Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரு நாய்களுக்காகவும், கொண்டாட்டங்களுக்கும் செலவு செய்யும் அரசு மீள் குடியேற்றப்பட்டவர்கள் பற்றி பாரா முகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரு நாய்களுக்காகவும், கொண்டாட்டங்களுக்கும் செலவு செய்யும் அரசு மீள் குடியேற்றப்பட்டவர்கள் பற்றி பாரா முகம்

FRIDAY, 27 MAY 2011 06:13 SYDNEY HITS: 3

அதிகரிக்கும் விசர்நாய் கடியினை தடுப்பதற்காக தெரு நாய்கள் புகலிடம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 2005ம் ஆண்டு தொடக்கம் தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் வருடம் ஒன்றுக்கு விசர்நாய் கடி மருத்துவத்துக்காக 5 மில்லியன் டொலர்கள்

செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகையால் தெருநாய் புகலிடம் ஒன்றை அமைப்பதன் மூலம் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் முதலாவது திறந்த வெளிப்புகலிடம் அநுராதபுரத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இலங்கையில் சுமார் 2.3 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2000 தொடக்கம் 2500 பேர் வரை தெருநாய் கடிக்கு உள்ளாகுவதாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் 8 பேருக்கு ஒரு நாயென்றளவில் உள்ளதாகவும் ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தக் கொண்டாட்டத்துக்காக மக்களின் வரிப்பணம் இன்று கோடிக் கணக்கில் கொட்டப்படுகிறது. இதுதவிர, போர் பற்றிய கருத்தரங்கின் செலவுக்காக 45 மில்லியன் டொலர்கள் விரையமாக்கப்படுகிறது. யுத்தத்திற்கு செலவழித்த பணத்திர்கு சமனாக யுத்த குற்ற சாட்டை மறைக்கும் சிங்கல அரசின் கொண்டாட்டங்களும், கருத்தரங்குகளும் இரண்டு வருடமல்ல பலவருடங்களாக செய்யவேண்டி வரும். இதற்கு போரின் பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம் என சர்வதேசத்தையும் உள்ளூர் மக்களையும் ஏமாற்றி பிழைக்கும் வேலையில் தான் சிங்களம் இன்று ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் கடந்த நிலையிலும் தப்பிப் பிழைத்து வாழும் வன்னித் தமிழர்களின் பரிதாபத்துக்கு இன்னும் இரங்காத நிலையிலே சிறிலங்கா அரசு உள்ளது. பொறுப்புமிக்க ஒர்; அரசாங்கம் அந்த மக்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறை வெட்கக் கேடானது.

வெற்று வாக்குறுதிகளை வழங்கி மீள்குடியேற்றம் என்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்ட மக்களின் பரிதாப நிலை ஒரு பக்கம்.. கண்ணி வெடி..கண்ணி வெடி என்று கூறிக் கொண்டே காலத்தைக் கடத்தியபடி பல்லாயிரக்கணக்கான தமிழர்கனை இன்னும் முகாம்களில் சிறைப்படுத்தி வைத்திருப்பது மறுபுறம். ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் அந்த மக்களுக்கு அரசு என்ன செய்தது? அண்மையில் யாழ். குடாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியொன்றுக்குச் சென்றிருந்த ஈராக் நாட்டின் தூதுவர் அந்த மக்களின் பரிதாப நிலை கண்டு தன்னிடமிருந்த பணத்தைப் பங்கு போட்டுக் கொடுத்ததனை யாரும் அறியாமல் இல்லை. இது சிங்கள ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல சிங்கள சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம்.

குடியேற்றப்பட்ட யாழ் குடா மக்களுக்கே இந்த நிலை என்றால் வன்னி மக்களின் பரிதாபம் கூறிச் சொல்லும் அளவன்று.

சிறிலங்கா அரசு நினைத்திருந்தால் கொண்டாட்டங்களுக்குக் கோடிக் கணக்கில் கொட்டப்படும் இந்தப் பணத்தைக் கொண்டே அந்த மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும்; செய்திருக்க முடியும். ஆனால் அதனைச் செய்யமாட்டாது. ஏனெனில் அந்த மக்களின் துன்பங்கள், கஷ்டங்களைச் சர்வதேசத்திடம் விற்றுத்தானே பிழைக்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் தெளிவுடன் உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

source:akkinikkunchu.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.