Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் "ஈழத் தமிழர் உரிமை கருத்தரங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கடந்த வியாழக்கிழமை (29.12.05) ஈழத் தமிழர் உரிமை-சமாதான வழித் தீர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரசுவதி தலைமையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் பங்கேற்றோர் ஆற்றிய உரை:

பேராசிரியர் சரசுவதி:

ஈழத்திலே பதற்றமும் இராணுவ வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கிற நிலையில் நாம் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். ஈழத்தில் தமிழர்களின் மனித உரிமைகள்- வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் மனித உரிமை குறித்து அக்கறை கொள்கிற நாம் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

சமாதான காலத்திலும் கூட ஈழத் தமிழர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்பட்டதுமின்றி வன்முறைகள் திணிக்கப்பபட்டன என்பது சோகமானது.

சமாதானத்தைக் கொண்டு வந்தவர்களே தமிழர்கள்தான். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் கிறிஸ்துமசை ஒட்டி தம்பி பிரபாகரன்தான் இந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார். அவர் போர் நிறுத்தத்தை அறிவித்த போது அவர் வலுவற்ற நிலையில் ஒன்றும் இருக்கவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனையிறவுப் போரையும் கட்டுநாயக்கா விமான நிலையத்தைத் தகர்த்த கையோடும் இராணுவச் சமநிலையில் நின்று போர் நிறுத்தத்தை அறிவித்தார் தம்பி பிரபாகரன்.

நோர்வே நாட்டின் ஏற்பாட்டில் அமைதிப் பேச்சுகள் நடைபெற்றன. ஆனால் பேச்சுகளுக்கு என்ன நேர்ந்தது? அமைதிப் பேச்சுவார்த்தைகளிலே மேற்கொள்ளப்பட்ட எந்த முடிவையுமே இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

முக்கியமாக அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களினது குடியிருப்புகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இலங்கை இராணுவம் வெளியேற வேண்டும் என்பதையோஇ இதர தமிழ்க் குழுக்களினது ஆயுதங்களைக் களைய வேண்டும் என்பதையோ இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த இரண்டும்தான் தமிழர்களினது அன்றாடா வாழ்க்கைக்குஇ இயல்பான வாழ்க்கைக்கு அடித்தளமானது. 4 ஆண்டுகால சமாதான காலம் எனப்படுகிற இந்தக் காலத்தில் இதை நிறைவேற்றாத காரணத்தால் தமிழ் மக்கள் வேறுவழியின்றி இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இராணுவமே வெளியேறு! எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்று பொங்கு தமிழ்ப் பிரகடனங்களை வெளியிட்டார்கள். எந்த ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்தையும் நசுக்கியே பழகிப் போன சிங்கள அரசு இந்தப் போராட்டங்களையும் விட்டுவைக்கவில்லை.

இதையடுத்துதான் மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் பகுதிகளில் உள்ள பிற இயக்கங்களின் ஆயுதங்கள் பறிக்கப்படாததால் பத்திரிகையாளர்கள்இ நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டார்கள்.

பேச்சுவார்த்தைகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்ற இடைக்கால அமைப்பை பிரபாகரன் முன்வைத்தார். இது அவர்கள் கோரிய தனிநாடும் அல்ல. ஒரு இடைக்கால ஏற்பாடுதான். இதையும் ஏற்றுக்கொள்ள அன்றைய அரச தலைவர் சந்திரிகா மறுத்தார். யு.என்.பி. ஆட்சியைக் கலைத்தார்.

தமிழகத்திலும் ஈழத்திலும் பல ஆயிரம் பேரை பலி கொண்ட சுனாமிக் கொடுமை நடந்த போது இலங்கைக்கு உதவி வழங்க பல நாடுகள் முன்வந்தன.

ஈழத்தின் 70 சதவீதப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் பகுதியில் சுனாமி நிவாரணங்களை மேற்கொண்ட வேண்டுமானால் விடுதலைப் புலிகளோடு இணைந்துதான் செயற்பட வேண்டும். அது யதார்த்தமானது.

இதை உணர்ந்துதான் சர்வதேச நாடுகள் இலங்கை அரசும் புலிகளும் இணைந்து செயற்படுகிற ஒரு அமைப்பை - அதை ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு என்று சொல்கிறார்கள்.

வீடுகளையும் உயிர்களையும் இழந்து அவதிப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் தருவதற்குத்தான் இந்த அமைப்பு. இந்த அமைப்பு நம்ம ஊர் கிராம சபை அளவிற்கான அதிகாரம் கொண்டது கூட கிடையாது. இந்த அதிகார அமைப்பைக் கூட அதாவது ஒரு சிறு துரும்பைக் கூட- தமிழன் செத்தாலும் தண்ணீர்கூட தரமாட்டேன் என்கிற மாதிரியாக இந்த அமைப்பையும் சிங்களவர்கள் செயல்படுத்தவிடவில்லை.

ஈழத்தில் மீண்டும் இன அழிப்புப் படுகொலையானது புதிய அரச தலைவராக சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்த மகிந்தா ராஜபக்ச பொறுப்பேற்ற உடனே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத

இணைப்புக்கு நன்றி தூயவன்.

சந்தோசமா இருக்கு வாசிக்கேக்க

தகவலுக்கு மிக்க நன்றி தூயவன். விடிவுக்கான அறிகுறிகள்...

தகவலுக்கு மிக்க நன்றி தூயவன். விடிவுக்கான அறிகுறிகள்...

சரியா சொன்னிங்க 8)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தான் உண்மையான பாசம் கொண்டவர்கள். அதை விட்டு விட்டு, அரசியலுக்காக தினமும் கொள்கை மாற்றுபவர்களின் முகங்கள் கிழிக்கப்படும்.

இவர்கள் தான் உண்மையான பாசம் கொண்டவர்கள். அதை விட்டு விட்டு, அரசியலுக்காக தினமும் கொள்கை மாற்றுபவர்களின் முகங்கள் கிழிக்கப்படும்.

சரியாச் சொன்னீர்கள்

இணைப்புக்கு நன்றிகள் தூயவன்.

தமிழகத் தமிழர் எங்களை உறவுகளாய்த்தான் பாக்கிறார்கள்...... நண்றி துயவன் இணைப்பிற்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.