Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் சட்டவிரோத நிதிச்சேகரிப்பில் 1983 தொடக்கம் ஈடுபட்டதாக நெதர்லாந்து ஊடகம் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் சட்டவிரோத நிதிச்சேகரிப்பில் 1983 தொடக்கம் ஈடுபட்டதாக நெதர்லாந்து ஊடகம் தெரிவிப்பு

செவ்வாய், 24 மே 2011 08:50

தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததை நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள் என்று நெதர்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் நெதர்லாந்தில் உள்ள சுமார் 10 ஆயிரம் புலம்பெயர் தமிழர்களிடம் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதை நெதர்லாந்து நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்களின் குடும்பங்களின் மாதாந்த வருமானங்களை அறிந்து வைத்திருந்த விடுதலைப்புலிகள், அவற்றை பல்வேறு வழிகளில் வரி என்ற பெயரில் நிதி அறவிட்டு வந்துள்ளதனர். விளையாட்டுப்போட்டிகள், வைபவங்கள், அதிஷ்ட இலாப விற்பனைகள் ஆகியவற்றின் மூலமும் விடுதலைப்புலிகள் நிதி சேகரித்து இருக்கின்றனர்.

விடுதலைப்புலிகள் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் மிகத் தீவிரமாக பல வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். இதற்காக ஒவ்வாரு குடும்பத்தினரிடமிருந்தும் 2 ஆயிரம் யூரோ வரை கோரியுள்ளனர்.

நிதி தருகின்றவர்களுக்கு விசேட அடையாள இலக்கங்களை கொடுப்பார்கள். இந்த அடையாள இலக்கங்களுடன் இக்குடும்பத்தினர் இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர். பணம் தர மறுப்பவர்களுக்கு அவர்களின் இலங்கையில் உள்ள உறவினர்கள் புலிகளால் அச்சுறுத்தப்படுவார்கள் என்பதையும் நெதர்லாந்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக நெதர்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்தை ஏழு தொகுதிகளாக பிரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் நிதி வசூலிப்பு தலைமை அதிகாரி ஒவ்வொருவரை நியமித்து உள்ளனர். அத்துடன் இந்நிதியை கையாள்கின்றமைக்கு வசதியாக சில ஸ்தாபனங்களை ஆரம்பித்துள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO), தமிழ் இளைஞர் கழகம் (TYO), தமிழ் பெண்கள் கழகம்(TVO) போன்ற ஸ்தாபனங்களை

குறிப்பிட்டுள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இது வரை 38 பேர் புலிகளின் நிதிச் செயல்பாட்டாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் சட்டவிரோத நிதிச்சேகரிப்பில் 1983 தொடக்கம் ஈடுபட்டதாக நெதர்லாந்து ஊடகம் தெரிவிப்பு

செவ்வாய், 24 மே 2011 08:50

tamilcnn

அப்ப இவர்கள் இப்ப என்ன சொல்லவாறார்கள் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்கிறார்களா???

போராட்டமே சட்வீரோதமானது என்றிருந்தபோது நிதியை சேகரிக்க சட்டத்தை எங்கே வாங்குவது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.