Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ்

Featured Replies

2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ்

செவ்வாய், 31 மே 2011( 21:28 IST )

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏர்செல் நிறுவனத்தை பின்னாளில் வாங்கிய மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கும், சன் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்றங்களை ம.பு.க. பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புலனாய்வின் அடிப்படையில் வரும் ஜூலை மாதத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தனது விசாரணையை ம.பு.க. தொடங்கும் என்று கூறப்படுகிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1105/31/1110531075_1.htm

  • தொடங்கியவர்

2ஜி உரிமம்: தெஹல்காவுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

2006-ல் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தொலைத்தொடர்பு உரிமம் பெற தயாநிதி ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டிய தெஹல்கா பத்திரிகைக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

புலனாய்வு என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்யை அந்த இதழ் வெளியிட்டுள்ளது என மாறன் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

தெஹல்கா இதழின் கட்டுரை தயாநிதி மாறனுக்கு தவறான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தயாநிதி மாறனிடமிருந்து இதுவரை தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை என தெஹல்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=2%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&artid=425421&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

  • தொடங்கியவர்

தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை பிரதமர் மன்மோகன் சி்ங் பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இந் நிலையில் இன்று நிருபர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:

தயாநிதி மாறன் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும். 2ஜி விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும், தற்போது விசாரணை சரியான திசையில் செல்கிறது என்றார்.

நீங்கள் டெல்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது, தயாநிதி மாறன் குறித்து பேசுவீர்களா என்று கேட்டதற்கு, 2ஜி விவகாரம் நீதிமன்றத்தில் விவகாரம் உள்ளதால் நாம் மேற்கொண்டு இதுபற்றி விவாதிக்கவோ சொல்லவோ அவசியம் இல்லை. எனவே, இதுபற்றி பிரதமரிடம் பேச வாய்ப்பு இல்லை என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/06/01/2g-spectrum-scam-jayalalithaa-demands-dayanidhi-maran-aid0090.html

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் தோல் இருக்க, சுளையை தின்னுற ஆக்கள்.

முதலில், அம்பிட்டது ராஜா. இதற்கு முன் இந்த தகவல் துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன்.

தினகரனில் வந்த, ஸ்டாலினுக்கா, அழகிரிக்கா செல்வாக்கு என்னும் வாக்கெடுப்பில் தனது பதவியை ராஜினாமா செய்ய வைக்க தாத்தா கருணாநிதியால் வற்புறுத்தி, பதவி விலகிய பின் ராஜா அந்த இடத்துக்கு வந்து.... விசயம் தெரியாமால் மாட்டுப் பட்டுப் போனார்.

இளநீர் குடிச்சவன் ஆரோ... கோம்பை சூப்பிறவன் ஆரோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.