Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த மூன்று வார காலத்தில் இலங்கையில் மீன் மற்றும் ஐஸ்கட்டி மழை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மூன்று வார காலத்தில் இலங்கையில் மீன் மற்றும் ஐஸ்கட்டி மழை

[Monday, 2011-04-18 04:22:08]

இலங்கையில் அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் மழையுடன் சேர்ந்து மீன் மழையும் பூமியில் பொழியவிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழையுடன் மீன்கள் வந்து விழுவதைப் பார்த்து இதுவொரு இயற்கை அழிவு அல்லது துர்தேவதைகளின் வெறியாட்டம் என்று எவரும் அஞ்சிவிடலாகாது.

பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு மேலாக சூரியன் சஞ்சரிப்பதனால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலைக்குப் பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால், ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தின் முதல் இரண்டு வார காலத்திலும் திடீரென்று மின்னல் வெட்டுடன் மாலை வேளையில் பெருமழை பெய்வதுண்டு.

இதுபற்றி பல முக்கிய தகவல்களை சிரேஷ்ட காலநிலை ஆய்வாளரும், இலங்கை வளிமண்டல ஆய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான கே. ஆர். அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுவாக, இலங்கையில் மின்னல் தாக்கியதனால் வருடா வருடம் 50 மரணங்கள் ஏற்படுவதுண்டு என்று தெரிவித்துள்ள அபேசிங்க ஏப்ரல், மே மாதங்களிலேயே நாடெங்கிலும் மின்னலுடனான பெருமழை பொழிகின்றன என்று கூறினார்.

இதனால், பிற்பகல் 02 மணி முதல் இரவு 08 மணி வரையில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மழை பெய்யும் போது, எவரும் பெரிய மரங்களின் கீழ் பாதுகாப்பாக நிற்கக் கூடாது. திறந்த வெளியில் நடக்கக் கூடாது. சைக்கிளில் தன்னந்தனியாக செல்லக்கூடாது. மின்னல் வெட்டும் போது வீட்டு ஜன்னல்களில் இருந்து அதனை பார்க்கக் கூடாது.

இவ்விதம் அவதானமாக இருந்தால், மின்னல் தாக்குதல்களில் இருந்து தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

மழையும், மழையுடன் இடி முழக்கம், மின்னல் வெட்டுக்களின் போது சாதாரண தொலைபேசியையோ, கையடக்கத் தொலைபேசியையோ உபயோகிப்பது பேராபத்தை ஏற்படுத்தும். தொலைபேசி மின் அலைவரிசையில் மின்னல் இணைந்து கொண்டால் அதனை பயன்படுத்துவோர் மரணிக்கும் அளவுக்கு பேராபத்தை எதிர்நோக்குவார்.

சமீபத்தில் மத்துகம பிரதேசத்தில் மழை பொழிந்து கொண்டிருந்த போது, வீதியில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்தார். இன்னுமொருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்குதல் பொதுவாக தாழ்ந்த பிரதேசத்திலும், சப்ரகமுவ பிரதேசத்திலும் மலையகத்திலும், தெற்கின் நெலுவ பிரதேசத்திலும் அதிகமாக இடம்பெறு கின்றது.

மத்துகம பிரதேசமும் மழை அதிகமாகக் காணப்படும் பகுதி என்பதனால் அங்கும் மின்னல் தாக்கும் ஆபத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

தமிழ் சிங்கள புத்தாண்டுக் காலத்தில் எல்லோரும் மகிழ்ச்சியடைவதுண்டு. ஆனால், இந்தக் காலப் பகுதியில்தான் மின்னல் போன்ற காலநிலையில் கொடூரங்கள் கோரத் தாண்டவமாடி மக்களின் உயிரைப் பறிக்கும் வகையில் ஆபத்துக்கள் உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன.

இதனால், நாம் அவதானமாக இருப்பது அவசியம். மழை பெய்யும் போது வானொலிப் பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளை செயற்படுத்தக் கூடாது. அவையும் அந்த வீடுகளுக்கு மின்னல் தாக்குவதற்கு உறுதுணை புரியலாம்.

இந்தக் காலத்தில் டோனிடோ என்ற சூறாவளிக் காற்று உருவாகுவதனால்தான் மின்னல் தாக்கங்களும் மழையும் அதிகமாக ஏற்படுகின்றன. டோனிடோ காற்று ஒரு பிட்டுக் குழலைப் போன்று தரையில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சுழன்று கொண்டே உயர்ந்து திடீரென்று அது உருவாகிய இடத்தை அடுத்துள்ள 5 கிலோ மீற்றர் பிரதேசத்தில் இடி மன்னலுடனான பெரு மழையுடன் வந்து தாக்கி பேரழிவை ஏற்படுத்துகின்றது.

ஒரு பிரதேசத்தில் டோனிடோ தாக்கி வீடுகளையும் கட்டடங்களையும் சின்னாபின்னப்படுத்தினாலும், அதிலிருந்து சுமார் 3, 4 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள கட்டடங்களும் வீடுகளும் ஆபத்தின்றி பாதுகாப்பாக இருப்பதை நாம் அவதானிக்கலாம்.

இந்த டோனிடோ காற்று கடலில் உள்ள மீன்களை நீருடன் அள்ளிவந்து ஆகாயத்திற்கு எடுத்துச் சென்று, பின்னர் மீன் மழையை பொழிய வைக்கின்றது. மீன்களுடன் ஐஸ்கட்டி மழையும் இந்தக் காலத்தில் பூமியில் வந்து விழுவதுண்டு.

மின்னல் வெளிச்சம் தெரிந்து 15 வினாடிகளில் இடி முழக்கத்தின் சத்தம் கேட்டால் மின்னல் தாக்கிய இடம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். அதுபோன்று மின்னல் வெளிச்சம் வந்து 30 வினாடிகளில் இடி முழக்கம் கேட்டால் மின்னல் தாக்கிய இடம் 10 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும்.

இவ்விதம் மின்னல் வெளிச்சம் வந்து 3 வினாடிகளில் இடி முழக்கம் கேட்டால் மின்னல் தாக்கிய இடம் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இன்றிலிருந்து அடுத்த மூன்று வாரங்களுக்கு பொதுமக்கள் மாலை வேளையில் பெய்யும் மழை, இடி, மின்னல் முழக்கத்தின்போது அவதானமாக இருந்தால் ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.... அடுத்த மூன்று கிழமைக்கு, ஸ்ரீலங்காவில் இருப்பவர்கள் மீன் வாங்கத் தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.