Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரத்பொன்சேகா இனவாதக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார் : சிவாஜிலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, July 3, 2011, 13:34சிறீலங்கா

இனப்படுகொலை செய்தவர்களில் ஜனாதிபதிக்கு இணையாக நானும் செயல்பட்டேன் என்ற தொனியில் அழுத்தம் திருத்தமாக சரத் பொன்சேகா கூறும் கூற்றை நாங்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்க அரசியல்த் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் :-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபொழுது முன்னாள் இராணுவ உயரதிகாரியான சரத் பொன்சேகா தேவையற்ற அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கோரக்கூடாது என்றும் இந்தியாவில் இருப்பது போன்ற மாநில சுயாட்சியைக் கோராமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற பொன்சேகாவின் பொன்மொழிகளைக் கேட்டு தமிழ் மக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டதை நிராகரித்து தான் ஒரு இனவெறியன் என்பதை மீண்டும் சரத்பொன்சேனா நிலைநாட்டியுள்ளார்.

இலங்கை சிங்களவர்களுடைய நாடு, விருமபினால் தமிழர்கள் இங்கு வாழலாம் என்று கூறியதையும் மன்னித்து ஜனாதிபதி தேர்தலில் இலட்ச கண்க்காண வாக்குகளை வழங்கி ஆதரவு அளித்தது தேவையற்ற செயல் எனத் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் கவலையடைந்துள்ளனர்.

போர் தீவிரமாக நடைபெற்ற போதும் அதன் பின்னரும் இந்தியாவைப் போல அதிகாரத்தைக் கொடுப்போம் என்று கூறியதெல்லாம் வெறும் ஏமாற்று வார்த்தைகள் என்பது நிரூபணமாகியுள்ளது.

சரத்பொன்சேகா சார்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பருத்தித்துறை – முல்லைத்தீவு கரையோர ரயில் சேவை என்பதின் மரமம் இப்பொழுதுதான் புரிகிறது.

பருத்தித்துறை தொடக்கம் முல்லைத்தீவு வரைக்கும், முல்லைத்தீவு தொடக்கம் கொக்குளாய் வரைக்கும் என சிங்கள மீனவர்களின் குடியேற்றம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த ரயில் சேவைக்கு முள்ளிவாய்க்கால் கடுகதி ரயில் என்று பெயர் வைப்பார்களா என என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் மாறி மாறி இனவாத கருத்துக்களை முன்வைத்து ஆட்சி செய்து வருகின்றன. ஒன்று விரியன் பாம்பு மற்றது புடையன் பாம்பு. ஒன்று கொழுக்கட்டை என்றால் மற்றையது மோதகம் உள்ளூடல் ஒன்றுதான்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், முன்னாள் இராணுவ உயரதிகாரி சரத்பொன்சேகா மற்றும் ரணில் போன்றவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஜாதிக ஹெல உருமய, விமல் வீரவன்சவின் கட்சி, ஜே.வி.பி போன்றன இனவெறிக் கட்சிகள்.

சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டதை அடுத்து வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் பிரமுகர் நான் ஒருவன் மட்டுமே கண்டனம் வெளியிட்டேன். ஆனால் தற்போது கண்டனத்தை தேவையில்லாமல் வெளியிட்டுவிட்டேன் என வருத்தடைகிறேன்.

இனப்படுகொலை செய்தவர்களில் ஜனாதிபதிக்கு இணையாக நானும் செயல்பட்டேன் என்ற தொனியில் அழுத்தம் திருத்தமாக சரத் பொன்சேகா கூறும் கூற்றை நாங்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை.

சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடனும், அங்கீகாரத்துடனும் சுயநிர்ணய உரிமையுடன் சிங்களவர்கள் தேவையற்ற விதத்தில் தலையிட முடியாத அதிகாரங்களின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சித் தமிழ் அரசை நிறுவுவதை சரத்பொன்சேகா உட்பட அத்தனை இனவாதிக்களும் பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilthai.com/?p=20829

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு என்றால் நஞ்சு இருக்கத்தானே செய்யும் அதில் விஷம் அதிகம் இருப்பது குறைவாக இருப்பவை என இருவகையாகவுள்ளது

அதேபோல் சிங்களவனில் இனவாத சிந்தனை அதிகமாக உள்ளவர்கள் சற்று குறைவாகவுள்ளவர்கள் இதுவே வேறுபாடாகும்.

ரணில் முதல் சகல சிங்கள இனவாதிகளின், இனப்படுகொலையாளர்களின் வேஷங்களை சகல நாட்டு ராஜதந்திரிகளிடமும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி அவர்கள் சிங்கள அரசியல் பயங்கரவாதிகளின் கருத்துக்களுக்கு, உறுதி மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இல்லாதொழிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் என்றுமே சிங்களவன் தான்..! தமிழரில்தான் சிலர் போலி நியாயம் பேசியபடி சிங்களவராகித் திரிகிறார்கள்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.