Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வது திருத்த சட்டத்தின் கீழான அரசியல் தீர்விற்கும் ஆப்பு: நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு மஹிந்த பணிப்பு

Featured Replies

13ஆவது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது இனவாத சகபாடிகளான அமைச்சர்கள் விமல் வீரவன்ச,சம்பிக்க ரணவக்க ஆகியோரைக் கேட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதேவேளை, அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தத் தயராகவிருப்பதாக அறிக்கை விடுமாறு தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ்,கெஹலிய ரம்புக்வெல ஆகியோரையும் ஜனாதிபதி பணித்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதனை எதிர்த்தும் இந்த விடயத்தில் இந்திய அரசின் தலையீட்டைக் கண்டித்தும் ஒரு பக்கத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு இரு இனவாதக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களை ஏவி விட்டு, மறுபுறத்தில்,தானும் தனது அரசும் தப்பித்துக் கொள்ளும் வகையில் தனது கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்களை அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தத் தயராகவிருப்பதாக அறிக்கை விடக் கோரும் சிறிலங்கா ஜனாதிபதியின் இரட்டை வேடம் இதன் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் அதனைத் தென்னிலங்கைக் கட்சிகள் எதிர்ப்பதாகவும் இந்தியத் தூதுக் குழுவிடம் சிறிலங்கா ஜனாதிபதி கூறியிருந்தமை தெரிந்ததே.

இவ்வாறு பிள்ளையையும் ஆட்டிவிட்டுத் தொட்டிலையும் கிள்ளி விடும் பல காரியங்கள் ஏற்கனவேயும் சிறிலங்கா ஜனாதிபதியால் கச்சிதமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழ நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் அதனைத் தென்னிலங்கைக் கட்சிகள் எதிர்ப்பதாகவும் இந்தியத் தூதுக் குழுவிடம் சிறிலங்கா ஜனாதிபதி கூறியிருந்தமை தெரிந்ததே.

தென்னிலங்கைக் கட்சிகளினதும்,புத்த பிக்குகளினதும் எதிர்ப்பைச் சமாளிக்க உள்ள ஒரே வழி, தனித் தமிழ் ஈழம் மட்டுமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-rajapaksa_7.jpg

என தருமை இலங்கை மக்களே அரசியல் தீர்வு பற்றி அனைவரும் கதைத்து வருகையில் நான் இங்கு முக்கியமான ஒரு விடயத்தினை குறிப்பிட விரும்புகிறேன் . வெளிநாட்டு அழுத்தங்கள் எதற்கும் நான் உட்பட போவதில்லை எனினும் தகுந்த ஆலோசனைகளை வழங்கமிடத்து ஏற்படும் .ஏற்கபடும் என்பது நாம் மண்டியடுவதல்ல..

அயல் நாடுகள் நம்முடைய நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யபோவதை எக்காரணம் கொண்டும் நாம் அனுமதிக்க போவதில்லை. என்றும் அயல் நாடுகள் தம் நாட்டில் நிலவும் நிலவரங்க்ளை கவனியாது நம் நாட்டில் தலையீடு செய்து குழப்பம் ஏற்படுத்த முனைகின்றனர்.10 தசாப்த காலமாக போரினால் சிக்குண்ட இந்த நாட்டினை மீட்டெடுக்க மனிதபிமான போர் ஒன்றினை நிகழ்த்தி சுதந்திர காற்றினை மூவின மக்களும் சுவாசிக்க இன்று வழி ஏற்பட்டுள்ளது (இது ஏதோ பியூர் ஆக்சிஜன் போல தெரிகிறது)

தீர்வு என்று எதை கூற வருகிறார்கள் என்று பிரியவில்லை .. இன்று வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவை அடிப்படை வசதிகளுமே கட்டமைப்புமே ஒழிய .. தீர்வு அல்ல.. தீர்வு என்றாலும் அதை நாம் தயாராகவே உள்ளோம் .. அனைத்து மக்களும் ஏற்று கொள்ளத்தக்க வகையில் மாவட்ட சபைக்கு மாவட்ட கவுன்சிலராக முவின மக்களும் (டிஸ்கி அப்போ தமிழர் கிடையாது என பிரிந்து கொள்ளுதல் வேன்டும்) வார்டு மெம்பராக அனைத்து தமிழ் சகோதர்களும் நிற்கும் வண்ணமும் . மாகாண சபைக்கு கட்டிடங்கள் அலரிமாளிகையில் திறக்கபட்டு .. விகிதாசார அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யபடு ம் அதே வேளை காணி போலிசு அதிகாரங்கள் எதிர் காலத்தில் படிப்படியாக அமுல்படுத்தபடும்.மேற்படி அனைவரும் இலங்கையர்கள் எணும் எண்ணபுரிதலுக்கான செயல் திட்டங்களுக்கான அரசியல் சட்ட திருத்ததிற்கான குழு ஒன்று இன்று வெற்றி கரமாக அமைக்கபட்டு 1960 முதல் இன்று வரை ஆய்வு செய்து வருகிறார்கள் என்பதனை (பாடையில் போவது வரை ஆய்வு செய்வார்கள் ......) இன்று எம்மீது போர்குற்றம் சுமத்தும் நாடுகளுக்கு கூற கடமை பட்டுள்ளேன்..

டிஸ்கி:

இவன மாதிரி (ராஜபக்சே) பேச பழகிண்டு இருந்தேன். நாளையும் அதற்கு மறுநாளோ இதே வார்த்தைகளொ கோர்த்து போட்டு மாத்தி மாத்தி பேசணா ஆச்சு.. அடபொங்கப்பா எனக்கு தூக்கம் வருது .. இங்கிலிசு எஸ்ஸே ரைட்டிங் மாதிரி இருக்கு :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.