைக்கு தெரியுமோ என்னவோ..ஏனென்றால் எத்தனையோ தெய்வீக சக்தியும்,மனித நேயமும் கொண்ட அரச்ர்கள்,முதல்வர்கள் ஆட்சிகட்டிலில் அமர்ந்த மாநிலத்தில் முதன்முதலாக ஒரு கறுப்பு மனம் கொண்டவர்,சுயநலம் கொண்டவர் கொடுமனம் கொண்டவர்,எதிர்காலத்தில பலர் சாவுக்கு காரணமாக இருக்கபோகிறவர்...பதவியேற்கிறார் என்பதாலோ என்னவொ..இயற்கையே விளைச்சலை நிறுத்திக்கொண்ட்து. எங்கும் வறண்டது....மக்கள் பலர் உணவு கிடைக்காமல்இறந்தனர்.....கப்பங்கிழங்கை மக்கள் காய்ச்சி..கஞ்சியாக்கி உண்டு உயிர்வாழ்ந்தனர்....எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க ஆரம்பித்து மக்களை சந்திக்க வந்தபோது பெரிய வரவேற்பும் ,கருணாநிதி பிரச்சாரம் செய்ய சென்ற போது அவர் சென்ற இடமெல்லாம் கப்பக்கிழங்கை தோரணம்போல கட்டி வரவேற்பு கொடுத்தனர்..

கப்பக்கிழங்கை பார்த்தால் அவரது ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம்,உணவு தட்டுப்பாடு நினைவுக்கு வருவது போல அது அமைந்தது...இந்த கப்பக்கிழங்கு தோரண பிரச்சரத்தை..அ.தி.மு.க தனது பிரச்சார யுக்தியாக பயன்படுத்திக்கொண்ட்து..எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் சத்துணவு திட்டம் கொண்டுவந்த்தன் முதல் காரணம் அப்போதிருந்த உணவு பஞ்சம்தான்...ஊர் ஊருக்கு மக்களுக்கு சாப்பாடு செய்து மக்களுக்கு தர உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர்..இதனால் அனைத்து ஊர்களிலும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டது..எம்.ஜி.ஆர் ஆட்சியில் பொதுப்பணித்துறை பணிகள் பெரும்பாலும் அதிகம் நடக்கவில்லை..மக்களுக்கு சோறு போடுவதுதான் முக்கியம் என்ற ரீதியில் எம்.ஜி.ஆர் ஆட்சி சில காலம் போய்க்கொண்டிருந்த்து..இதைத்தான் படித்தவர்கள்..எம்.ஜி.ஆர் பாமர ஆட்களுக்கு சோறு போட்டே ஆட்சியை பிடித்தார் என்பார்கள்

விரைவில்...

அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த எம்.ஜி.ஆர்..வன்முறையை தூண்டிய கலைஞர்

எம்.ஜி.ஆர் பிழைக்க மாட்டார்..அவர் ஆட்சியை எனக்கு கொடுங்கள்,கெஞ்சிய கலைஞர்-விரைவில்..

http://sathish777.blogspot.com/2011/04/blog-post_6034.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.