Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காரைநகர் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு விரைவில் நட்டஈடு; காணி பயன்பாட்டுத் திணைக்களத் திறப்பு விழாவில் உறுதியளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு விரைவில் நட்டஈடு; காணி பயன்பாட்டுத் திணைக்களத் திறப்பு விழாவில் உறுதியளிப்பு

news

காரைநகர் பலகாடு என்ற இடத்தில் அமைந்துள்ள கடற்படை முகாம் காரணமாகக் காணிகளை இழந்த காணி உரிமையாளர்களில் ஒரு பகுதியினருக்கு இரண்டு வாரகாலத்துக்குள் நட்டஈடு வழங்கப்படவுள்ளது. காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் இந்த உறுதிமொழியை யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கு வழங்கியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காணி அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சிறிபால கமலத் மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் காணி தொடர்பான விடயங்கள் குறித்த கலந்துரையாடல் அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

காணி அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சிறிபால கமலத், அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ், காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களப் பணிப்பாளர் திருமதி பி.எம். சாந்தி பெர்னாண்டோ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர், யாழ். அரச அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள், உதவி அரசாங்க அதிபர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.இதன்போது காரைநகரில் உள்ள காணிகளை இழத்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என யாழ். அரச அதிபர் கேட்டுக் கொண்டார். அரச அதிபரின் இந்த வேண்டுகோளுக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் இந்த உறுதி மொழியை வழங்கினார்.

கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் காரைநகர் பலகாடு என்ற இடத்தில் கடற்படை முகாம் அமைப்பதற்காகப் பொது மக்களின் 1230.25 பரப்பு கொண்ட நிலம் இலங்கைக் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதிப் பொது மக்களின் 132 காணித் துண்டுகள் அபகரிக்கப்பட்டன.காணிகளை இழந்த உரிமை யாளர்கள் நட்டஈடு வழங்கக் கோரி விண்ணப்பித்தனர். அவ் வாறு விண்ணப்பித்தவர்களில் 55 பேருக்கே இரண்டு வார காலத்துக்குள் நட்டஈடு வழங்கப்படவுள்ளது. இந்த 55 நிலஉரிமையாளர்களுக்கும் 57.258 மில்லியன் ரூபா நிதி நட்டஈடாக வழங்கப்படவுள்ளது. இது இரண்டு வாரத்துக்குள் வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.அத்துடன் இந்தக் கலந்துரையாடலின்போது திறந்து வைக்கப்பட்ட மாவட்ட காணிப் பதிவு திட்டமிடல் அலுவலகத்தின் மூலம் சிறப்பான சேவையை வழங்க அந்த அலுவலகத்தில் புவியியல் தகவல் முறைமை என்ற நவீன வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் அரச அதிபரிடம் உறுதியளிக்கப்பட்டது.

மேலும், "நிலசக்தி" என்ற அலுவலகத்தை நிறுவி அதன் மூலம் யாழ். மாவட்டத்தில் காணி அற்றவர்களுக்குப் காணி வழங்கி ஆட்சி உரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் நடவடிக்கையாக நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் அதனை நிறுவி மக்களுக்குக் காணி வழங்க நடவடிக்கை எடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், கோயில் பராமரிப்பில் உள்ள காணிகளில் குடியேறியுள்ள மக்களுக்குக் காணி வழங்குவது தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இதில் ஆராயப்பட்டது.

06 மே 2011, வெள்ளி 7:55 மு.ப

uthayan

அவற்றை எல்லாம் வெறும் கானிகள் என்று சொல்லி விடமுடியாது.

மூதாதையின் மூதாதையர் வாழ்ந்த அற்புதமான ஆதிகால வடிவமைப்பை கொண்ட அழகான வீடுகள். எல்லாமே பரம்பரையின் வாழ்விடங்கள்.

ஒரு வீடு இருந்தது அற்புதமானது. பாண்டவர் பூமி படத்தில் அதே அமைப்பை கொண்ட வீடு வருகிறது.

எல்லாம் அழித்து நாசம் செய்து இப்போ அந்த காணிகளில் விமான ஓடு தளம் அமைத்துள்ளார்கள். நினைத்தால் கண்ணீர் வரும். யாரிடம் சொல்வது.

இவ்வளவும் அறிந்தது ஒரு யாழ் வியாபார ஸ்தாபன உரிமையாளரின் மகன் எனது நண்பர்

.

பலிகாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே வசிக்கிறார்கள். வீடுகள் காடுகளாக இருக்கின்றன. கட்டாக்காலி மிருகங்கள்தான் தங்குகின்றன. ஒரு காலத்தில் யாழ் மற்றும் தென்னிலங்கைப் பகுதிகளில் அதிகளவு வியாபாரமுயற்சிகளைச் செய்து வந்தவர்கள் இங்கு வாழ்ந்தார்கள். வட கிழக்கில் அதிகளவில் பணவசதி உள்ளவர்களைக் கொண்ட ஊராக இருந்தது. இன்று ஊரில் எஞ்சியுள்ளவர்களில் குறிப்பிடத்தக்க அளவு வறுமையில் வாழ்கிறார்கள்.

என் பூட்டியின் வீடு முச்சார் அமைப்புக் கொண்டது. நடுவில் இரண்டு மா மரங்கள். வீட்டைச் சூழ மாவும் வேம்பும் நிற்கும். அந்தக் குளுமையான சூழலில் நாங்கள் ஓடிதிரிந்து விளையாடியது மறக்க முடியாது.

பேத்தியின் வீடு "ட" அமைப்பு. அந்த "ட" வின் திறந்த பகுதிக்கும் கூரை போட்டு மூன்று இரும்பு சுருக்குகேற் போட்டிருந்தார்கள். சுருக்குகேற்றை திறந்துவிட்டால் பெரிய திறந்த விறாந்தை போல் காணப்படும். காற்று நன்றாக வீசும். வெளியூர் செல்லும் போது பேத்தியின் கார்களை இந்த விறாந்தையில் சுருக்குகேற்றினூடாக கொண்டுவந்து பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்வார்கள்.

இன்று இந்த வீடுகளில் கதவு நிலை கூட இல்லை.

என் பிள்ளைக்கும் இந்த ஊரின் பெயர்கூட வாயில் பூராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.