Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விற்பனைக்கு வந்த இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகள் உடன் மீளப் பெறப்பட்டன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விற்பனைக்கு வந்த இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகள் உடன் மீளப் பெறப்பட்டன! ஏன் என்று தெரியாமல் வாசகர்கள் ஏமாற்றம்!!

Posted by admin2 On May 3rd, 2011 at 5:16 pm /

மாற்றுக் கருத்துக்கள் அடங்கிய சஞ்சிகை என கருதப்படுகின்ற “இருக்கிறம் – ஒரு பொல்லாப்புமில்லை” என்ற சஞ்சிகை திங்களன்று வழமைபோல விற்பனைக்காக வெளியிடப்பட்டதன் பின்னர் சில மணித்தியாலங்களிலேயே விற்பனை நிலையங்களில் இருந்து அதன் அனைத்துப் பிரதிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் இது நடைபெற்றுள்ளது.

இந்த சஞ்சிகையை வாங்குவதற்காகச் சென்ற வாசகர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்ட இதன் பிரதிகளை விநியோகஸ்தர்களே விற்பனை ஏஜென்டுகளிடமிருந்து மீளப் பெற்றுச் சென்றதாக பத்திரிகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாந்தி சச்சிதானந்தத்தை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்தச் சஞ்சிகை அண்மைக்காலமாக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் என்ற, வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் நிறுவனம் வெளியிட்டு விநியோகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

02.05.2011 என திகதியிடப்பட்டு திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்த இருக்கிறம் சஞ்சிகை இதழில் பல கட்டுரைகளில் ஒன்றே இவ்வாறு வெளியிடப்பட்ட சஞ்சிகையின் பிரதிகளை மீளவும் பெறுவதற்கான காரணம் என கூறப்படுகின்றது.

மாற்றுக் கருத்துக்களுடன் மக்களின் வாழ்க்கையில் மறைந்து கிடக்கின்ற பல பக்கங்களை வெளியில் கொண்டு வந்த இந்த சஞ்சிகை தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடறிந்தவராகிய இளையதம்பி தயானந்தாவினால் ஆரம்பிக்கப்பட்டு நின்றுபோயிருந்த இருக்கிறம் சஞ்சிகை மீண்டும் பெரும் நிதி நெருக்கடியான சூழ்நிலையில் வெளிவந்து கொண்டிருந்தது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் வெளியிடப்பட்ட இந்தச் சஞ்சிகை பின்னர் அண்மையில்தான் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டட்டினால் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சஞ்சிகையின் ஆசிரியர் அருளானந்தம் சஞ்சித். வர்ஷ்னி கனகரட்னம், தவநாதன் இரவிவர்மன் ஆகியோர் செய்தி ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றார்கள்.

விற்பனைக்கு வந்தும் விற்பனை செய்யப்படாமல் தடுக்கப்பட்ட இருக்கிறம் இதழின் முகப்புத் தோற்றம் இதுதான் ———-

i01231x300.jpg

saritham.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிவந்த “இருக்கிறம்” மீளப்பெறப்பட்டதன் காரணம் ‘சக்தி ரீவி சத்தியப்பிரியாவின் செவ்வி’ (பிரதி இணைப்பு)!

Posted by admin2 On May 4th, 2011 at 4:06 pm / No Comments

மாற்றுக் கருத்துக்களுக்கான சஞ்சிகையாகிய இருக்கிறம் சஞ்சிகையின் விருந்தினர் பக்கம் என்ற பகுதியில் வெளியிடப்பட்ட நேர்காணல் கட்டுரை ஒன்றே அதன் மே மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட்ட இதழின் பிரதிகளை விற்பனை செய்யாமல் மீளப் பெறப்பட்டமைக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி நிறுவனமாகிய சக்தி நிறுவனத்தில் பணியாற்றி பதவி நீக்கப்பட்ட பிரியாவின் நேர்காணலே இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேர்காணலில் சக்தி தொலைக்காட்சி சேவையில் தனது 9 வருடகால அனுபவத்தையும், அங்கு இடம்பெற்றதாக அவர் கருதிய முறைகேடுகள் பற்றியும் பிரியா தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்கள் சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தினரின் கவனத்திற்குச் சென்ற பின்புதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்னதாகவே, இந்த இதழ்களை மீளப் பெறுகின்ற நடவடிக்கை இடம்பெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஊடகவியலாளர்கள் வெளியிடங்களில் இடம்பெறுகின்ற சம்பவங்கள், முறைகேடுகள், ஊழுல்கள், புதிய சங்கதிகள், சாதனைகள் பற்றியே எழுதித் தள்ளுகின்றார்கள். ஆனால் அவர்கள் பணியாற்றுகின்ற ஊடக நிறுவனத்தில் என்ன நடக்கின்றது, அவர்களுக்கு என்ன அநீதி இழைக்கப்படுகின்றது, எத்தகைய வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன என்பது தொடர்பான செய்திகள் தகவல்கள், வெளியில் தெரிவதில்லை.

இதனால் இலங்கையின் தமிழ் ஊடக நிறுவனங்களில் பணியாற்றுகின்ற எத்தனையோ பேர் தமக்கு நேர்ந்துள்ள அநீதிகள், மறுக்கப்பட்டுள்ள உரிமைகள், நீதி என்பவை குறித்து எங்கும் வெளியில் சொல்ல முடியாதவர்களாகக் குமுறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் இருக்கிறம் சஞ்சிகை பிரியாவை நேர்கண்டு அவரது அனுபவங்களையும் கருத்துக்களையும் விருந்தினர் பக்கம் என்ற பகுதியில் நடுப்பக்கச் சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டிருந்தது.

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்கள் தகவல்கள் எந்த அளவிற்குச் சரியானவை என்பது ஒரு புறமிருக்க, ஊடகம் ஒன்றில் திரைமறைவில் பல விடயங்கள் இடம்பெறுகின்றன என்ற தகவலை இது வெளிக்கொணர்ந்துள்ளது.

ஊடகங்கள் என்றால் அங்கு நியாயம், நேர்மை, சேவை, உழைப்பு என்பன இருப்பதாகவே வெளியுலகில் ஒரு தோற்றம் காணப்படுகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது பிரியா போன்றவர்களின் நேர்காணல்களில்தான் வெளிவருவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

இருக்கிறம் சஞ்சிகையில் கிடைத்திருந்த இநத வாய்ப்பும், இந்தப் பணியிலான அதன் கன்னி முயற்சியும் அந்த சஞ்சிகையின் இதழ்கள் விற்பனை செய்யப்படாமல் மீளப் பெறப்பட்டதன் மூலம் தோல்வியிலேயே முடிந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

பிரியாவின் நேர் காணல் கட்டுரை இங்கு நிழல் படமாக வெளியிடப்பட்டுள்ளது.

page1dv.jpg

saritham.com

சத்தியப் பிரியாவை பல ஆண்டுகளுக்கு முன் எனக்கு நன்கு தெரியும். சரிநிகரில் வேலை செய்த ஒரு ஊடகவியலாளரின் தங்கை. மிகவும் துணிச்சலும் இளமையும் நிரம்பியவராக இருந்தா. இறுதியாக சந்தித்தது 2002 இல். சக்தி தொலைக்காட்சி போன்ற குப்பைக்குள் போய் வேலை செய்யும் போதே இவருக்கு சக்தி தொலைக்காட்சி சரிப்படாது என நினைத்தேன். இவ்வளவு காலமும் எப்படி பொறுமையாக வேலை செய்தார் என தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சிரச நிறுவனத்திற்கு இந்த அளவிற்கு அதிகாரம் இருந்தால் பிறகு எப்படி அந்த நிறுவனம் அடிக்கடி தாக்கப்படுகிறது :unsure:

சிரச நிறுவனத்திற்கு இந்த அளவிற்கு அதிகாரம் இருந்தால் பிறகு எப்படி அந்த நிறுவனம் அடிக்கடி தாக்கப்படுகிறது :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.