Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் கொலைக்களம் இந்திய ஊடகங்களில் வெளியாகவுள்ளது :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கொலைக்களம் இந்திய ஊடகங்களில் வெளியாகவுள்ளது :

03 ஜூலை 2011

டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நெருக்கடிகளையும் மீறி..

இலங்கையின் கொலைக்களம் இந்திய ஊடகங்களில் வெளியாகவுள்ளது :

2009- ல் வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்ததாக இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஆதாரங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சேனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படம் தற்போது இந்திய ஆங்கில ஊடகமான ஹெட்லைன்ஸ் டுடே விலும் இம்மாதம் 7,8,9 தேதிகளில் ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது அத்தொலைக்காட்சி.

டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நெருக்கடிகளையும் மீறி தொலைக்காட்சியில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்னும் நிலையில், இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகும் நிலையில் ஏனைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கும் இலங்கையில் தமிழர் படுகொலை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியாக வேண்டிய நெருக்கடி ஒன்று உருவாகும் என்று தெரிகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63525/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அடிக்கடி எழுதுவது இது தான்!

சாதாரணமான இந்திய மக்கள், தங்களது அரசாங்கம் எமதினத்துக்குச் செய்த அநியாயங்களை அறியாமல் இருக்கின்றார்கள்!

இந்திய அரசின் உண்மை முகம் அவர்களுக்குத் தெரியும் போது, எமது தீர்வுக்கான அழுத்தங்களை அவர்கள் இந்திய அரசு மீது அதிகரிக்கலாம் அல்லது அதைத் தூக்கி எறியலாம்!

எது எப்படியோ, இந்த ஓளி பரப்பு எமக்குச் சாதமான நிலையையே ஏற்படுத்தும்!!!

அவர்கள் இதைதான் வெளியிட இருக்கிறார்கள்....... கவனம்

http://www.tamilwin.com/view.php?20cIBB30eRjQC4ebiGprcbdF92Eddc8292bc41pG3e42oQj2023PLG22

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இதைதான் வெளியிட இருக்கிறார்கள்....... கவனம்

http://www.tamilwin.com/view.php?20cIBB30eRjQC4ebiGprcbdF92Eddc8292bc41pG3e42oQj2023PLG22

நன்றிகள்! சிறிலிங்கம்!

இந்திய தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களம்! - ஜெயலலிதாவின் செவ்வியையும் வெளியிடத் திட்டம்?

புதுடில்லியைத் தளமாகக் கொண்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று 'இலங்கையின் கொலைக்களம்' எனும்  ஆவணப்படத்தை இவ்வாரம் ஒளிபரப்பவுள்ளது. 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தை ஒளிபரப்புவதற்கான அனுமதியை சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து இத்தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கும், வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கும், சனிக்கிழமை இரவு 10 மணிக்கும் இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பாகவுள்ளது. அத்துடன், இந்த ஆவணப்படம் ஒளிபரபப்பட்ட பின்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் செவ்வியையும் வெளியிட உள்ளதாக இத்தொலைக்காட்சி நிலையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பவுள்ள தொலைக்காட்சி நிறுவனம் இது குறித்த விளம்பரங்களை சென்னை மாநகரில் காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பணிகளைச் செய்வதற்காக பரப்புரை நிறுவனம் நிறுவனம் ஒன்றை இத்தொலைக்காட்சி வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை நாளை (04.07.11) ஒளிபரப்பவுள்ளது. ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நான்கு கோணங்கள் என்ற நிகழ்ச்சியிலேயே இந்த ஆவணப்படம் இடம்பெறவுள்ளது. இத்தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்புவதற்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்காத் தூதரகம், இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பாமல் தடுப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பும் முடிவை பரிசீலனைக்கு உட்படுத்துமாறு ஏபிசி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்கா தூதரகம் கோரியுள்ளது.

இவ்விகாரம் தொடர்பாக ஏபிசி தொலைக்காட்சியின் நான்கு கோணங்கள் நிகழ்ச்சியின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் சூ ஸ்பென்சருடன் அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்காவின் பதில் தூதுவர் சசிகலா பிரேமவர்த்தன தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளதுடன், கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={CF750705-E5A1-45E1-921A-F3E8E5F2D2AA}

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.