Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீதியோரச் சிறுவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீதியோரச் சிறுவர்கள்

உலகில் 246 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், அடக்குமுறைகளுக்கு உள்ளாகிய நிலையிலும் சிறுவர் தொழிலாளர்களாக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் நாளை செவ்வாய்க்கிழமை உலகெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் 5 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதியோரச் சிறுவர்கள் உள்ளனர். 30 வருட காலத்துக்கு மேல் நீடித்த யுத்தம் மற்றும் 2004 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட சுனாமி போன்ற காரணிகளே இலங்கையில் வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பிரதான காரணியாக விளங்குகின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரை வீதியோரச் சிறுவர்கள் பிரதான நகரங்களை மையமாகக் கொண்டே காணப்படுகின்றனர். அதில் தலைநகரான கொழும்பிலேயே அதிகளவில் வீதியோரச் சிறுவர்கள் உள்ளனர். இலங்கை அரசு வீதியோரச் சிறுவர்கள் உட்பட சகல சிறுவர்களையும் கவனத்தில் கொண்டு 1991 ஆம் ஆண்டு ஐ.நா.சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் கைச்சாத்திட்டதுடன் 1998 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. அத்துடன் 1996 ஆம் ஆண்டு இலங்கையில் "வீதியோரச் சிறுவர்கள் வலைப்பின்னல்' (கூடஞு குtணூஞுஞுt இடடிடூஞீணூஞுண Nஞுtதீணிணூடு) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனாலும் அதிகரித்துச் செல்லும் வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கையை அரசினாலோ அல்லது பொது அமைப்புகளினாலோ கட்டுப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

வீதியோரச் சிறுவர்கள் சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, அவர்களின் உரிமைகள், தேவைகள் நிறைவேற்றப்படாத ஒரு வேண்டத்தகாத குழுவினராகவே நோக்கப்படுகின்றனர். உலகில் 100 மில்லியனுக்கும் அதிகமான வீதியோரச் சிறுவர்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வீதியோரச் சிறுவர்கள் உருவாகுவதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்ற போதிலும் வறுமை, கல்வியறிவற்ற தன்மை போன்றவையே வீதியோரச் சிறுவர்களை உருவாக்குவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் வீதியோரச் சிறுவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதும் அவற்றில் காணப்படும் தொய்வு நிலைகளால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நகரப்புறங்களில் காணப்படும் வீதியோரச் சிறுவர்களைப் பிடித்து சிறுவர் இல்லங்களில் சேர்க்கும் நடவடிக்கைகள் 2008 ஆம் ஆண்டு அரசினால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் வீதியோரச் சிறுவர்களாக அலைந்து திரியும் 5 வயதுக்கும் 14 வயதுக்குமிடைப்பட்ட சிறுவர்களைத் தேடிப்பிடித்து சிறுவர் இல்லங்களில் ஒப்படைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி கல்வி அறிவை புகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினாலும் பிரதேச பொலிஸ் நிலையங்களினூடாகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் ஒரு சிறுதொகை சிறுவர்களே பிடிக்கப்பட்டு சிறுவர் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்நடவடிக்கை கைவிடப்பட்டு காணாமல் போயுள்ளது.

வீதியோரச் சிறுவர்களை பலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதுடன் அவர்கள் மீது பாலியல் துஷ் பிரயோக சம்பவங்களும் அதிகளவில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிலையில் இவ்வாறான சிறுவர்களைப் பாதுகாக்க அரசு முன்னரைவிடவும் முனைப்பõகவும் உறுதியாகவும் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் தற்போது வீதியோரச் சிறுவர்களாக திரியும் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவது மட்டுமன்றி விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலைகளையும் உருவாக்கி விடும். எனவே அரசு இந்த வீதியோரச் சிறுவர்கள் விடயத்தில் காலம் தாமதியாது உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்புமிக்கதாக மாற்றவேண்டும். இது அரசின் நடவடிக்கை மட்டுமன்றி எம் ஒவ்வொருவரினதும் கடமை என்பதை பொது மக்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

http://www.thinakkural.com/editorial/2285-2011-04-11-03-59-53.html

இணைப்பிற்கு நன்றி நுணா...

Hope For Children என்ற அமைப்பு இலங்கையிலும் தனது சேவையை ஆற்றுகிறது ஆனால் அவை எல்லாம் முழு சிங்கள ஊர்களில் என்று தான் நினைக்கிறன்.

http://www.streetchildren.org.uk/memberDetail.asp?pageID=45&memberID=56

http://www.worldhunger.org/articles/09/asia.htm

http://mirroflife.wordpress.com/

இந்தியா, இலங்கை ஏன் யாழ்பாணத்தில் கூட வீதியோரம் வறுமையில் வாழ்பவர்களைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் சிறுவர்களை அந்த நிலைமையில் பார்த்தால் மனதில் அப்படியே பதிந்து விடும். :(

நீண்ட காலமாக ஒரு கனவு அடிமனதில் உள்ளது. குறைந்தது 10 கைவிடப்பட்ட சிறுவர்களையாவது நானே அங்கிருந்து பராமரித்து கல்வியறிவைக் கொடுக்க வேண்டும் என்பது... நாட்டு நிலைமை சீராக வந்தால் ஒரு வேளை கனவு நினைவாக வாய்ப்புகள் கிடைக்கலாம்... வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இழந்தது போகவில்லை. படித்தவர்கள், ஊரில் இருந்து கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி மூலம் உதவும் மனம் உள்ளவர்கள் அந்த நேரத்தில் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.