Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றியப்பு

  • Replies 56
  • Views 7.4k
  • Created
  • Last Reply

நன்றி

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

மேலதிகபடங்களினை இங்கே பார்க்கவும்.http://www.tamilnaatham.com/photos/20060214/TAMILNADU/

தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் வை.கோ விடம் நிறைய கற்று கொள்ள இருக்கு...

வைக்கோவின் பேச்சுக்கு என்று தனி கூட்டம் தமிழ் நாட்டில் இருக்கிறர்கள் மக்களை கவர கூடிய திறமை இருக்கிறது அவரிடம்

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய கவலை தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு என்று தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திருச்சி ஊடகவியலாளர்களிடம் இன்று கருணாநிதி கூறியதாவது:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கவலை தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு. அவர்கள் எங்கள் இதயத்தில் உள்ளனர். எப்போதும் இது போன்ற பிரச்சினைக்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு அளிக்கும்.

புதினம்

  • 1 month later...

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக: மதுரை மாநாட்டில் தீர்மானம்

[திங்கட்கிழமை, 27 மார்ச் 2006, 10:49 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு மதுரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். களப் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி வரவேற்று பேசினார்.

இம்மாநாட்டில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கலந்து கொண்டு தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மான விவரங்கள்:

- பாலஸ்தீனத்தின் விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்பது போல தமிழீழ விடுதலை போராட்டத்தையும் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.

- இலங்கையில் தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்றுள்ள விடுதலை புலிகளின் மீதான தடையை இந்திய அரசு விலக்கி கொள்ள வேண்டும்.

- சிங்கள அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இராணுவ உதவிகளை வழங்க கூடாது.

- ஈழத்தமிழர் அகதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.

- தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள இடதுசாரி இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் மனித உரிமை அமைப்புகளும் தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் தமிழர் இயக்க பொது செயலாளர் தியாகு, உலகத் தமிழர் பேரமைப்பு பொது செயலாளர் பரந்தாமன், பெரியார் திராவிடக் கழகப் பொது செயலாளர்கள் கோவை ராமகிருட்டிணன், விடுதலை ராஜேந்திரன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

-புதினம்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதால் தி.மு.கவில் இணைய மாட்டேன்: கருணாநிதியிடம் சு.ப.வீரபாண்டியன் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கிற நிலைப்பாடு கொண்டிருப்பதால் தன்னால் தி.மு.க.வில் இணைய முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சு.ப.வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக தேர்தலில் நடுநிலை வகிப்பது என்ற பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தின் முடிவை அக்கட்சியின் பொதுச்செயலாளரான சு.ப.வீரபாண்டியன் ஏற்கவில்லை. இதையடுத்து அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் சு.ப.வீரபாண்டியன் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை அம்பத்தூரில் நேற்று புதன்கிழமை இரவு தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தென்னவன் கலைமன்றம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், கவிஞர் அறிவுமதி ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று சு.ப.வீரபாண்டியன் பேசியதாவது:

"பொடா" எனும் கொடூரச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டோரில் ஜெயலலிதாவை எதிர்க்கிற ஒற்றைக் குரலாக நான் பேச வந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்கான நான் பேச வந்திருக்கிறேன்.

ஜுனியர் விகடன் ஏட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. எனக்கு வாகன வசதிகளையும் பெரிய பதவி ஒன்றையும் தி.மு.க. தர உள்ளதாக சொல்லியிருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் தொண்டன் என்பதை விட- தலைவர் நெடுமாறனின் நம்பிக்கைக்குரியவன் என்பதை விட எனக்கு வேறு எந்த பெரிய பதவியும் தேவையில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கலைஞர் அவர்களைச் சந்தித்து அரை மணிநேரம் உரையாடினேன். அப்போது அருகில் இருந்தவர்கள் தி.மு.க.வில் சேருகிறீர்களா? என்று கேட்டனர்.

நான் பார்ப்பன எதிர்ப்பாளன்- தமிழீழ விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கிறவன். இந்த இரண்டு கொள்கைகளோடு உள்ள நான் தி.மு.க.வில் இணைய முடியாது. தி.மு.க.வுக்கும் அது முடியாதது என்று சொல்லிவிட்டேன்.

அதற்குப் பதிலளித்த கலைஞர், எங்கிருந்தாலும் என்ன.. நீ...இராம.சுப்பையாவின் மகன்...என் பிள்ளைதான் நீ என்று சொன்னார். இதைவிட பெரும் பதவி எனக்கு வேறு என்ன தேவை? என்றைக்கும் தந்தை பெரியாரின் தொண்டனாகவும் தலைவர் நெடுமாறனின் நம்பிக்கைக்குரியவர்களாகவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.