Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1988-ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பழமை தழுவும் பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாமிடத்திற்கு வரும் சாத்தியம் உள்ளதாகக் கணிப்புகள் தெரிவித்தன.

பழமை தழுவும் கட்சி சிறுபான்மை ஆட்சியமைக்குமென்று கருத்துக்கள் கூறினாலும், இத்தேர்தலில் தனிப்பெரும் பலத்துடன் வென்றுள்ளது. 1988-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக பழமை தழுவும் கட்சி 167 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கணிப்புகளின்படி, புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று கூறினாலும், 102 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியை ஜாக் லேடன் தலைமையிலான இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனேடிய வரலாற்றிலேயே இதுவே இக்கட்சியின் சாதனை. தாராளவாதக் கட்சி என அழைக்கப்படும் லிபரல் கட்சி 34 ஆசனங்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இக்கட்சிக்கு வரலாற்றில் கிடைத்த பலத்த அடியென்றே இதனைக் கூற வேண்டும். சுதந்திர கியூபெக் கூட்டுக் கட்சி நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கியூபெக் மாநிலத்தில் இக்கட்சி பல காலங்களாக செல்வாக்குடன் இருக்கும் கட்சியென்பதுடன், கியூபெக் பிரிவினையை ஆதரிக்கும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமைக் கட்சி தனது வரலாற்றில் ஒரு ஆசனத்தை கைப்பற்றி, அதன் தலைவரை நாடாளுமன்றம் அனுப்புகிறது என்கிற செய்தி பல பசுமை இயக்க தோழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியே. தாராளவாதக் கட்சி மற்றும் சுதந்திர கியூபெக் கூட்டுக் கட்சி தலைவர்கள் தமது சொந்தத் தொகுதிகளிலேயே படுதோல்வி அடைந்துள்ளார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது இக்கட்சிகளின் தலைமைகளின் பலவீனமான கொள்கைகளும், தெளிவில்லாத பேச்சுக்களுமே காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். அத்துடன், தாராளவாதக் கட்சியின் படுதோல்விக்கு முக்கிய காரணம் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமயிலான சிறுபான்மை அரசை கவிழ்க்க காரணமாக இருந்தது என்கிற கருத்தும் பரவலாக கனேடிய மக்களிடம் புரையோடிப் போயிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குடியேற்ற வாசிகளுக்கு ஆப்பு வைப்பாரா ஹார்ப்பர்?

குடியேற்ற வாசிகளுக்கு சொம்ம சொர்ப்பனமாக இருப்பவர் ஹார்ப்பர் என்கிற வாதம் பலதரப்பட்ட குடியேற்ற வாசிகளிடம் இருக்கிறது. இதற்கு அமைந்தால்போல்தான், கடந்த சில வருடங்களாக குடியேற்ற வாசிகளுக்கு எதிராக தொடர்ந்தும் பேசி வந்துள்ளார் ஹார்ப்பர். பெரும்பான்மை ஆட்சியமைத்தால், அடுத்த 90 நாட்களுக்குள், சீ-49 எனும் புதிய சட்டத்தை அமுலாக்குவோம் என்று கூறி பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் பழமை தழுவும் கட்சியினர். பெரும்பான்மை ஆட்சியாளர்களினால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமது இன்னுயிர்களை பணயம்வைத்து கனடா போன்ற நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்ளும் மக்களை நாட்டுக்குள் வரவிடாமல் துரத்திவிடும் அதிகாரத்தை கொடுக்கும் சட்டமாகவே சீ-49 இருக்கப் போகிறது.

பல ஆங்கிலேயினர் ஹார்ப்பர் அவர்களின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர். புதுக் குடியேற்றவாசிகளுக்கு கனடாவில் புகளிடம் கொடுக்கக் கூடாது என்பது இவர்களின் பேரவா. இவர்களின் நினைப்புக்கு ஆக்கம் கொடுக்கிறார் ஹார்ப்பர் என்றால் மிகையாகாது. குறித்த ஆங்கிலேயர்களும் ஒருகாலத்தில் வந்தேறு குடிகளே என்பதை மறந்து, இம்மண் ஏதோ தமது பூர்வீகம் என்கிற தோரணையில் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆதங்கமான விடயமாக இருக்கிறது. மேலும், கனடாவிற்கு கப்பல்களில் எவரையேனும் கடத்திக் கொண்டுவருவதையும் அத்துடன் கப்பல் மாலுமிகளை குற்றவியல் சட்டங்களைப் பாவித்து பாரிய தண்டனைகளை வழங்கவும் குறித்த சீ-49 எனும் புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இச்சட்டத்தை அமுல்படுத்த பழமை தழுவும் கட்சி கடந்த வருடம் முயற்சிகளை எடுத்தது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததினால், இச்சட்டத்தை அமுல்படுத்த முடியாமல் இருந்த ஹார்ப்பர் அரசு இந்த வருடத்தில் நிறைவேற்றும்.

பழமை தழுவும் கட்சி ஏழைகளுக்கோ அல்லது நடுத்தர மக்களுக்கோ உதவிக்கரமாக இருக்கப்போவதில்லை. செல்வந்தர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்குமே இக்கட்சியினால் பலன் கிடைக்கப் போகிறது. அரசியல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், பழமை தழுவும் கட்சியின் கொள்கை என்னவென்றால், “வேலைக்குப் போய் சம்பாதித்து பணத்தை கொண்டு வா, நான் சாப்பாடு போடுகிறேன்", இக்கொள்கையின் அடிப்படையிலேயே இக்கட்சி இயங்குகிறது. ஆனால், தாராளவாதக் கட்சியின் கொள்கை என்னவென்றால், “சாப்பிட்டுத் தென்பாக இருந்தால்தான் வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியும்...ஆகவே, நான் சாப்பாடை போடுகிறேன், சாப்பிட்ட பின்னர் வேலைக்குப் போய் உழைத்து பணத்தைக் கொண்டு வா", என்கிற தாராளவாத கொள்கையுடைய கட்சியே இக்கட்சி.

பட்டினியும் பசியுடனும் கனடா நாட்டை தேடிவரும் குடியேற்ற வாசிகளுக்கு ஆப்பு வைப்பார் ஸ்டீபன் ஹார்ப்பர் என்பது மட்டும் தெளிவாகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் அக்டோபர் 2015-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் ஹார்ப்பர் அவர்களின் அரசு தான் நினைத்தது அனைத்தையும் 2015-ஆம் ஆண்டுக்குள் செய்துவிடும் என்பது மட்டும் உண்மை. ஹார்ப்பர் தலைமயிலான அரசின் வேட்டையாடும் நிகழ்ச்சி நிரலுக்கு புதிய குடியேற்ற வாசிகளும், பல வேற்றின மக்களுமே பலிக்கடா ஆக்கப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

உரத்துக் குரல்கொடுப்பாரா தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்?

கொடிய சட்டங்களை கனேடிய தமிழர்களுக்கு எதிராக பாவித்தும், இனத்துவேச வாதத்தை முன்வைத்துப் பேசிவந்த ஹார்ப்பர் தலைமயிலான பழமை தழுவும் கட்சி இந்தத் தடவை பெரும்பான்மை ஆட்சி அமைத்திருக்கிறது. இவ் நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது புதிய ஜனநாயகக் கட்சி. ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் கடந்த தேர்தல்களில் மூன்றாம் இடத்திலிருந்த புதிய ஜனநாயகக் கட்சி இந்தத் தடவை முதன் நிலைக்கு வந்திருப்பதுடன் 18,000-க்கும் மேற்பட்ட வாக்குகளை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

கனேடிய தமிழர்களைப் பொறுத்தமட்டில், இவ்வெற்றியானது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இருக்கிறது. ராதிகா சிற்சபேசன் போன்று பல தமிழ் இளையோர்கள் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 2006-இல் இடம்பெற்ற தேர்தலில், தாராளவாதக் கட்சி 30,000 வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றிபெற்ற தொகுதியில், 18,000 அதிகமான வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார் இந்தத் தடவை ராதிகா என்பதைப் பார்க்கும்போது, இந்தத் தேர்தலில் முன் எப்போதையும் விட பழமை தழுவும் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. ஏறக்குறைய 5,000 வாக்குகளால் பழமை தழுவும் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார் தமிழ் வேட்பாளர். ஆகவே, இப்பகுதியில் வசிக்கும் மக்கள், குறித்த பிரதான மூன்று கட்சிகளுக்கும் கணிசமாக வாக்குகளைப் போட்டு வாக்குகளை சிதறடித்ததனால் தமிழ் வேட்பாளர் வெல்லும் நிலை உருவானது.

எது எப்படியென்றாலும், தமிழ் வேட்பாளப் பெண்மணியொருவர் கனேடிய பாராளுமன்றம் சென்று விட்டார். இது, தமிழர்களுக்குக் கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றியே. ஜாக் லேடன் தமிழர்களின்பால் மிகுந்த கரிசனை கொண்டவர். சிங்கள அரசினால் ஈழத் தமிழர்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட ஒவ்வொரு வேளையிலும், தமிழர்களின் பக்கம் நின்று குரல் கொடுத்தே வந்துள்ளார் ஜாக் லேடன். இப்போது, இவரின் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ள ராதிகா எவ்வாறு, தனது இனம் அழிவைச் சந்தித்து காத்திருக்கும் வேளையில் செயற்படுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒட்டுமொத்த கனேடிய தமிழர்களையும் பயங்கரவாதிகள் போன்றதொரு கண்ணோட்டத்துடனேயேதான் பழமை தழுவும் கட்சியினர் இதுவரை காலமும் பார்த்து வந்துள்ளார்கள். சிறுபான்மை அரசை நடத்தி வந்த வேளையிலையே உலகத் தமிழர் அமைப்பு போன்ற நிறுவனங்களை தடை செய்தும், பல அப்பாவித் தமிழர்களை அவமதிக்கும் கடும் சட்ட நடவடிக்கைகளைத் தனது காவல்துறையின் துணையுடன் செயலாற்றி வந்த இக்கட்சி, இப்போது பெரும்பான்மை ஆட்சி அமைத்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது முன்னைவிட இனிவரும் காலங்களில் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.

ஹார்ப்பர் தலைமையிலான அரசு தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் போது, எவ்வாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செயல்வடிவம் கொடுப்பார் என்பதனையும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தனது தொகுதி மக்களுக்காக மட்டும் குரல் கொடுத்துவிட்டு, அனைத்து அரசியல்வாதிகளையும் போல் இவரும் இருந்துவிடுவாரா அல்லது தண்ணியிலும் விட இரத்தம் தடிப்பானது என்பதை நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஒன்றுமட்டும் நிச்சயம் என்னவென்றால், பழமை தழுவும் கட்சிக்கு அளிக்கப்பட்டிருக்கும் தனிப்பெரும் பலம் என்பது இராணுவ ஆட்சியாளர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் போன்றது. குறிப்பாக, இப்பலத்தினூடாக புதிதாகக் குடியேற எத்தனிப்பவர்களுக்கும், சில குறிப்பிடப்பட்ட இனத்தினருக்கெதிராக இராணுவ பலம்கொண்ட கரங்களினால் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது மட்டும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்க வேண்டுமாயின், தமிழர்கள் போன்ற புதிய குடியேற்ற வாசிகள் விழிப்பாக இருக்க வேண்டும்.

http://www.thedipaar.com

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.