Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நினைத்ததை செய்வேன் - எவரும் கருத்துக் கூறும் வரை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் - கோத்தாபய

Featured Replies

நினைத்ததை செய்வேன் - எவரும் கருத்துக் கூறும் வரை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் - கோத்தாபய

தான் நினைத்ததை செய்பவர் எனவும் எவரும் கருத்துக் கூறும் வரை பார்த்துக் கொண்டிருப்பவர் அல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரிதா லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எவருக்கும் பான்-கீ-மூனின் அறிக்கை எதிராக எதனையும் செய்ய முடியும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளின் தேவைக்கு அமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை. யுத்த காலத்தில் கூட விசேட பொறுப்புடன் செயற்பட்ட நாடு இலங்கை.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என அண்மையில் ரஷ்ய தூதுவர் தெரிவித்தார். பிரபாகரனின் தேவைதான் அறிக்கையில் உள்ளது.

இலங்கையை அடிப்படைவாத பௌத்த நாடாக மாற்ற போவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது எனவும் கோத்தபாய கூறியுள்ளார். அதேவேளை கே.பி குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய மிகவும் சிரமப்பட்டு கைதுசெய்யப்பட்டவர் எனவும் அவர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்பு தரப்பினரோ இலங்கை மக்களின் மனித உரிமைகளை மீறவில்லை - உடுகம ஸ்ரீபுத்தரக்கித தேரரர்:-

இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்பு தரப்பினரோ இலங்கை மக்களின் மனித உரிமைகளை மீறவில்லை என அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீபுத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார். அமைதியாக வாழ்ந்த நாட்டு மக்களுக்கு எதிராக செயற்பட்ட பயங்கரவாத குழுவை மாத்திரம் அரசாங்கம் அடக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பு மனித உரிமைகளை மீறியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது பொருத்தமற்றது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து தரப்பிடமும் விசாரணைகள் நடத்துவது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் மாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

22 Apr 2011

நன்றி

மனிதன்

கே.பி குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய மிகவும் சிரமப்பட்டு கைதுசெய்யப்பட்டவர் எனவும் அவர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

யாராவது இத நம்புறீங்களா?

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

  • கருத்துக்கள உறவுகள்

ஆணவத்தின் அதி உச்சம்,

அழிவின் ஆரம்ப அத்தியாயம்!

மனச்சாட்சி இந்தக் கயவனைக்

கடிக்க ஆரம்பத்திருக்கின்றது!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா ஒரு குட்டி பிச்சை கார தீவில் இருந்து கொண்டு எவ்வளவு பம்முறார் இந்த கொத்திபாய.

இந்த லூசன் அமேரிக்கவில பெட்ரோல் ஸ்டேசன்ல ஈ ஓட்டினவன் இப்ப சும்மா படம் காட்டுறான்.

இவங்கள நாட்டை விட்டு வெளிக்கிடாமல் பண்ணவேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.