Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகவாச தோஷத்தால் காங்கிரஸுக்குத் தோல்வி! – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சகவாச தோஷத்தால் காங்கிரஸுக்குத் தோல்வி! – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

img1110210034_1_1.jpg

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கண்ட தோல்வி, தி.மு.க.வுடனான உறவு, அ.தி.மு.க. அரசின் ஆரம்ப நடவடிக்கைகள் – ஆகிய விஷயங்கள் பற்றி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‘துக்ளக்’கிற்கு அளித்த பேட்டி:

கேள்வி : கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றது. இத்தகைய மோசமான தோல்விக்கு என்ன காரணம்?

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் : ‘சகவாச தோஷம்’தான் எங்களது இந்த நிலைக்கு காரணம். தி.மு.க. அணியில் காங்கிரஸ் இடம் பெற்றதை மக்கள் துளியும் விரும்பவில்லை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் கூட இப்படி ஆகியிருக்காது. இதைவிட கணிசமான தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருக்கும். மேலும் காங்கிரஸ் கட்சியின் தனித் தன்மை நிலைநிறுத்தப்பட்டிருக்கும். கௌரவமாகவும் இருந்திருக்கும். அந்த முடிவு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும் வலுவான அடிப்படையாக அமைந்திருக்கும்.

கேள்வி : காங்கிரஸின் தோல்விக்கு தி.மு.க.வுடனான சேர்க்கைதான் காரணம் என்கிறீர்கள். தி.மு.க. மூன்றாவது இடத்துக்குப் போக என்ன காரணம்?

பதில் : தி.மு.க. ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது. சென்னைக்கு ஸ்டாலின், மதுரைக்கு அழகிரி என்று பிரித்துக் கொடுத்து வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறந்தது. கலைஞரின் குடும்பத்தாரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் ஆங்காங்கே சொத்துக்களை வாங்குகிறார்கள், திரைப்படத்துறையில் ஆக்ரமித்து விட்டார்கள் – என்றெல்லாம் எழுந்த புகார்களை மக்கள் மறக்கவில்லை. போதாத குறைக்கு அமைச்சர்களாக இருந்த பொன்முடி போன்ற சிலரது தான்தோன்றித்தனமும், அராஜக அரசியலும் மக்களை முகம் சுளிக்க வைத்தன.

தி.மு.க.வுக்கு எதிரான அம்சங்களை எல்லாம், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் மறக்கடிக்கச் செய்து விட முடியும் என்று தி.மு.க. தலைமையும், அமைச்சர்களாக இருந்த சிலரும் தப்புக் கணக்குப் போட்டார்கள். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் என்று பணத்தை வினியோகம் செய்தார்கள். ஆனால், அதைப் பெற்றுக் கொண்டவர்களே கூட, ‘இவர்களிடம் எவ்வளவு லஞ்சப் பணம் இருந்தால், இப்படி ஆயிரம் இரண்டாயிரமாகக் கொடுப்பார்கள்?’ என்று மலைத்து விட்டனர். ஆகவே, அதுவும் தி.மு.க.வுக்கு எதிராகத்தான் முடிந்தது.

கேள்வி : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா, கனிமொழி ஆகியோரைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் மீதும் புகார்கள் வந்துள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவர் மீது முதலிலேயே புகார்கள் கூறப்பட்டன. தற்போது மேலும் ஓரிரு குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே அவர் பதவி விலகுவதுதான் முறையாக இருக்கும். அவர் ராஜினாமா செய்ய மறுத்தால், அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கேள்வி : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில் : முதலில் தி.மு.க.வுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று முடிவு செய்ய வேண்டும். கட்சியின் அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க.வைக் காப்பாற்ற எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். மத்திய காங்கிரஸ் அரசு கல்வி, வேளாண்மை போன்ற துறைகளில் நிறைவேற்றியுள்ள பணிகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளைத்தான் நான் கூறுகிறேன்.

கேள்வி : அ.தி.மு.க. அரசின் ஆரம்பம் எப்படி இருக்கிறது?

பதில் : பாராட்டும் வகையில்தான் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் சில திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் ஜெயலலிதா நிருபர்களைச் சந்தித்த போது, அவரது பேச்சு, அவரது சிந்தனை முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஆக்கபூர்வமாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. பழைய தலைமைச் செயலகத்தில் இருந்தே அரசு இயங்குவது என்ற முடிவை எடுத்ததற்கு, அவர் தெரிவித்துள்ள காரணம் ஏற்கும்படியாகவே உள்ளது.

பேட்டி: எஸ். ரமேஷ்

நன்றி:துக்ளக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.