Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். குடாநாட்டில் மீண்டும் பதிவு நடவடிக்கை உக்கிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடாநாட்டில் மீண்டும் பதிவு நடவடிக்கை உக்கிரம் _

வீரகேசரி இணையம் 6/19/2011 8:05:52 AM

யாழ். குடாநாட்டில் மீண்டும் படைத்தரப்பு பதிவு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இப்பதிவுகள் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய குழப்பம் மக்களிடையே தொடர்கின்றது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, பொலிஸார் கிராம சேவையாளர்களுடன் இணைந்து, குடும்பங் களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததை குடும்பப் பதிவு தொடர்பான கணனிப்பதிவுகளை, மேம்படுத்தவே பொலிஸ் பதிவென பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார்.

எனினும் பொலிஸார் இப்போது குடும்பப் பதிவுகளை பூரணப்படுத்தியுள்ள நிலையில் பொது மக்களது வாகனங்கள் தொடர்பான விபரங்களைப்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். கிராம சேவையாளர் பிரிவுகள் ரீதியாக, பயன்பாட்டிலுள்ள அனைத்து வாகனங்களது விபரங்களும் இப்போது பொலிஸாரால் திரட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பிர>தேச செயலகங்கள் ரீதியாக இப்பதிவுகள் பேணப்பட்டு நடைமுறையிலுள்ள நிலையில் பொலிஸார் ஏன் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே படையினர் கிராமங்கள் தோறும் ஆரம்பித்திருக்கும், பதிவு நடவடிக்கைகளை, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். நீதிமன்றம் பதிவு நடவடி க்கைகளை முழுமையாக கைவிடக் கூறியிருக்கவில்லையெனவும் அவர் விபரித்துள்ளார்.

ஆனாலும் படைத்தரப்பின் பதிவு நடவடிக்கைகள் இம்முறை வரையறையேதுவுமின்றியே நடந்துவதாக குற்றஞ்சாட்டுகின்றது. காலைவேளைகளில் முகாம்களிலிருந்து புறப்படும் எட்டு முதல் பத்துப்பேர் வரையி லான சிப்பாய்களைக் கொண்ட குழுவே பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக வீட்டை சல்லடை போட்டுத் தேடும் இவர்கள் சமையலறை மற்றும் குளியலறை யைக் கூட விட்டு வைப்பதில்லையென குற்றஞ்சாட்டப்படுகின்றது. பின்னர் வீட்டு அங்கத்தவர்களது விபரங்கள் திரட்டப்படு வதுடன், எடுத்துவரும் கைத்தொலைப்பேசி களால் குடும்ப அங்கத்தவர்களும், வீடுகளும் புகைப்படம் பிடிக்கப்படுவதாக கூறப்படு கின்றது.

இதனிடையே இப்பதிவு நடவடிக்கைக ளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அச்சுறுத்தப் படுவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அவ்வாறானவர்களது வீட்டிற்கு, ஆண்கள் எவரும் இல்லாத நிலையில் அங்கு மீண்டும் செல்லும் படையினர், பெண்களை அச்சுறுத்திவருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிட்டியுள்ளதாகவும் அத்தரப்புகள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் பதிவுகளை மேற்கொண்ட வீடுகளுக்கு அது தொடர்பான ஆவணங்கள் எதனையும் வழங்க படையினர் மறுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக, குடும்ப அங்கத்தவர்களில் எவராவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனரா? காணாமல் போயுள்ளனரா? தடுப்பு முகாம்களில் உள்ளனரா என்பது பற்றியே கேள்விகள் அமைகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கியுள்ள அங்கத்தவர் கள் பற்றியும் அதிகம் கேள்வி எழுப்பப் படுவதாக கூறப்படுகின்றது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32265

யாழில் இராணுவப் பதிவுகள் இன்றுமுதல் நிறுத்தம் : யாழ் கட்டளைத் தளபதி

யாழ்ப்பாணத்தில் இராணுவப்பதிவுகள் இன்று முதல் நிறுத்தப்பட்டு இருப்பதாக பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்பதிவுகள் நிறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் 51 ஆவது படைப்பிரிவின் அதிகாரிகளான லியனகே பல்கம, பிராஸ்கின் றொட்ரிகோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/23303-2011-06-18-15-58-25.html

சிங்கள பயங்கரவாதிகளின் இடைவிட்ட இடைவிட்ட பதிவு நடவடிக்கை

தேர்தலில் நிற்க / வெல்ல மட்டும் தான் தாம் என நினைக்கும் கூத்தமைப்பின்,

உருப்படியான வழக்கொன்றை தாக்கல் செய்ய வக்கிலாத அரைவேக்காட்டு சட்டத்தரணிகள் கூடம் நிரம்பிய கூத்தமைப்பின்,

கையாலாகத் தன்மையை இது வெளிப்படுத்துகிறது.

இதுவரை பதிவு செய்தவர்களுக்கு, அதற்கான அத்தாட்சியை உடன் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் ஆட்பதிவினை இடைநிறுத்தியது இராணுவம்: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் அனைத்தினையும் அறிவோம் என வீறாப்பு பேசுகிறார் மஹிந்த ஹத்துருசிங்க

[sunday, 2011-06-19 09:48:42]

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வந்த ஆள்பதிவுகள் அனைத்தும் நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன என்று யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

படையினர் ஆள்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். விசாரணையின் போது பொலிஸ் மா அதிபர், யாழ். படைகளின் தளபதி ஆகியோருக்காக நீதிமன்றுக்கு வந்திருந்த பிரதி சட்டமா அதிபர், அனைத்துப் பதிவுகளையும் நிறுத்துவதாக உறுதிமொழி அளித்திருந்தார்.

அதனை அடுத்து குடாநாட்டில் ஆள்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளைப் படையினர் நிறுத்தி இருந்தனர். ஆனால், கடந்த ஓரிரு வாரங்களாக மீண்டும் இந்தப் பதிவு நடவடிக்கைகள் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று யாழ். நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, பதிவுகள் உடனடியாக நிறுத்தப்பட்டன என்று அறிவித்தார். கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டதன் அடிப்படையில் பதிவுகளை உடன் நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு உடனடியாகவே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததன் காரணத்தாலேயே அதனை நிறுத்துவதற்குப் படையினர் முடிவு செய்துள்ளனர். விரைவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதால், படையினர் தமக்குத் தேவையான விவரங்களை அதிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45105&category=TamilNews&language=tamil

சிங்கள பயங்கரவாதிகளின் இடைவிட்ட இடைவிட்ட பதிவு நடவடிக்கை

தேர்தலில் நிற்க / வெல்ல மட்டும் தான் தாம் என நினைக்கும் கூத்தமைப்பின்,

உருப்படியான வழக்கொன்றை தாக்கல் செய்ய வக்கிலாத அரைவேக்காட்டு சட்டத்தரணிகள் கூடம் நிரம்பிய கூத்தமைப்பின்,

கையாலாகத் தன்மையை இது வெளிப்படுத்துகிறது.

இதுவரை பதிவு செய்தவர்களுக்கு, அதற்கான அத்தாட்சியை உடன் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடா நாட்டில் இராணுவப் பதிவுகள் தொடர்கின்றன - ஹத்துருசிங்க சொல்வதொன்று செய்வதொன்று:-

21 ஜூன் 2011

மக்கள் அதிர்ப்தி

யாழ் குடா நாட்டில் இராணுவப் பதிவுகள் தொடர்கின்றன - ஹத்துருசிங்க சொல்வதொன்று செய்வதொன்று:-

யாழ் குடா நாட்டில் இராணுவப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டு விட்டதாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க அறிவித்த போதிலும் பதிவு நடவடிக்கைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. வலிகாமத்திலும் வடமராட்சியிலும் பல பகுதிகளிலும் இந்த பதிவு நடவடிக்கைகள் தொடர்வதாகக் கூறப்படுகின்றன.

யாழ் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் ஓரளவு ஓய்ந்திருக்கின்ற போதிலும் கிராமப் புறங்களிலும் ஏனைய பகுதிகளிலும் இந்தப் பதிவு நடவடிக்கைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. படையதிகாரிகள் சகிதம் வீடுகள் தோறும் பயணிக்கும் படையினர் இந்தப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக வீடுகளுக்கு வரும் படையினர் வீடுகளில் அறைகள் உள்ளனவா, கிணறு உண்டா, மலசலகூடம் உண்டா என பல்வேறு கேள்விகளைக் கேட்பது குடும்பத்தவர்களை வேடிக்கைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், முன்னாள்ப் போராளிகள் இருந்தார்களா?, எவராவது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா?, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகள் விபரங்கள் என்பன தொடர்பாக படைத்தரப்பு துருவித்துருவி விபரங்களைக் கேட்டுப் பதிவது அச்சத்தை ஊட்டுகின்றது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான இராணுவப் பதிவுகள் படைத்தரப்பால் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றின் உதவியை நாடியது. நீதிமன்றப் படியேறப் பின்னடித்த படைத்தரப்பு பதிவுகளைக் கைவிடுவதாகக் கூறியது.

ஆனாலும் 4 தடவைகளுக்கு மேலாக இவ்வாறு கூறுவதும் பின்னர் படையினர் இரகசியமாகப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அது அம்பலமான பின்னர் கூட்டமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டுவதும் பின்னர் இடைநிறுத்துவதுமான சம்பசங்களே தொடர்ந்தன. இதனிடையில் அண்மையில் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்த அறிக்கையில் பதிவு நடவடிக்கைகளைக் கைவிட்டு விட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் அவரது அறிவிப்பிற்கு மாறாக குடாநாட்டின் பல பகுதிகளில் பதிவு நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

யாழ் மாவட்ட இராணுவத் தளபதி வழமைபோல் இவ்வாறான உறுதிமொழிகளை வழங்குவதும் அதனை ஊடகங்கள் செய்திகளாக வெளிவிடுகின்ற போதிலும் குடாநாட்டு மக்களால்

அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனெனில் அவர் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்று வழக்கமாக இருக்கின்றது. ஆனாலும் கொழும்பில் வெளியாகும் தேசிய நாழிதழ்கள் உள்ளிட்ட பல ஊடகங்கள் யாழ் குடாநாட்டில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்தாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டிருக்கின்றன. ஏன் இவ்வாறு தேசிய நாழி;தழ்கள் செயற்பட்டு வருகின்றன என கேள்வி எழுப்புகின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62913/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.