Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

900 முன்னாள் போராளிகள் விடுதலைபொய்யானது! உறவினர்கள் கண்ணீருடன் திரும்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

900 முன்னாள் போராளிகள் விடுதலைபொய்யானது! உறவினர்கள் கண்ணீருடன் திரும்பினர்

Sunday, June 5, 2011, 19:54

சிறீலங்கா

இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பயிற்சி முடிந்தவர்களை விடுதலை செய்யும் வைபவம் வவுனியா கலாசார மண்டபத்தில் ஆட்டம், பாட்டு, கூத்து என்று கொண்டாட்டத்துடன் நடத்தப்பட்டது ஆயினும் ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டதைப் போன்று, 900 பேர் விடுதலை செய்யப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தமது கணவன்மாரும், பிள்ளைகளும் விடுதலை செய்யப்படுவதை ஆவண ரீதியாக ஏற்றுக்கொள்வதற்காக குடும்ப உறவினர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு கையெழுத்துக்கள் பெறப்பட்டன. 900 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள் என ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. விடுதலை செய்யப்படும் தினமாகிய ஜீன் 5 ஆம் திகதி வவுனியா கலாசார மண்டபத்திற்கு வருமாறு உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அங்கு சென்ற பலருக்குப் பெரும் ஏமாற்றம்.

குறைந்த எண்ணிக்கையான சுமார் 360 பேரளவில் மாத்திரமே விடுதலை செய்யப்படுவதற்காக அங்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள். விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதன் பின்பும், விடுதலைக்காக அழைத்து வரப்படாதவர்களின் உறவினர்கள் பம்பைமடு மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் புனர்வாழ்வு நிலையங்களுக்குச் சென்று நிலைமையை அறிய முயன்றார்கள்.அழைத்து வரப்படாதவர்களின் விடுதலை குறித்து சரியான பதில் கிடைக்காததனால், ஆத்திரமுற்ற உறவினர்கள் அழுது அரற்றி ஆத்திரம் கொண்டு தங்கள் கணவன்மார் பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் என உரத்துச் சத்தமிட்டதுடன், அங்கிருந்த இராணுவம் மற்றும் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

ஆயினும் பலனேதும் கிட்டவில்லை. தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்த அங்கிருந்த அதிகாரிகள், விடுதலை செய்யப்படும் வைபவம் நடைபெறும் மண்டபத்திற்குச் சென்று புனர்வாழ்வு அமைச்சருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள்.

உறவுகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்த்து வந்து ஏமாற்றமடைந்த பலரும், கலாசார மண்டபத்திற்குச் சென்று அங்கு கடமையில் இருந்த பொலிசாரிடம் தமது மனக்குமுறுல்களை வெளிப்படுத்தி மண்டபத்திற்குள் செல்ல வேண்டும் என கோரினர். அவர்களது கோரிக்கையை செவிமடுத்த பொலிசார் அவர்களைப் பொறுமையாக இருக்குமாறும், வைபவம் முடிவடைந்ததும் அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி அந்த மக்களை அமைதிப்படுத்தினர்.ஆயினும் வைபவம் முடிவடைந்ததும், அத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிக்கையோடு வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஆனால் வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசிறி கஜதீர அறிவித்தன்படி 900 பேரும் ஒருசில தினங்களில் விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என தெரிவித்ததுடன், புனர்வாழ்வு நிலையங்களில் மிஞ்சியுள்ளவர்கள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என கூறியுள்ளார்.

tamilthai.com

போர்குற்ற மற்றும் சர்வதேச அழுத்தங்களை தொடர்ச்சியாக சிங்களம் மீது கொடுத்தால் மட்டுமே இந்த சட்டத்துக்கு எதிரான கைதுகள் செய்யப்பட்டு உள்ளோரை விடுவிக்க முடியும். ஒரு அரசியல் தீர்வு சாத்தியமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.