Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்மநாபசாமி கோயிலில் பிரமிக்க வைக்கும் நகை குவியல்... ரூ 50 ஆயிரம் கோடி மதிப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03 ஜூலை 2011

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி தற்போது ஆய்வு நடந்து வருகிறது.

இதில் பெருமளவிலான நகைக் குவியல் கண்டெடுக்கப்பட்டு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இதுவரை ரூ. 1 லட்சம் கோடிக்கு மேலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவில் என்ற பெயரைக் கொண்ட திருப்பதி கோவிலை மிஞ்சி விட்டது திருவனந்தபுரம் கோவில்.

நேற்று பெருமளவில் தங்க நாணயங்கள், சிலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

நேற்று 6வது நாள் நடந்த சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. இவற்றின் மதிப்பை அவ்வளவு சீக்கிரம் அளவிட முடியாது என்கிறார்கள். மிகப் பெரிய மதிப்புடையவை இவை என்றும் கூறப்படுகிறது.

தூய தங்கத்தால் ஆன, ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் மதிப்பும் தோராயமாக ரூ. 1 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.

மொத்தம் உள்ள ஆறு அறைகளுக்கும் ஏ, பி, சி, டி, இ, எப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஏ அறையில் உள்ளவை குறித்து முழுமையாக சோதனை நடத்தப்பட்டு விட்டது. சி, டி மற்றும் எப் அறைகளில் தொடர்ந்து கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. பி அறையில் இன்னும் சோதனை நடக்கவில்லை. இந்த அறை 1872ம் ஆண்டுக்குப் பிறகு திறக்கப்படவே இல்லை. அதேபோல இ அறையிலும் சோதனை செய்யப்பட வேண்டியுள்ளது.

ஆய்வு திங்கள்கிழமை முதல் தொடரவுள்ளது. மிகப் பெரிய அளவில் நகைக் குவியலும், அரிய வகை பொருட்களும் கிடைத்துள்ளதால் கோவிலின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில் பாதுகாப்புப் பொறுப்பு கூடுதல் டிஜிபி வேணுகோபால் நாயரிடம் விடப்பட்டுள்ளது. விரைவில் கோவிலுக்கு மிகப் பெரிய அளவிலான பாதுகாப்புத் திட்டமிடப்படவுள்ளதாக நாயர் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் மதிப்பிலா நகைகள், பொருட்கள் யாருடைய பொறுப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் வைக்கப்படும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. கோவில் நிர்வாகம் ராஜ குடும்பத்தினர் வசம் இருப்பதாலும், அரசுக்கு இதுவரை இந்தக் கோவில் தொடர்பாக எந்த உரிமையும் இல்லாததாலும் இது மிகப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோவிலை அரசே ஏற்க உத்தரவிடக் கோரி அரசு சார்பில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அந்த வழக்கில் கிடைக்கும் தீர்ப்பைப் பொறுத்துதான் கோவிலில் உள்ள நகை உள்ளிட்ட அரிய வகை பொருட்கள் யாருடைய பொறுப்பின் கீழ் வரும் என்பது தெரிய வரும்.

மேலும் வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய மதிப்பிலான நகைகள் மற்றும் பொருட்களை தொடர்ந்து கோவிலிலேயே வைத்துப் பராமரிப்பது என்பது பாதுகாப்புக்கு உரியதல்ல என்பதால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்கள் எங்கு வைக்கப்படவுள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பத்மநாபசாமி கோயிலில் பிரமிக்க வைக்கும் நகை குவியல் - ரூ 50 ஆயிரம் கோடி மதிப்பு!!

பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் 10 கிலோ எடையுடன் 18 அடி நீள தங்க மாலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்றது பத்மநாபசாமி கோவில். இது ஒரு வைணவத் திருத்தலம்.

திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்து வருகிறது. இந்த கோவில் கருவறைக்கு அருகே 6 ரகசிய பாதாள அறைகள் நீண்ட காலமாக பூட்டப்பட்டு இருந்தன.

அந்த பாதாள அறைகளை திறந்து, உள்ளே இருக்கும் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொக்கிஷங்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்சநீதி மன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இதற்காக ஓய்வு பெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் உள்பட 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், 6 ரகசிய அறைகளுக்கும் ஏ,பி,சி,டி,இ,எப் என பெயரிட்டு ஒவ்வொன்றாக திறந்து நகைகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

ஏ மற்றும் பி அறைகளில் நகைகள் மதிப்பீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த அறைகளில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த, தங்க மணிகள், தங்கத்திலான சாமி சிலைகள், தங்க கயிறு, தங்க கிரீடங்கள், தங்க மாலைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.

கேரள பட்ஜெட்டை விட அதிகம்

அவற்றில் விலைமதிக்க முடியாத அபூர்வமான வைரம், வைடூரியம் உள்பட நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளில் உள்ள தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

கேரள மாநில ஆண்டு பட்ஜெட்டின் வருவாய் அளவே ரூ.35 ஆயிரம் கோடிதான். இந்த நிலையில் பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டி இருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஏ அறையில் இருந்த சுமார் 10 கிலோ எடைகொண்ட 18 அடி நீளமுள்ள தங்கச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது பத்மநாபசுவாமிக்கு அணிவிக்க மன்னரால் வழங்கப்பட்டது என தெரிகிறது.

ஒரு பாதாள அறையின் உள்பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாத மற்றொரு சிறிய ரகசிய அறை திறக்கப்பட்டது. அந்த அறையில் விஷ வாயு மற்றும் விஷப் பூச்சிகள் இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், முதலில் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது.

1200 தங்கச் சங்கிலிகள்

அதன்பின்னர் மதிப்பீட்டு குழுவினர், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் முகக்கவசம் அணிந்து உள்ளே சென்றனர். அங்கும் குவியல் குவியலாக நகைகள்தான் இருந்தன. 1200-க்கு மேற்பட்ட 'சரப்பொலி' என்று அழைக்கப்படும் தங்கச் சங்கிலிகள் ஒரு அறையில் இருந்தன. அவற்றில் 'அவல்' என்று அழைக்கப்படும் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன.

அவை திருவாங்கூர் மன்னர்கள், ராணிகள் அணிந்த நகைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 3 மணி மகுடங்கள், தங்கத் தாம்பாளங்களில் தங்க நாணயங்களும் இருந்தன. 'சொர்ண தண்டு' என்று அழைக்கப்படும் தங்க செங்கோல், நெக்லஸ் மற்றும் ஏராளமான பதக்கங்களும் குவிந்து இருந்தன.

ஜொலிக்கும் வைரங்கள்

பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் அதிக அளவிலான தங்கக் குடங்கள் உள்ளன. அவற்றிற்குள் தங்க க்காசுகள் குவிந்திருந்தன. அவை அனைத்தும் புதிதாக செய்யப்பட்டது போல பொலிவுடன் காணப்பட்டன.

அதேபோல பெரிய ரத்தின கற்கள் பதித்த அரியாசனம், மன்னர்கள் அணியும் கிரீடங்கள், நவரத்தின கற்கள் பதித்த தங்க கிரீடங்கள், பத்மநாபசாமி சிலை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலை வண்ணத்தில் பளிச்சிட்டன.

நெப்போலியன் கால நாணயங்கள்

இவற்றில் பிரஞ்சுப் பேரரசன் நெப்போலியன் காலத்து நாணயங்கள் ஏராளமாக இருந்தன. அதே போல வெனிஸ் நாணயங்கள் மட்டும் 70 கிலோவுக்கும் அதிகமாக இருந்தன.

எண்ணி முடிக்க ஒரு வாரம் ஆகலாம்

சந்தன மண்டபம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'ஏ' அறையில் அனைத்தும் கணக்கிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டன. அனைத்து அறைகளிலும் உள்ள நகைகளை கணக்கிட்டு மதிப்பீடு செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பையும் சேர்த்தால் இன்னும் பல ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைக் குவியல்கள் மன்னர் காலத்து நகைகள் என்பதால், அதன் தொழில்நுட்பம், வடிவமைப்பு டிசைன்கள் ஆகியவற்றை பார்ப்பதற்கு பொது மக்களும், தங்க நகை வியாபாரிகளும், நகை வடிவமைப்பாளர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

விலை மதிப்பற்ற நகைகள் இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால், பத்பநாபசாமி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

நன்றி - தற்ஸ்தமிழ்

கோயிலுக்கு முக்கியத்துவம் கூடியிருப்பதால், சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட, நவீன ஆயுதங்களைத் தாங்கிய வீரர்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருப்பதாக மாநில டி.ஜி.பி. ஜேக்கப் புன்னோஸ் தெரிவித்தார்.'பத்மநாபா கோயில் போன்ற பெரிய கோயில்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குவது என்பது எளிதானதல்ல. இதை அமல்படுத்த சில காலம் ஆகும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு அமைப்புகளை மாநில காவல்துறை தொடர்பு கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.பக்தர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது குறித்து கோயில் நிர்வாகத்திடம் காவல்துறையினர் ஆலோசித்து வருவதாக கோயிலின் நிர்வாக அதிகாரி ஹரிகுமார் தெரிவித்தார்.இந்தக் கோயிலில் இருக்கும் நகைகள் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ. ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பாதாள அறைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக, இந்தக் கோயிலுக்கு 20 பேர் மட்டுமே கையில் தடியை வைத்துக் கொண்டு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63506/language/ta-IN/article.aspx

இவை ஈழத்தமிழரை சேரவேண்டிய சொத்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.