Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?

Featured Replies

மேற்கோள்:  

Mohini Attam, a dance form not exposed greatly outside India, has aesthetically blended elements from both kathakali and bharathanatyam. Literally, the word mohini aattam implies dance of the enchantress, and it aptly describes the gentle, gliding and graceful movements that characterize this style."  

நீங்கள் தந்த ஆங்கிலப் பந்தியே சொல்கிறது மோகினி ஆட்டம் இரண்டு நாட்டிய வடிவங்கள் சார்ந்ததென்று. கதகளி மற்றும் பரதநாட்டியம். எனவே இரண்டும் வேறுபட்ட வடிவங்கள் என்பது அப்பந்தியினூடு நிரூபணமாகிறது. மோகினியாட்டம் தமிழர்களதா இல்லையா என்பதல்ல இங்கு பேச்சு..! வீணே ஏன் அந்தச் சர்ச்சையையும் கிளப்புகிறீர்கள்..!  

இந்த ஆங்கிலப் பந்தியைப் பார்த்தீரே, அதற்குக் கீழேயுள்ளதைப் பார்த்தீரா, கதகளியையும், சதிரையும் கலந்து மோகினியாட்டத்தை உருவாக்கியதே தஞ்சாவூர்ச் சகோதரர்களில் ஒருவராகிய சிவானந்தம் என்றுள்ளது. நீர் ஒன்றையும் முழுதாக வாசிப்பதில்லைப் போல் தெரிகிறது. இந்த LINK எல்லாம் Pro-Tamil இல்லை பார்ப்பன Websites.  

Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's  

Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today  

hinniyah- born in 1802, the oldest  

He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.  

Ponniyah- born in 1804, the second oldest  

Sivanandam- born in 1808, the third oldest  

These two stayed where they were in the Thanjour court.  

Vadivelu- born in 1810, the youngest  

He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance.

மோகினியாட்டம் பற்றி சொன்னதையே சரியா விளங்கிக் கொள்ள முடியல்ல...! அப்புறம்..உங்களோடு தமிழில் கதைச்சும் வேலையில்லை. வார்த்தைகளை அளந்து போட்டால் செளகரியமா இருக்கும்..!

சும்மா ஒரு கட்டுரையை வைச்சு பூச்சுத்தாம.. இந்தியா முழுவதும் போய் செய்யுங்கோ உருப்படியா ஒரு ஆய்வென்றாலும்..உங்கட வேர் எங்கை என்ற உண்மை அப்பவாவது நிரூபிக்கப்படும். அதைவிடுத்து ஒரு பக்கத்தை மறைச்சுக் கொண்டு உங்களுக்கு சார்பானதை மட்டும் பேசிட்டா அதுவே நியாயம் என்றிடாது..! தமிழர்கள் இன்றும் கூட உங்கள் போன்றோரின் குருட்டுத்தனமான வாதங்களால் தான் பேரழிவுகளை சந்தித்தும் உலக அனுதாபத்தை இழந்து தவிக்கிறார்கள்..! உலகம் குருட்டுத்தனதுக்கு அன்றி நியாயத்துக்கு உண்மைக்கு சாட்சியத்துக்கு எப்போதும் மதிப்பளிக்கும்.

தேவதாசிகளோடு சமூகத்தால் ஒதுக்கப்பட்ட சதிர் அப்புறம் பார்ப்பர்ணிய வடிவத்தில் பரதநாட்டியமாக வளர்ந்து பிரபல்யமான பின்னர் அதை எங்களது என்று சாதிக்க நினைக்கும் உங்களைப் போன்றோர்தான் கையாலாகாத தமிழர்கள்..! மீண்டும் சொல்கிறோம் இன்றைய வடிவத்தில் பரதநாட்டியம் தமிழர்களதல்ல....! அது ஒரு காலம்...அந்தக் காலம் சதிரோடு முடிஞ்சுது. இன்று பரதநாட்டியம் முழுக்க முழுக்க பார்ப்பர்ணிய ஆதிக்கம் கொண்ட ஒரு கலைவடிவம்..!

ஒரு கலைவடிவத்துக்கு பெயர் மாற்றி கொண்டாட வேண்டிய தேவை ஏன் உங்களுக்கு வந்தது. அது சமூகத்தால் ஒதுக்கப்பட்டதாலேயே. இப்போதும் கூட தமிழர் மத்தியில் "சதிராட்டக்காரி..தேவடியாள்" என்று நாட்டிய மாதுக்களை இழிவுபடுத்தும் வழக்கு இருக்கிறது. நீங்களே உங்கள் கலையை கலைஞர்களை நேற்றுவரை இழிவுபடுத்தி சமூகத்தில் அவர்களைப் புறந்தள்ளி கலையையும் சீரழித்து விட்டு..இப்போ யாரோ வளர்தது விட்ட கலைக்கு உரிமை பாராட்ட தவிக்கிறீர்கள்..! வெட்கம்...! தமிழர்களின் நிலை காணும் போது..வெட்கமாக இருக்கிறது.

இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம்.. மீண்டும் மீண்டும் இதே தவறை அந்நிய கலாசார மோகத்தோடு செய்து தேவையில்லாத கலப்புக்களை தமிழரின் தனத்துவ அடையாளத்துக்குள் புதுமை என்று புகுத்தி...நாளைய சந்ததிக்கும் இப்படியான ஓர் நிலையை உருவாக்காதீர்கள்..! இன்று புலம்பெயர் தேசங்களில் இது மிக வேகமாக நடந்தேறிக்கொண்டிருக்கிறது. அதன் பாதிப்பு தாயகம் அவரை உணரப்பட்டாகிட்டு. இன்று தமிழ் பெண்கள் பஞ்சாபிய உடையில் வலம் வந்து கொண்டு..நீங்கள் ஆங்கிலேய அடையாளத்தில் வலம் வந்து கொண்டு..நாம் தமிழர்கள் தமிழ் பாரம்பரியத்தை மேடையிலும் எழுத்திலும் அப்பப்ப காட்டிக்கொண்டு...கலை கலாசாரம் காக்கிறம் என்று கதை அளக்காதீர்கள்..! சம்பிரதாயமாக ஒரு மேடையில் கூட உங்களால் முழுமையாக தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை..! ஆபிரிக்கர்கள் கூட கலாசார நிகழ்வுகளின் போது மிகப்பற்றுறிதியோடு தங்கள் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றனர். தேசிய இன அங்கீகாரத்துக்காக போராடும் ஒரு இனம்...தனது பாரம்பரியத்தை தொலைச்சுக் கொண்டும்..தொலைச்சதை கைப்பற்றவும் போராடிக்கொண்டிருக்கும் துரதிஷ்டநிலை தமிழர்களில் மட்டுமே அவதானிக்கப்படுகிறது...என்பதை மறக்க வேண்டாம். இந்த நிலையைக் கடக்க மிகப் போராட வேண்டி இருக்கும். :wink: :P :idea:

  • Replies 177
  • Views 21k
  • Created
  • Last Reply

குருவிகள் அற்புதமாக சொன்னீர். நன்றி

எனக்கு பரதம் பற்றி அவ்வளவாக தெரியாது... ஆனால் ஆருரான் சொல்வதைப் பார்த்தால் பரதம் தமிழனால் கண்டுபிடிக்கப் பட்டது என்றே தெரிகிறது.... அவர் அதற்கு ஆதாரமும் காட்டுகிறார்.... ஒத்துக் கொண்டு போக வேண்டியது தானே?

எனக்கு பரதம் பற்றி அவ்வளவாக தெரியாது... ஆனால் ஆருரான் சொல்வதைப் பார்த்தால் பரதம் தமிழனால் கண்டுபிடிக்கப் பட்டது என்றே தெரிகிறது.... அவர் அதற்கு ஆதாரமும் காட்டுகிறார்.... ஒத்துக் கொண்டு போக வேண்டியது தானே?

அதெப்படி ஒத்துக் கொள்வீர்கள்.. பாகிஸ்தான் கிஸ்துஸ்தானின் பகுதி..என்பது வரலாறு..அப்புறம் அரேபியர்களின் வருகையால் அது இந்தியாவை விட்டுப் பறிபோன பின்...அது ஜிஸ்துஸ்தான் என்று சொல்ல முடியுமோ...??!

அதுபோலத்தான் சதிர் தமிழர்களின் கூத்துக்களின் ஒன்று. அதைத் தமிழர்களே சீரழித்துவிட்டு... இப்போ அதே வடிவத்தில் ஆனால் வேற்றுமைகள் கொண்ட பரதநாட்டியத்தை தங்களது என்று சாதிக்க முடியுமோ..??!

Bharatanatyam

Bharatanatyam is one of the oldest among the classical dance forms prevailing in India.This dance form is said to derive its name from Bharata Muni, the author of natya shastra (treatise on dance) written between 2nd century B.C and 2nd century A.D.This dance form was originally performed in temples by the "devadasis"(servants of god) and it is to them that we owe the preservation of this art form.This art form received great patronage during the golden rule of the Maratha and Chola rulers.The dance was then called "sadir".

Bharatanatyam in its present form was codified by the four brothers Chinnaiah,Ponniah,Shivanandam

and Vadivelu collectively famous as the Tanjore Quartrette.Their compositions form the bulk of dancing even today.Training was imparted by male gurus called "Nattuvannars".This was the time when art received maximum encouragement and dancers were given land and valuables as gifts and were placed in high esteem.

However with the advent of the mughals started the decline of temple dancing.The Mughal rulers

brought dancers from Persian states.The devadasis stopped receiving patronage and many of them

them started learning persian dance and took to court dancing.The British rule did away with

princes and kings.In a desperate move to earn livelihood many dancers who now stopped receiving

any kind of patronage took to acts like prostitution.Thus Bharatanatyam fell into disrepute.Girls

from good families stopped learning dance and dancing came to be considered as a cheap profession

in the latter half of the 19th century and the first half of the 20th century.

Bharatanatyam was again revived by activists and dancers like Rukmini Devi and

E.Krishna Iyer. Rukmini Devi started the institution Kalakshetra in 1936, and since then there has

been a wave of reform.Today many recognised universities offer degrees in Bharatanatyam, and

artistes are given international recognition and honours. In Bharatnatyam rhythm and enactment go hand in hand to create a beautiful whole.Today there are innumerable male and female dancers all over India and more and more are taking up performing arts as a profession.

இதுதான் பரதநாட்டியம் பற்றிய தற்கால கிஸ்றி...! இதன்படி சதிர் கூட பிற்காலத்தில்...சோழர் காலத்தில் பரதத்தைத் தழுவி எழுந்ததாகவே சொல்லப்படுகிறது..! This art form received great patronage during the golden rule of the Maratha and Chola rulers.The dance was then called "sadir". இப்படி ஆரூரனின் கருத்துக்குள் பல முரண்பாடுகள் இருப்பதையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம்..! ஆனால்..அவர் தனிநபர் வசைபாடலை நல்லாச் செய்கிறார்...! :P :wink: :) :idea:

http://www.geocities.com/srividyas012/origin.htm

லக்கி லூக் ஆருரான் சொல்வ்து தமிழ் வெறியால், அந்த கருத்து பொய்யானது. திரு வேகப் கூட இந்த விழயத்தில் குருவி கருத்தை தான் முன்னர் சொன்னார்.

குருவிகள் நீங்கள் உளறுவதற்கு ஒரு அளவேயில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது....

குருவிகள் நீங்கள் உளறுவதற்கு ஒரு அளவேயில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது....

மேலே ஆங்கிலத்தில் தரப்பட்ட பரதநாட்டிய வரலாற்றைப் படியுங்கள். சதிர்..தற்கால பரதநாட்டியம் இரண்டுக்கும் முதலாக ஒரு வடிவம் இருந்திருப்பது...ஆரூரனின் கட்டுரையில் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. இந்திய மற்றும் ஈழப்பதிப்புள்ள பரதநாட்டிய நூல்களும் இதையே சொல்கின்றன...! எனவே இவற்றை சும்மா சில கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு மாற்றி அமைக்க முடியாது. பாரதமுனி தமிழரா என்பதில் இருந்து இது ஆரம்பிக்கப் பட வேண்டும்..தமிழர்களது என்று நிரூபிக்க...! :P :idea:

எனக்கு தெரிந்து தமிழரது பழங்கலைகள் பரத நாட்டியத்தோடு ஒத்துப் போகவில்லை....

தமிழர்கள் எதையுமே கொஞ்சம் வேகமாக, முரட்டுத்தனமாக தான் எதிர்பார்ப்பார்கள்......

உங்களது வாதமும் சிந்தித்து பார்த்தால் கொஞ்சம் சரியாகவே தோன்றுகிறது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bharatanatyam is one of the oldest among the classical dance forms prevailing in India.This dance form is said to derive its name from Bharata Muni, the author of natya shastra (treatise on dance) written between 2nd century B.C and 2nd century A.D.This dance form was originally performed in temples by the "devadasis"(servants of god) and it is to them that we owe the preservation of this art form.This art form received great patronage during the golden rule of the Maratha and Chola rulers.The dance was then called "sadir".  

Bharatanatyam in its present form was codified by the four brothers Chinnaiah,Ponniah,Shivanandam  

and Vadivelu collectively famous as the Tanjore Quartrette.Their compositions form the bulk of dancing even today.Training was imparted by male gurus called "Nattuvannars".This was the time when art received maximum encouragement and dancers were given land and valuables as gifts and were placed in high esteem.  

However with the advent of the mughals started the decline of temple dancing.The Mughal rulers  

brought dancers from Persian states.The devadasis stopped receiving patronage and many of them  

them started learning persian dance and took to court dancing.The British rule did away with  

princes and kings.In a desperate move to earn livelihood many dancers who now stopped receiving  

any kind of patronage took to acts like prostitution.Thus Bharatanatyam fell into disrepute.Girls  

from good families stopped learning dance and dancing came to be considered as a cheap profession  

in the latter half of the 19th century and the first half of the 20th century.  

Bharatanatyam was again revived by activists and dancers like Rukmini Devi and  

E.Krishna Iyer. Rukmini Devi started the institution Kalakshetra in 1936, and since then there has  

been a wave of reform.Today many recognised universities offer degrees in Bharatanatyam, and  

artistes are given international recognition and honours. In Bharatnatyam rhythm and enactment go hand in hand to create a beautiful whole.Today there are innumerable male and female dancers all over India and more and more are taking up performing arts as a profession.

குருவியால் மேலே குறிப்பிட்ட பந்தியில் UNDELINE பண்ணியுள்ள பகுதி பார்ப்பான்களால் மாற்றப்ட்ட தமிழரின் சரித்திரம். மற்றவையெல்லாம் நான் சொன்னவற்றைக் குருவியும் திருப்பிச் சொல்கிறது. பார்ப்பான்கள் திட்டமிட்டுத் தமிழரின் சரித்திரத்தையும், ஊர்ப்பெயர்களைக் கூட மாற்றியதற்குப் பல உதாரணங்கள் உண்டு. தமிழரின் சதிருக்குப் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்து, பரதமுனியையும் இணைத்து, இதிகாசக் கதையையும் கொடுத்த சதியைச் செய்தது பார்ப்பான்கள். இது பரதமுனிவரால் இயற்றப் பட்ட பிராமணர்களின் நாட்டிய வடிவமென்றால் எப்படித் தேவதாசிகளால் மட்டும் ஆடப்பட்டது, சமஸ்கிருதத்தையும், ஆரியரின் சதித்திரத்தையும், உயர்ந்த்தாகத் தலையில் வைத்தாடும் பார்ப்பான்கள், எப்படித் தமிழரின் கைக்குப் போக விட்டார்கள். 1930 இல் சதிராட்டத்தை மீனாட்சி சுந்தரம்பிள்ளை கற்பிக்கும் வரையும், தஞ்சாவூர்ச் சகோதரர்கள், அண்ணாமலைச் செட்டியாரின் உதவியுடன் மறுமலர்ச்சி அடையச் செய்யும் வரை எந்தப் பார்ப்பானுக்கும் சதிரைப் பற்றித் தெரியாது. பார்ப்பான்கள் தமிழ்க்கலைகளை இழிவு படுத்திவதைக் கண்ட அண்ணாமலைச் செட்டியார் அவர்களுக்குப் போட்டியாகத் தனித் தமிழிசைச் சங்கத்தையும் தொடங்கினார்.

பரதமுனிக்கும், சதிருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 1930 க்கு முந்திய எந்தத் தடயத்திலும் குருவியால் நிரூபிக்க முடியாது. பரதமுனி, கி.மு 4000, ஐந்தாம் வேதம், தொல்பொருட் சிலைகள் என்பன பார்ப்பான்களின் கதையை நியாயப் படுத்த குருவி விட்ட புருடாக்கள்.

ராஜாதிராஜா ஏன் பார்ப்பான்களின் துரோகத்தை நியாயப்படுத்தி, குருவிக்குப் பக்கவாத்தியம் பாடுவது ஏனென்று சொல்லித் தெரியத் தேவையில்லை. லக்கிலூக் ஒரு மதில் மேல் பூனை, நட்புக்காக மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலையில் அவருள்ளார். நேரமாகிவிட்டது, மாலையில் மிகுதி. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி ஒத்துக் கொள்வீர்கள்.. பாகிஸ்தான் கிஸ்துஸ்தானின் பகுதி..என்பது வரலாறு..அப்புறம் அரேபியர்களின் வருகையால் அது இந்தியாவை விட்டுப் பறிபோன பின்...அது ஜிஸ்துஸ்தான் என்று சொல்ல முடியுமோ...??!

அதுபோலத்தான் சதிர் தமிழர்களின் கூத்துக்களின் ஒன்று. அதைத் தமிழர்களே சீரழித்துவிட்டு... இப்போ அதே வடிவத்தில் ஆனால் வேற்றுமைகள் கொண்ட பரதநாட்டியத்தை தங்களது என்று சாதிக்க முடியுமோ..??!

இவ்வளவு வரைக்கும் ஒத்துக் கொண்ட உங்கள் மனதை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் பாருங்கோ!! கிந்தூஸ்தான் என்பது ஒரு காலத்தில் எப்படி இந்தியாவினுள் அடங்கியிருந்தது என்பதை ஒத்து;க கொள்கின்றீர்களா? அது போலத் தான் ஆருரனும் சொல்கின்றார் பரதமும் தமிழருக்குச் சொந்தமானது. அதைப் பாப்பாணர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை.

தூயவன் இன்னும் ஒரு முறை பட்யுங்கள். சதிர் என்ற தமிழ் நடனம் தேவதாசிகளால் ஆடபட்டு பின் அழிந்து போன ஒரு நடனம். பின் அதை தமிழ் நாட்டு பிராமணர்களால் புதித்யுர் கொடுக்கபட்டு பரத நாட்டிய்மாக ஆனது. இது ஒரு கூற்று. அந்த சதிர் நடனம் தமிழ்னக்கு மட்டும் சொந்தாமாந்தா அல்லது இந்திய பிராந்திய நடனங்களில் ஒன்றா?

இவ்வளவு வரைக்கும் ஒத்துக் கொண்ட உங்கள் மனதை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் பாருங்கோ!! கிந்தூஸ்தான் என்பது ஒரு காலத்தில் எப்படி இந்தியாவினுள் அடங்கியிருந்தது என்பதை ஒத்து;க கொள்கின்றீர்களா? அது போலத் தான் ஆருரனும் சொல்கின்றார் பரதமும் தமிழருக்குச் சொந்தமானது. அதைப் பாப்பாணர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை.

தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். இலங்கையில் மாற்றி எழுதப்பட்ட தமிழர்கள் வரலாற்றையே நாம் இன்னும் திருத்தமுடியாது இருக்கிறோம். பரந்த பாரத தேசம் அடங்கிய சர்ச்சைக்குரிய புனைகதைகள் அடங்கிய ஒரு விடயத்தை ஒரு சிலரின் கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பது சாத்தியமானதல்ல. அதைவிடவும் அவர்களின் பாதையில் சென்று அதை நிராகரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உண்டு..! அதை உணரத்தவறியவர்களில் நீங்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது சாபக்கேட்டுக்கல்ல.. ஆளும் கட்சியின் தவறுகளை செயற்பாடுகளை செம்மைப்படுத்தவே.! அந்த வகையில் உங்கள் கருத்தை உணர்வுபூர்வமாக மட்டுமன்றி நியாயம் பிறப்பிக்கவல்லதாகவும் வையுங்கள். தவறான கண்ணோட்டங்களால் தனிநபர் வசைபாடல்கள் செய்வதால் இருக்கும் கருத்துக்கள் மாறிவிடாது. கருத்துச் சொல்லப்படும் போதுதான் விளக்கமும் சான்றும் தெளிவும் பிறக்கும்..! :P :idea:

ஆரூரண்ணாவுக்கு பார்ப்பனியம் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..

உங்கள் அதியமான்.. ஓள(அவ்)வையார்.. திருவள்ளுவர்.. சேர சோழ பாண்டியர்.. சங்கப் புலவர்கள் அத்தனைபேரும் பிராமணர்கள்தான்..

நீங்கள் பரதநாட்டியத்தை சதிராக்கவேண்டாம்.. உங்கள் சதிர் ஆட்டத்தை தற்போதுள்ள பாணியில் தொடரலாம்.. உங்களுக்கு பெயர்களில் பிரச்சனையுள்ளது.. உங்களுக்கு விருப்பமானதுபோல மாற்றலாம்.. மலரஞ்சலி.. மலாரிப்பூ.. இப்படி பலதும்.. உங்களுக்கு எங்கே என்னகாரணத்துக்காக அப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றுதெரியப்போகின்றது.. எனது வேலைப்பழுவிற்கு மத்தியில் இவ்வளவு எழுதியதே அதிகம்.. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகினியாட்டம் பற்றி சொன்னதையே சரியா விளங்கிக் கொள்ள முடியல்ல...! அப்புறம்..உங்களோடு தமிழில் கதைச்சும் வேலையில்லை. வார்த்தைகளை அளந்து போட்டால் செளகரியமா இருக்கும்..!

Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's

Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today

hinniyah- born in 1802, the oldest

He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.

Ponniyah- born in 1804, the second oldest

Sivanandam- born in 1808, the third oldest

These two stayed where they were in the Thanjour court.

Vadivelu- born in 1810, the youngest

He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance.

சும்மா மேல உள்ளதை மட்டும் வாசிக்காமல் கீழேயும் வாசியும் :lol::lol:

சும்மா ஒரு கட்டுரையை வைச்சு பூச்சுத்தாம.. இந்தியா முழுவதும் போய் செய்யுங்கோ உருப்படியா ஒரு ஆய்வென்றாலும்..உங்கட வேர் எங்கை என்ற உண்மை அப்பவாவது நிரூபிக்கப்படும். அதைவிடுத்து ஒரு பக்கத்தை மறைச்சுக் கொண்டு உங்களுக்கு சார்பானதை மட்டும் பேசிட்டா அதுவே நியாயம் என்றிடாது..! தமிழர்கள் இன்றும் கூட உங்கள் போன்றோரின் குருட்டுத்தனமான வாதங்களால் தான் பேரழிவுகளை சந்தித்தும் உலக அனுதாபத்தை இழந்து தவிக்கிறார்கள்..! உலகம் குருட்டுத்தனதுக்கு அன்றி நியாயத்துக்கு உண்மைக்கு சாட்சியத்துக்கு எப்போதும் மதிப்பளிக்கும்.

எத்தனை முறை சொன்னாலும் தமிழர்களைத் தாழ்வு படுத்துவதற்காகவே மாறி மாறிப் புலம்புது குருவி. நான் ஏற்கனவே எத்தனையோ முறை சொல்லி விட்டேன், அறிஞர் வி. கல்யாணசுந்தரமும், மறைமலையடிகள் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார்கள். ஓவ்வொரு தமிழாராய்ச்சி மாநாட்டிலும் பன்னாட்டு அறிஞர்கள் மத்தியில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. Dr. நிர்மலா ராமச்சந்திரன் கூட தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை தமிழாராய்ச்சி மாநாட்டிலும் சமர்ப்பித்துள்ளார்.

குருவி எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார், ஓட்டு மொத்தமாக உலகம் ஏற்றுக் கொள்ளாதென்று சொல்வதற்கு, பெரும்பாலும் இப்பொழுது தான் இவர் சதிரைப் பற்றிக் கேட்டிருப்பார், தமிழர்களை இந்த தளத்தில் மட்டம் தட்டுவதற்காக 'அனு' போன்ற குடும்பப் பெண்களின் பொழுது போக்குக் Home Page ஐக் கூகிளில் தேடிக் கொண்டு வந்து விட்டு, உலகம் ஏற்றுக் கொள்ளாது அது, இது என்று கதை விடுகிறார். இவரை மாதிரிக் கன Anti Tamil குருவிகள் பல தமிழ்த் தளங்களில் ஒளிச்சுத் திரியுதுகள்.

தமிழர்கள் அழிவைச் சந்திப்பது, நல்லவனாக, தமிழில் பற்றுள்ளவனாக நடித்துக் கொண்டு, தமிழரை மட்டம் தட்டுவதில் சுகம் காணும் கூட இருந்தே குழி பறிக்கும் உம்மிட வர்க்கத்தால தான். என்றைக்கு நாங்கள் தமிழர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு, அந்த ஒட்டுண்ணிகளை எங்களிடமிருந்து அகற்றுகிறார்களோ அன்று தான் தமிழினத்துக்கு விடிவு காலம்

தேவதாசிகளோடு சமூகத்தால் ஒதுக்கப்பட்ட சதிர் அப்புறம் பார்ப்பர்ணிய வடிவத்தில் பரதநாட்டியமாக வளர்ந்து பிரபல்யமான பின்னர் அதை எங்களது என்று சாதிக்க நினைக்கும் உங்களைப் போன்றோர்தான் கையாலாகாத தமிழர்கள்..! மீண்டும் சொல்கிறோம் இன்றைய வடிவத்தில் பரதநாட்டியம் தமிழர்களதல்ல....! அது ஒரு காலம்...அந்தக் காலம் சதிரோடு முடிஞ்சுது. இன்று பரதநாட்டியம் முழுக்க முழுக்க பார்ப்பர்ணிய ஆதிக்கம் கொண்ட ஒரு கலைவடிவம்..!

சதிரைக் காத்தது பார்ப்பான்களல்ல., தஞ்சாவூர்ச் சகோதரர்களும், அண்ணாமலைச் செட்டியார்கள் போன்ற தமிழர்கள் தான், ஆனால் அவ்ர்களின் பின்னால் பார்ப்பான்கள் கடத்திக் (Hijack) கொண்டு போய் விட்டார்கள்.

மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு பார்ப்பனர்களுக்கு சதிராட்டத்தைச் சொல்லிக் கொடுக்க முதலில் விருப்பமில்லை. அதை ருக்மணி அருண்டேலின் சொந்த Biography யே சொல்கிறது போய் வாசித்துப் பாரும், அவர் அதைக் கற்றவுடன், கலாசேத்திரத்தில் உண்மையான ஏழைத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. அங்கு நாட்டியம் கற்க, ஓன்றில் பார்ப்பானாக இருக்க வேண்டும் அல்லது பணம் இருக்க வேண்டும், அதனால் தமிழ்நாட்டில் சதிர் என்றழைக்கப்பட்ட பரதம் தமிழருக்கெட்டவில்லை. அது மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்குச் செய்த குருத்துரோகம்.

ஆனால் ஈழத்தில் அப்படியிருக்கவில்லை, பரதநாட்டியம் (சதிர்) விரும்பியவர்கள் எல்லோரும் கற்றார்கள். கிறிஸ்தவ தமிழர்களும் பெருமளவில் கற்றார்கள், இன்றும் கற்கிறார்கள். ஈழத்தில் பரதநாட்டியம் தமிழரின் கலையாகக் கருதப்படுகிறதே தவிர எந்த சாதிக்கோ,சமயத்துக்கோ சொந்தமாகக் கருதப் படுவதில்லை. தமிழ் நாட்டில் பார்ப்பான்களின் ஆதிக்கத்தில் பரதநாட்டியமிருக்க, ஈழத்தில் தமிழரின் கலையாக இருக்கிறது, அதனால் இன்றைய வடிவத்தில் பரதநாட்டியம் தமிழர்களல்ல என்று அலறும் குருவி உருப்படியா ஒரு அரங்கேற்றம் பார்த்திருக்குமா என்பது கட்வுளுக்குத் தான் வெளிச்சம்.

நான் சொல்லவந்ததெல்லாம் பார்ப்பனர்கள் தமிழரின் கலையைச் சமஸ்கிருதமயமாக்கி, ஒரு இதிகாசக் கதையைப் புனைந்து விட்டார்கள், இது தமிழரின் கலையென்பது தான், இதைத் தமிழ்நாட்டின் கலை, தமிழரின் கலையென்று தான் இந்திய அரசே சொல்கிறது. ஆனால் குருவி ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர் மாதிரி, ஊர் ஒத்துக் கொள்ளாது, உலகம் ஒத்துக் கொள்ளாது என்று அடுக்கு வசனம் பேசுகிறார்.

ஈழத்தில் பரதநாட்டியம் வெறும் சமஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனங்களுக்கு மட்டும் ஆடுவதில்லை, கிறிஸ்தவ தமிழர்களின் பைபிள் கதைகளை நான் நாட்டிய வடிவத்தில் பார்த்து ரசித்துள்ளேன், போராளிகள் கூட ஈழப்போராட்டத்தைப் பரதநாட்டியத்தில் நாட்டிய நடனமாக இலங்கையில் ஆடியுள்ளார்கள், நான் சொல்லவந்ததையும், இந்த விடயத்தின் தலைப்பையும், விட்டு விட்டுத் தும்பை விட்டு வாலைப் பிடித்தவன் மாதிரித் தறி கெட்டு ஓடுகிறார்

ஒரு கலைவடிவத்துக்கு பெயர் மாற்றி கொண்டாட வேண்டிய தேவை ஏன் உங்களுக்கு வந்தது. அது சமூகத்தால் ஒதுக்கப்பட்டதாலேயே. இப்போதும் கூட தமிழர் மத்தியில் "சதிராட்டக்காரி..தேவடியாள்" என்று நாட்டிய மாதுக்களை இழிவுபடுத்தும் வழக்கு இருக்கிறது. நீங்களே உங்கள் கலையை கலைஞர்களை நேற்றுவரை இழிவுபடுத்தி சமூகத்தில் அவர்களைப் புறந்தள்ளி கலையையும் சீரழித்து விட்டு..இப்போ யாரோ வளர்தது விட்ட கலைக்கு உரிமை பாராட்ட தவிக்கிறீர்கள்..! வெட்கம்...! தமிழர்களின் நிலை காணும் போது..வெட்கமாக இருக்கிறது.

பெயரை மாற்றியது தமிழர்களல்ல, இப்படிக் கலை வடிவங்களின் மவிசு காலத்துக்குக் காலம் கூடுவதும் குறைவதும் சாதாரணம் இது கூடத் தெரியவில்லை. Elvis Presley க்கு எப்படி மவிசு இருந்தது, அவரை மாதிரி இப்ப ஆடினால் Club இலிருந்து வெளியே இழுத்துக் கொண்டு போய்க் குளிருக்கை விட்டிட்டு கதவை இழுத்துச் சாத்தி விடுவார்கள். :lol::lol:

அப்படிக் கலைஞர்களும், கலைவடிவத்துக்கும் ஏற்ற, இறக்கம் உண்டாவது வழக்கம். இப்பொழுதெல்லாம் அமெரிக்கர்கள் அவ்வளவாக Rock and Roll ஆடுவதில்லை, யாராவது இந்தியர்கள் அதையாடி இந்தியாவில் பிரபலமடைந்தால், Rock and Roll ஐக் கண்டு பிடித்தவர்கள் அமெரிக்கரில்லை, இந்தியர்கள் என்றாகி விடுமா. சிந்தியுமையா, சிந்தியும் :lol:

இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம்.. மீண்டும் மீண்டும் இதே தவறை அந்நிய கலாசார மோகத்தோடு செய்து தேவையில்லாத கலப்புக்களை தமிழரின் தனத்துவ அடையாளத்துக்குள் புதுமை என்று புகுத்தி...நாளைய சந்ததிக்கும் இப்படியான ஓர் நிலையை உருவாக்காதீர்கள்..!

குருவி, உம்மைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும், நீர் கன நாளைக்குப் பேய்க்காட்ட ஏலாது, "கல்தோன்றா மண் தோன்றாக் காலத்துக்கு" என்ற பழமொழிக்கு, நீர் தமிழரைப் பார்த்து விட்ட நக்கலும், நகைப்பையும், உம்முடைய எழுத்திலிருந்த தமிழ்வெறுப்புத் தொனியையும் பார்த்த யாரும், இன்னும் உம்முடைய நடிப்பை நம்பினால், அவர்களைப் போல் அடிமுட்டாள்கள் யாருமிருக்க முடியாது.

சிங்களவர் கூடத் தமிழர்களுக்கு இலங்கையில் தான் உரிமையில்லை மறுக்கிறார்கள், ஆனால் அவர்கள் தமிழ் நாட்டைத் தமிழரின் மண்ணில்லையென்று மறுக்கவில்லை, உம்முடைய தமிழ் வெறுப்பு சிங்களவரை விட அதிகம், அதனால் தான் தமிழருக்கென்றொரு மண்ணில்லையென்று வாய் கூசாமல் தமிழ்க் களத்தில் சொன்ன அந்த வாய்க் கொழுப்புத் தான் தமிழர் கொடுத்த இடம்.

அதை விட தமிழ் மன்னர்கள், தங்களைத் தமிழர்களாகக் கருதவில்லையென்று வாய் கூசாமல் சொன்னீரே, நான் பதில் தந்ததும் வாய் மூடி விட்டீர். எங்களுடைய தமிழரசர்களுக்குத் தமிழில் பற்றில்லையென்று நீரும், உம்முடைய anti Tamil propaganda வைச் செய்து கொண்டே, தமிழருக்குப் புத்திமதி வேறையா

அதெப்படி ஒத்துக் கொள்வீர்கள்.. பாகிஸ்தான் கிஸ்துஸ்தானின் பகுதி..என்பது வரலாறு..அப்புறம் அரேபியர்களின் வருகையால் அது இந்தியாவை விட்டுப் பறிபோன பின்...அது ஜிஸ்துஸ்தான் என்று சொல்ல முடியுமோ...??!  

அதுபோலத்தான் சதிர் தமிழர்களின் கூத்துக்களின் ஒன்று. அதைத் தமிழர்களே சீரழித்துவிட்டு... இப்போ அதே வடிவத்தில் ஆனால் வேற்றுமைகள் கொண்ட பரதநாட்டியத்தை தங்களது என்று சாதிக்க முடியுமோ..??!

எள்ளளவும் சம்பந்தமில்லாத உதாரணம், சதிராட்டம் அல்லது பரதநாட்டியம் ஒன்றும் தமிழரிடமிருந்து பறிபோகவில்லை, இதிலிருந்து குருவிக்குப் பரதநாட்டியம் அவ்வளவு பரிச்சயம் இல்லை என்பது தெரிகிறது, பரதநாட்டியம் இன்றும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை கற்பித்த படி தான் ஆடப்படுகிறது. இன்று பெரும்பாலாக பரதநாட்டியம் கற்பவர்கள் தமிழர்கள் அதிலும் ஈழத்தமிழர்கள். நான் தமிழரின் நாட்டியம் சமஸ்கிருத மயமாக்கப் பட்டு, அதன் தமிழ்வேர்கள் மறைக்கப் பட்டு விட்டது, பரதக்கலையைப் படிக்கும் சில ஈழத்தமிழர்களுக்கே அது தெரியாதென்று நான் சொன்னேன் அதற்கு பரதநாட்டியம் பறி போய் விட்டதாக, ஜிங்குஸ்தான் உதாரணம் சொல்லி ஒரு ஜிங்குசா விடுகிறது குருவி

தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்.

குருவி நான் முதலிலேயே சொல்லியிருக்கிறேன், இன்றைய பரதநாட்டியம் தமிழரின் சதிராட்டத்தின் தொடர்ச்சி, பரதமுனிக் கதையெல்லாம் இடையில் 1930 க்குப் பின்னால் வந்தது. இதை திரு. வி. கல்யாணசுந்தரனார் நிரூபித்துள்ளார்.

நீர் சும்மா அனுவின் Home Page ஐ மட்டும் பார்த்து விட்டு அளக்காதேயும் இங்கே. நீர் முதலில் ஒரு Websiste ஐப் பார்த்து விட்டுப் பரதமுனியின் காலம் கிறிஸ்துவுக்கு முன் 4000 என்றீர், பின்பு இன்னொரு Website ஐப் பார்த்துவிட்டு கி.மு 2 ம் நூற்றாண்டென்றீர், பின்பு ஐந்தாவது வேதம் என்று அவியல் விட்டீர், இந்து சமயத்தில் ஐந்தாவது வேதமொன்றில்லை, நான்கு வேதங்கள் தான், வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே, என்று பாடிய தமிழ் நாவுக்கரசனையே பொய்யனாக்க முனைந்தீர். அபச்சாரம், அபச்சாரம், சிவநிந்தனை! ஐயகோ! யாரிடம் சொல்லியழுவேன் :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரண்ணாவுக்கு பார்ப்பனியம் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..

உங்கள் அதியமான்.. ஓள(அவ்)வையார்.. திருவள்ளுவர்.. சேர சோழ பாண்டியர்.. சங்கப் புலவர்கள் அத்தனைபேரும் பிராமணர்கள்தான்..

..

:lol::lol: சுகுமாரண்ணாச்சி (அல்லது சுகுமார் ஐயன்,) ஒவ்வொரு முறையும், நீங்கள் இப்படி ஏதாவது எழுதி நான் சொல்லும் கருத்துக்கு வலுச்சேர்ப்பீர்கள். :lol::lol:

நன்றி! சுகுமாரண்ணாச்சி! இதைத் தானே நானும் சொன்னேன், பார்ப்பான்கள் செய்த வேலையே இது தான், புலவர்கள், அறிஞர்கள், அரசர்கள் எல்லோரும் பார்ப்பான்கள், தமிழர்களிடம் ஒன்றுமில்லை, எல்லாம் அவர்களிடம் இரவல் வாங்கியதென்பது தான். அந்தக் காலத்தில் இப்படிக் கதை விட்டான்கள். இப்பவும் நாங்கள் ஏமாளிகளாக இருக்கலாமோ.

இன்று கூட சில மாதங்களுக்கு முன்பு காஞ்சி காமகேடி பீடம் வெளியிட்ட பார்ப்பான்கள் சரித்திரம் என்ற புத்தகத்தில் தமிழர்களைக் குரங்குகளாவும், பார்ப்பான்கள் தாண் தமிழ் மண்ணின் ஆதிக்குடிகளாகவும் கதை விட்டிருக்கிறார்கள் என்பது தெரியுமோ. உங்களுக்கு அதுவும் நிச்சயமாகத் தெரிஞ்சிருக்கும், சுகுமாரையரே, அதையும் எடுத்து விடுங்கோ. வேறு யாராவது பிரபலமான அரசர்களையும் பார்ப்பான் என்று சொல்லுங்கோ

ஆரூரண்ணா.. நீங்கள் தஞ்சாவூர் பெரியகோவில் பார்த்திருப்பீர்கள்தானே.. கோபுரம் பார்த்திருப்பீர்கள்தானே.. இந்தக் கோபுரம் நிறைய சிற்பங்கள் காண்கின்றீர்கள்தானே.. அவற்றில் உள்ளவை நீங்கள் கேட்கும் ஆதாரங்கள்..

நான் உதாரணத்துக்கு தந்தது ஒரு கோவில்.. அங்கு பட்டி தொட்டியெல்லாம் கோவில்கள் கோபுரங்கள் இருக்கின்றன.. அத்தனையையும் சிற்ப வடிவில் செதுக்கியுள்ளார்கள்.. ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்..

"அபச்சாரம்" "அபச்சாரம்" என்னண்ணா சமஸ்கிருதம் பேசுகிறீர்கள்?

:?: :?:

  • கருத்துக்கள உறவுகள்

அருரன், நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். முயலைப்பார்த்தும் வேணுமென்றே முயலுக்கு 3 கால்கள் என்று சொல்பவர்களுடன் பதில் அளிக்கமால், தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரண்ணா.. நீங்கள் தஞ்சாவூர் பெரியகோவில் பார்த்திருப்பீர்கள்தானே.. கோபுரம் பார்த்திருப்பீர்கள்தானே.. இந்தக் கோபுரம் நிறைய சிற்பங்கள் காண்கின்றீர்கள்தானே.. அவற்றில் உள்ளவை நீங்கள் கேட்கும் ஆதாரங்கள்..  

நான் உதாரணத்துக்கு தந்தது ஒரு கோவில்.. அங்கு பட்டி தொட்டியெல்லாம் கோவில்கள் கோபுரங்கள் இருக்கின்றன.. அத்தனையையும் சிற்ப வடிவில் செதுக்கியுள்ளார்கள்.. ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்..

"அபச்சாரம்" "அபச்சாரம்" என்னண்ணா சமஸ்கிருதம் பேசுகிறீர்கள்?

:?:  :?:

சுகுமாரண்ணே! என்ன சொல்ல வாறீங்க, தமிழன் கட்டிய பழம்பெரும் கற்கோயில்களையும் நீங்க தான் மணியடிச்சுக் கொண்டு கட்டினீங்க என்று அளக்கப் போறீங்களா?

அப்ப ராஜராஜ சோழனும் ஒரு பார்ப்பானா? :lol::lol:

தமிழர்கள் தங்களுடைய சிற்பக்கலையைப் பாவித்து, தங்களின் நாட்டியக் கலையின் வடிவாக அவர்கள் கொண்ட மதக் கதைகளை அவர்கள் கட்டிய கோயில்களில் வடித்ததற்கும், உமக்குமென்ன சம்பந்தம்?

எங்களின் முன்னோர்கள் உங்களைக் கோயிலில் வேலைக்கு மட்டும் தான் கொண்டு வந்தார்கள், உங்களுக்கும், தமிழனின் சிற்பக்க கலைக்கும், கோயில்களுக்கும் ஒரு தொடர்புமில்லை, நீங்கள் வெள்ள்கைக் காரனுக்குப் பந்தம் பிடித்து சில கோயில்களின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டீர்கள் அவ்வளவு தான்.

பார்ப்பானல்லாத மதுரை ஆதீனம் பார்ப்பான்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா, வாசியும்

"கோவில்களைக் கட்டியது தமிழ் மன்னர்கள், அதற்கு உதவி செய்தது, உழைப்புக் கொடுத்தது, வியர்வை கொடுத்தது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்குச் சாமியைச் சுமக்க, பூசை செய்யத் தடையா?

வடநாட்டில், குறிப்பாக காசியில், கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும் அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்" என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துக்களைப் பேசினார்."

நன்றி: தமிழ்நாதம்

அண்ணா நீங்கள் ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்.. அங்கு கிறிஸ்தவம் இல்லை.. அத்தனையும் பிராமணம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரண்ணாவுக்கு பார்ப்பனியம் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..

உங்கள் அதியமான்.. ஓள(அவ்)வையார்.. திருவள்ளுவர்.. சேர சோழ பாண்டியர்.. சங்கப் புலவர்கள் அத்தனைபேரும் பிராமணர்கள்தான்..

À¢Ã¡Á½÷¸û ÓÊÝÎõ ÅÆì¸õ ¦¾ýÉ¡ðÊø ÁðÎÁøÄ ż¿¡ðÊÖõ þÕó¾¢Õì¸Å¢ø¨Ä. ż¿¡ðÊø À¢Ã¡Á½÷¸û ÁýÉ÷¸Ç¢ý «Ãº¢Âø ¬§Ä¡º¸÷¸Ç¡¸×õ ¬º¡ý¸Ç¡¸×§Á þÕóÐ ÅóÐûÇÉ÷. ¦¾ýÉ¡ðÊø «ó¾ þ¼í¸Ç¢ø ܼ «Å÷¸û þÕó¾¢Õì¸Å¢ø¨Ä. რრ§º¡ÆÉ¢ý «Ãº º¨À¢ø ¬§Ä¡º¸÷ ±ýÈ §À¡÷¨Å¢ø ѨÇóÐ ÌÎõÀòÐìÌû À¢Ç¨Å ²üÀÎò¾ ÓÂýÈ À¡÷ôÀ¡½¢üÌ ¿¼ó¾ ¸¨¾¨Â «È¢ó¾¢Õì¸Å¢ø¨Ä¡?

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். இலங்கையில் மாற்றி எழுதப்பட்ட தமிழர்கள் வரலாற்றையே நாம் இன்னும் திருத்தமுடியாது இருக்கிறோம். பரந்த பாரத தேசம் அடங்கிய சர்ச்சைக்குரிய புனைகதைகள் அடங்கிய ஒரு விடயத்தை ஒரு சிலரின் கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பது சாத்தியமானதல்ல. அதைவிடவும் அவர்களின் பாதையில் சென்று அதை நிராகரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உண்டு..! அதை உணரத்தவறியவர்களில் நீங்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது சாபக்கேட்டுக்கல்ல.. ஆளும் கட்சியின் தவறுகளை செயற்பாடுகளை செம்மைப்படுத்தவே.! அந்த வகையில் உங்கள் கருத்தை உணர்வுபூர்வமாக மட்டுமன்றி நியாயம் பிறப்பிக்கவல்லதாகவும் வையுங்கள். தவறான கண்ணோட்டங்களால் தனிநபர் வசைபாடல்கள் செய்வதால் இருக்கும் கருத்துக்கள் மாறிவிடாது. கருத்துச் சொல்லப்படும் போதுதான் விளக்கமும் சான்றும் தெளிவும் பிறக்கும்..! :P :idea:

வணக்கம் குருவிகள்.

உங்கள் வாதத்தை பார்க்காமல் விடவில்லை.

எனக்குத் தோன்றும் சிறிய கேள்வி!

தொடக்கத்தில் இது தேவதாசிகளின் நாட்டியம் இந்த இழி நடனத்தை தமிழர் ஏற்ற வேண்டுமா என்று கேட்கின்றீர்கள்.

பின் சொல்லுகின்றீர்கள். இதை பாப்பாணர் தான் காப்பாற்றினார்கள். எனவே தமிழருக்கு சொந்தமில்லை என்று.

இவ்விரண்டின் மூலம் நாம் பட்டறிவது என்னவென்றால், தமிழருக்கு இதை சொந்தமாக காட்டவிடக்கூடாது என்ற எண்ணம் தானே உங்களிடம் இருந்து பிரதிபலிக்கின்றது.

(இதற்கு ஆதாரம் காட்டியாக வேண்டும் என்று நினைக்கவில்லை. எழுதிய உங்களுக்குத் தெரியும். அப்படி வேண்டும் என்றால் அதை காட்டத் தயார்)

சுகுமாரன்,

நீங்கள் தவறான கருத்துக்களை களத்தில் கொடுத்து இருக்கிறீர்கள்... சேர, சோழ, பாண்டிய மன்னர்களை எந்த வகையில் பிராமணர்கள் என்கிறீர்கள்.... இது கண்டிப்பாக வரலாற்றுப் பிழை.... ஆதாரம் தாருங்கள்.... திருவள்ளுவர், அவ்வையார், அதியமான் இவர்களை எந்த வகையில் பிராமணர் என்கிறீர்கள்?

வணக்கம் குருவிகள்.

உங்கள் வாதத்தை பார்க்காமல் விடவில்லை.

எனக்குத் தோன்றும் சிறிய கேள்வி!

தொடக்கத்தில் இது தேவதாசிகளின் நாட்டியம் இந்த இழி நடனத்தை தமிழர் ஏற்ற வேண்டுமா என்று கேட்கின்றீர்கள்.

பின் சொல்லுகின்றீர்கள். இதை பாப்பாணர் தான் காப்பாற்றினார்கள். எனவே தமிழருக்கு சொந்தமில்லை என்று.

இவ்விரண்டின் மூலம் நாம் பட்டறிவது என்னவென்றால், தமிழருக்கு இதை சொந்தமாக காட்டவிடக்கூடாது என்ற எண்ணம் தானே உங்களிடம் இருந்து பிரதிபலிக்கின்றது.

(இதற்கு ஆதாரம் காட்டியாக வேண்டும் என்று நினைக்கவில்லை. எழுதிய உங்களுக்குத் தெரியும். அப்படி வேண்டும் என்றால் அதை காட்டத் தயார்)

தூயவன்.. தேவதாசிகள் நடனம் இழிவென்று நாம் சொல்லவில்லை. சதிராட்டம்..சதிராட்டக்காரி..த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தூயவன்.. தேவதாசிகள் நடனம் இழிவென்று நாம் சொல்லவில்லை. சதிராட்டம்..சதிராட்டக்காரி..த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.