Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளரா, அவருடன் வேறும் எவரும் கைது செய்யப்பட்டனரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளரா, அவருடன் வேறும் எவரும் கைது செய்யப்பட்டனரா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவராகக் கருதப்படும் நெடியவன் நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதான நெடிவயனின் இயற் பெயர் பேரின்பநாயகம் சிவபரன் என்பதாகும்.

நோர்வே காவல்துறையினர் கடந்த வாரம் நெடியவனைக் கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர் செய்தனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நெடியவன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நீதவான் உள்ளிட்ட ஐந்து நெதர்லாந்துப் பிரதிநிதிகள் இரண்டு நாட்கள் நெடியவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நெதர்லாந்தில் புலிகளுக்காக திரட்டப்படும் பணம், நெடியவனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நெடியவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அதிகாரிகள் தொடர்ந்தும் நெடியவனிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தம் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

2ம் இணைப்பு -நெடியவன் கைது செய்யப்பட்டமையை நோர்வே உறுதிப்படுத்தியுள்ளது

20-05-2011 - 01 :52

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான நெடியவன் கைது செய்யப்பட்டமையை நோர்வே அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. புலிகளின் நோர்வே தலைவராக செயற்பட்டு வரும் பேரின்பநயாகம் சிவபரன் எனப்படும் நெடியவனை நோர்வே காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைக்கான நோர்வே தூதரகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் நோர்வே நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்து அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், கைது செய்யப்பட்டவரின் பெயர் விபரங்களை நோர்வே தூதரக அதிகாரி வெளியிடவில்லை.

நெடியவன் கைது ?

நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் நெடியவனை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேரின்பநாயகம் சிவபரன் எனப்படும் நெடியவனை கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக நோர்வே ஊடகங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நெடியவனுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.

நெடியவனிடம் விசாரணை நடத்துவதற்கு நெதர்லாந்தைச் சேர்ந்த நீதவான் ஒருவரும் ஐந்து சட்டத் தரணிகளும் நோர்வேக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விசாரணை நடத்தும் நெதர்லாந்து அதிகாரிகளுக்கு நோர்வே அரசாங்கம் உதவிகளை வழங்கி வருவதாக ரிவி2 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்தில் கைது செய்யப்பட்ட ஏழு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் நோர்வே சென்றுள்ளனர்.

இதேவேளை, நெடிவனிடம் எவ்வாறான விசாரணகைள் நடத்தப்பட்டன தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளரா, அவருடன் வேறும் எவரும் கைது செய்யப்பட்டனரா என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

source:GTN.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.