Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிபுணர்குழு அறிக்கையினை இலங்கை பயன்படுத்த வேண்டும் என ஒபாமா கோரிக்கை

Featured Replies

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011

ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழுவின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை அருமையானதொன்று. அதனை இலங்கை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஒபாமா நிர்வாகம் மஹிந்தவிற்கு செய்தி அனுப்பியுள்ளது.

இலங்கை அரசாங்கமானது தனது நம்பிக்கை தன்மையினை காட்டுவதற்கும் பொறுப்பு கூறும் கடமையில் இருந்து வழுவாது இருப்பதற்கும் இந்த அறிக்கையினை ஏற்றுக்கொண்டு அதன் படி செயற்படவேண்டும் என கூறியுள்ளது ஒபாமா நிர்வாகம். இது தொடர்பான செய்தி மஹிந்தவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

ஈழ நாதம்

நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா விரைவில் பகிரங்கமாக வெளியிடும்! சனல் 4 தொலைக்காட்சி செய்தி!!

சிறிலங்காவில் இரத்தக்களரியை ஏற்படுத்திய இறுதிக்கட்டப் போர் தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா சபை பொதுமக்களுக்கு பகிரங்கமாக வெளியிடவுள்ளதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான கேள்விகளை எழுப்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெள்ளக்கிழமை (15.04.2011) 'சனல் 4' வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

26 ஆண்டுகள் நீடித்து, 2009 இல் முடிவடைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் யுத்த மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை நிபுணர்குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ் அறிக்கை எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வாய்ப்புண்டு எனவும் 'சனல் 4' தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளின் இறுதி மாதங்களில் குறைந்தது 20 000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 'தாக்குதல் தவிர்ப்பு வலையம்' என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட செல் தாக்குதல்கள், படுகொலைகள், பொருட்கள் செல்ல விடாது தடுத்தமை போன்ற குற்றங்கள் மற்றும் மனிதக் கேடயங்களாக மக்களை பயன்படுத்தியமை, சிறார் படைச்சேர்ப்பு போன்ற குற்றங்கள் தொடர்பான விபரங்களும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நம்ப்படுகிறது.

மனித உரிமை அமைப்புகள் மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை அடுத்து 2010ஆம் ஆண்டு ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் கூட்டாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட காணொளி 'சனல் 4' தொலைக்காட்சி ஊடாக நிபுணர்குழுவின் விசாரணைகளுக்கான ஒரு முக்கிய சான்றாக சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.நாவினால் இக் காணொளி மீதான அடிப்படை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அது உண்மையெனக் கண்டறியப்பட்டமையும் நிபுணர் குழு அமைக்கப்பட்டதற்கான காரணிகளில் ஒன்றாகும்.

போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகளை ஐ.நா நிபுணர் குழு கடந்த ஆண்டு டிசம்பரில் முடித்துக் கொண்டது. ஆனபோதும் சிறிலங்கா அரசாங்கம் நிபுணர் குழுவினை நாட்டிற்குள் அனுமதிக்காததால் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகள் தடைப்பட்டன. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை குறைபாடுகளையும், உறுதிப்படுத்தப்படாத பக்கச்சார்பான ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதென சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவர் காசிபிள்ளை மனோகரனின் மகன் 2006ஆம் ஆண்டு சிறிலங்காவில் கொல்லப்பட்டார். அக்காலப் பகுதியிலிருந்து அவர் சிறிலங்காவில் நீதிக்காகவும் வெளிப்படைத் தன்மைக்குமாக பாடுபட்டு வருகின்றார். 'இந்தக் குற்றத்திற்கான அனைத்துலக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறேன். எனது மகனின் கொலைக்கு மட்டுமல்ல. அனைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என மருத்துவர் காசிபிள்ளை 'சனல் 4' இற்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'எனது வாழ்க்கையில் இதற்காகவே நான் போராடி வருகிறேன். நான் சந்திக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியிடமும், ஊடகவியலாளரிடமும் எனது மகனின் சாவுக்கான ஒரு தீர்ப்பினை வேண்டி வருவதாக கூறி வருகிறேன். எனது மகன் அரசியலில் ஈடுபடவில்லை. அவன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். இப்போது நான் அவனை இழந்து விட்டேன். இது பெரும் அவலம். இதற்கான ஒரு தீர்ப்பு ஏற்படுமென நம்புவதோடு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்படுமெனவும் நம்புகிறேன்' என மருத்துவர் காசிபிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளதாக சனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={91EB52AE-0128-4159-9FFC-F41E4AE2AE4F}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.