Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரத்தை தொடங்கினார் பாபா ராம்தேவ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார்.

அன்னா ஹசாரேவை தொடர்ந்து ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டத்தில் இறங்கியுள்ளார். ராம்தேவ் உண்ணாவிரத்தை கைவிட மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசின் வேண்டுகோளை மறுத்த ராம்தேவ், திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார்.

தான் அறிவித்தப்படி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், இன்று (04.06.2011) உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=55256

உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை அப்புறப்படுத்தினர் போலீசார்., கண்ணீர்புகை வீச்சு

கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் ‌‌போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது. போராட்டத்திற்கான அனுமதி போலீசார் வழங்கவில்லை என்றும் இதனால் இவர் அப்புறப்படுத்தப்பட்டார் என்றும் இவர் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதட்டத்தை தணிக்க மைதானத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்‌பிக்கப்பட்டுள்ளது.

ராம் தேவ் கைது ? பந்தலுக்கு தீ வைப்பு :

மத்திய அரசுடன் உடன்பாடு ஏற்படாததால் ராம் தேவ் தொடர்ந்து உண்ணாவிரதத்ததில் ஈடுபட்டார்.இந்நிலையில் நள்ளிரவில் மைதானத்தை சுற்றி போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இவர் கைது செய்யப்படுவார் என்ற பதட்டத்தை தொடர்ந்து போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி , கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தினரை கலைத்தனர். போராட்ட பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பெரும் பதட்டம் நிலவியது. போராட்டத்திற்கான அனுமதியும் ரத்து ‌செய்யப்பட்டது.தொடர்ந்து போலீசார் ராம்தேவை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

ராம் தேவ் டில்லிக்கு வெளியே விடப்பட்டதாக தெரிகிறது. மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்திற்கு வரும் அனைத்து வழிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத பந்தல்கள் கலைக்கப்பட்டு விட்டது.ஆதரவாளர்கள் அமைதிகாக்கும் படி பாபா ராம் தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.‌யோகா பயிற்று வி்ப்பதற்காகமட்டுமே மைதானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்காக அனுமதி வழங்க வில்லை என மாநில அரசுதெரிவித்துள்ளது. பாபாராம் தேவ்கைது செய்யப்படவில்லை. அவர் பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.அதே சமயம் பாபா ராம் ‌தேவ் மீண்டும் ஹரித்துவார் நகருக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படு்கிறது. தற்பேதாதைய நிலவரப்படி பாபா ராம்தேவ் தலைநகர் டில்லியில் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரியவரு்கிறது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=252067

Ramdev Baba's Eviction: The Inside Story

ராம்தேவை வெளியேற்றுவது தவிர வேறு வழியில்லை: பிரதமர்

ஊழல், கருப்புப் பணம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பாபா ராம்தேவை, அந்த இடத்தில் இருந்து அகற்றுவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் பாபா ராம்தேவை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது என்றும் வேறு வழியில்லாததால் அவ்வாறு செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார். ஆனால் வேறு வழியில்லை என்றால் என்ன பொருள் என்று அவர் விளக்கவில்லை.

“அவர்களை அகற்ற வேண்டிய துரதிருஷ்டவசமான நடவடிக்கை எடுக்க வேண்டியதாகிவிட்டது. நான் நேர்மையாகக் கூறிக்கொள்கிறேன், வேறு வழியில்லை” என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், “ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதில் ஐயம் வேண்டாம். அதே நேரத்தில் அதனை நிறைவேற்ற எந்த மந்திரக்கோலும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1106/06/1110606044_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போயும்போயும் இந்தியாவிலை கறுப்புபணம்,ஊழலை ஒழிக்க ஒரு போராட்டமா? :o :o :o

ஐயகோ.... :rolleyes:

இந்த போராட்டத்தைமுன்னெடுக்கிறவர் ... முக்கிய ஆக்களோடை ஒத்துளைச்சால் பெரிய பணக்காரர் ஆவார் இல்லாட்டி மிரண்டு பிடிச்சாரெண்டால் அந்தியேட்டிக்கு சாம்பலும் கிடைக்காது :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.