Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞரின் குடும்பம் - சிதறிப் போன ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் குடும்பம் - சிதறிப் போன ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை-

11 ஜூலை 2011

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன்

//ஒரு உரையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது// என்பது புகழ்பெற்ற பழமொழி. திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது .திமுக என்னும் ஒரு உரைக்குள் ஸ்டாலின், வைகோ என்ற இரண்டு வாள்களை வைத்திருக்க முடியாது என்பது கலைஞர் கருணாநிதியின் வாதம். கலைஞரே எனது போர்வாள் என்று சொன்ன வைகோ கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். கலைஞருக்குப் பின் என்ற விவாதத்தில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த வைகோ வெளியேறியதோடு திமுகவில் கலைஞருக்குப் பின் என்ற பேச்சு எழ வில்லை. கலைஞருக்குப் பின் ஸ்டாலின் என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர் வரை ஏற்றுக் கொண்டார்கள்.தமிழக மக்கள் மனதிலும் அது பதியப்பட்டு விட்டது. ஆனால் ஸ்டாலிந்தான் கலைஞருக்குப் பின் முதல்வர் என்பதற்கு எதிரானவர்கள் யார்? என்று கேட்டால் கலைஞரின் இன்னொரு மகனான அழகிரியோ, கனிமொழியாகவோதான் இருப்பார்கள் என்பதுதான் தெரிகிறது. ஸ்டாலினுக்குப் போட்டியாக வளர்ந்த வைகோவை வெளியேற்றியாகி விட்டது. இப்போது திமுகவில் எஞ்சியிருக்கும் தன் குடும்பத்தினருள் யாருக்காக யாரை இழப்பது? யாருக்காக எவரை கட்சியிலிருந்து வெளியேற்றுவது? கட்சியே குடும்பம். குடும்பமே கட்சி என்றான பின் கட்சியை வழிநடத்தும் தலைவர் பலவீனமான ஒரு தலைவராக ஆவதென்பது இயல்புதான் அதுதான் இப்போது கலைஞருக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பழிவாங்கும் படலம்

.....................................

கணக்கில்லாமல் குடும்பத்தினரை அரசியலுக்குள் கொண்டு வருவதும். பதவிப் போட்டியில் குடும்பங்கள் பல கோஷ்டிகளாக பிரிந்து பனிப்போர் நடத்துவதும், ஒருவர் இன்னொருவரை மாட்டி விட்டு மகிழ்வதும். கடைசியில் மாட்டி விட்டவரே பொறியில் சிக்கிக் கொள்வதும் குடும்ப அரசியலில் சாதாரணம். ஆனால் இன்றைய சூழலில் இதற்கு சிறந்த உதாரணம் கலைஞர் கருணாநிதியின் குடும்பமும் திமுகவும்தான். திமுகவின் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்ட போது அதிக மகிழ்ச்சியாக காணப்பட்டார் தாயாநிதிமாறன். தன் கையில் இருந்த பதவியைப் பறித்து அது ஆ.ராசா கைக்கு போனதும் தயாநிதிமாறந்தான் முதன் முதலாக ஸ்பெக்ட்ரம் ஊழலை தினகரன் நாழிதள் மூலம் தமிழகத்தில் வெளிக்கொணர்ந்தார். அப்போது அவர் திமுகவில் இல்லை. குடும்பப்பகை காரணமாக கட்சியை விட்டும் தாத்தாவை விட்டும் விலகியிருந்தார். தனது தினகரன் நாளிதழில் ஆ.ராசா ஊழல் செய்து விட்டார் என்று தொடர்ந்து எழுதிய பின்னர்தான் தமிழக அரசியல்வாதிகள் ஸ்பெட்ரம் குறித்துப் பேசினார்கள். சில காலம் பிரிந்திருந்த கலாநிதிமாறன் தாத்தாவுடன் சமரசமாகி சேர்ந்து விட்டாலும் ஆ.ராசாவுக்கு எதிரான அஸ்திரங்களை அவர் விடவில்லை. ஆ.ராசா கைது செய்யப்பட்ட போது தனது நெருங்கிய சகாக்களுக்கு தயாநிதிமாறன் விருந்து கொடுத்தார் என்பது ஒரு செய்தி.

நேற்று திஹார் சிறையில் இருக்கும் ஆ.ராசா நேற்று பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கி விசாரணைக்காக கொண்டு வரப்பட்ட போது ஆ.ராசா அனைவருக்கும் இனிப்பு வழங்கியதாக ஒரு செய்தி. அவரிடம் இனிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுள் ஒருவர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும் ஒருவர்.ஆ.ராசா கைது செய்யப்பட்டது தயாநிதிமாறனுக்கு மகிழ்ச்சி. தயாநிதிமாறன் கைது செய்யப்படபோவதும் அதற்கு முன்னோட்டமாக அவரது பதவி பறிக்கப்பட்டதும் ஆ.ராசா, கனிமொழிக்கு மகிழ்ச்சி. இப்படி பரஸ்பரம் ஒருவர் கைதை இன்னொருவர் இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறவர்கள் இரு சாராருமே ஒரு கட்சியின் தலைவர்களாம். இதுதான் இன்றைய திமுகவின் எல்லா வீழ்ச்சிகளுக்கும் காரணம். ஆ.ராசாவும், கலைஞர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் நல்ல நண்பர்கள். அரசியலில் தன் நம்பிக்கைக்குரியவராக கனிமொழி கருதியது ஆ.ராசாவை. தயாநிதி மாறனுக்கு எல்லாமே தன் அண்ணன் கலாநிதிமாறன்தான். கட்சியும் அதன் தலைவர் கருணாநியும் கூட இரண்டாம் பட்சம்தான். கருணாநிதியின் மகளான கனிமொழிக்கும், பேரனான தயாநிதிக்கும் எப்போதுமே பொருந்துவதில்லை. கலைஞரின் மகனாக ஸ்டாலினுக்கும் இன்னொரு மகனான அழகிரிக்கும் எப்போதும் பொருந்துவதில்லை. ஆனால் எல்லோரும் ஒரு கட்சியில் ஒரு தலைமையின் கீழ் ஒரே குடையில்.

திமுகவின் எதிர்காலம்?

..........................................

எம்.ஜீ.ஆர் உயிரோடு இருந்தவரை கலைஞரால் முழுமையான ஒரு ஆட்சியை எப்போதுமே கொடுக்க முடியவில்லை. எம்.ஜீ.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கும்,அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த நெருக்கமும் அதற்கு ஒரு காரணம். ஆனாலும் சுமார் 15 ஆண்டுகள் வெறும் ஏழை எதிர்கட்சியாகவே திமுகவை கட்டிக்காத்தவர் கலைஞர் கருணாநிதி மத்திய மாநில அரசுகள் கொடுத்த நெருக்கடிகளின் போது சிந்தாமல் சிதறாமல் கட்சியை காப்பாற்றியவர் கலைஞர். உறுதியான திமுகவின் தொண்டர்கள்தான் அதன் பலம். அந்த பலம்தான் தொண்ணூறுகளின் துவக்கத்தில் மிருக பலத்தோடு திமுகவை ஆளும் கட்சியாக்கியது. இடையில் வந்த ராஜீவ் கொலைப்பழி சோதனையின் போது கூட துவண்டு விடாத திமுக இன்று நிலை தடுமாறி நிற்கிறது. எம்.ஜீ.ஆருக்கு குடும்பம் இல்லை. தான் யாருக்கெல்லாம் உதவி செய்ய நினைத்தாரோ அவர்களுக்கெல்லாம் பல உதவிகளை செய்தாரே தவிற யாரையும் அவர் வாழும் காலத்தில் அரசியலுக்குக் கொண்டுவரவில்லை. ஜானகி, ஜெயலலிதா என்று யாராக இருந்தாலும் அவர்களை முன்னரங்கில் நிறுத்தி இவர்கள்தான் அதிமுகவின் தலைவர்கள் என்று எம்.ஜீ.ஆர் எப்போதும் சொன்னதில்லை.ஆனால் கலைஞர் வைகோவுக்குப் பின்னர் தனது வாரிசுகளை மட்டுமே கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் நியமித்தார். சென்னை தொடங்கி மதுரை வரை ஸ்டாலினுக்கு, மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை அழகிரிக்கு, மத்தியில் தயாநிதிமாறன், கட்சியில் ஒரு பெரும் பங்கு கனிமொழிக்கு என காலம் காலமாக கட்சியை கட்டி வளர்த்த தொண்டர்களும் தலைவர்களும் ஓரம் கட்டப்பட்டார்கள். பிழைக்கத் தெரிந்த சில கட்சியில் கலைஞரின் வாரிசுகள் யாரோ ஒருவருடன் தங்களை அடையாளப்படுத்தி தங்களை காப்பாற்றிக் கொண்டார்கள். நீ ஸ்டாலின் அணியா? அழகிரி அணியா? என்று இருந்த நிலை மாறி.. கனிமொழி அணி.தயாநிதி மாறன் அணி, தயாளு அம்மாள் அணி, என்று பல அணிகள் உருவானது. கட்சிக்குள் வாய்ப்புகள் கிடைக்காத குடும்ப உறுப்பினர்களுக்கு ஏகப்பட்ட தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அரசியலிலும் தொழில் துறையிலும் கலைஞர் குடும்பத்தினர் கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு குறுகிய காலத்தில் கொடி கட்டிப்பறந்தார்கள். சினிமா, வியாபாரம், ஊடகம், என்று எந்தத் தொழிலையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர் வாரிசுகள் கட்சிக்குள் அதி வேக வளர்ச்சி அடைந்து முன்னாள் தலைவர்களை ஓரம் கட்டிய போது அந்த முன்னாள் தலைவர்களோ தலைவரின் வாரிசுகளை கலைஞருக்காக பொறுத்துக் கொண்டார்கள். கட்சி முழுமையாக கலைஞரின் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் வந்தது.கட்சியின் எல்லா முடிவுகளும் அழகிரி,ஸ்டாலின், கனிமொழி, தயாநிமாறனின் விருப்பங்களுக்கேற்ப அவர்களுக்கு பாதகமில்லாமல் எடுக்கப்பட்டன.கட்சிக்குள் வந்து விட்ட கலைஞரின் வாரிசுகளுக்கு போட்டியாக இருந்த தலைவர்கள் எல்லாம் ஓரம் கட்டப் பட்ட பின்னர். வாரிசுகளுக்குள்ளேயே போட்டி. அது அரசியல் அதிகாரப் போட்டியாகவும், தொழில் போட்டியாகவும் உருவெடுத்தது. வாரிசுகளுக்குள் உருவான பனிப்போரை பதவிப் போட்டியை பயன்படுத்திக் கொண்டவர்கள்தான் டாடா, ரிலையன்ஸ், உள்ளிட்ட அரசியல் தரகர் நீராராடியா உள்ளிட்டோர். நீராராடியாவின் தொலைபேசி உறையாடல்கள் வெளியானபோது இதைப் புரிந்து கொள்ளத் தவறினார்கள். ஆ.ராசா கைதான போது அவர் தலித் என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்றார் கலைஞர். அந்தப் காயை நகர்த்த முடியாத அளவுக்கு கனிமொழி கைதானார் கனிமொழியிடம் இருந்ததோ தனது தாயாரான ராஜாத்தி அம்மாளின் சாதியான நாடார் சாதி அபிமானம். மற்றபடி இந்த ஸ்பெக்டரம் ஊழல் என்ற ஒன்று நடந்திருப்பது உண்மை என்றால் அதில் முதல் குற்றவாளிகள் அதனால் ஆதாயம் அடைந்த தொழில் நிறுவங்களே. அவர்களை விட்டு விட்டு சில அரசியல்வாதிகளை கைது செய்வதுனூடாக ஸ்பெக்டரம் வழக்கை முடித்துக் கொள்ள நினைக்கிறார்கள்.

கலைஞர் தமிழகத்தில் ஆதரவில்லையா?

.........................................................................

பக்கத்து நாட்டில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது போரை நிறுத்துங்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுங்கள் என்று கேட்ட போது சம்பந்தமே இல்லாமல் பிரபாகரனை ஒரு சர்வாதிகாரி என்றார் கலைஞர். பிரபாகரன் சர்வாதிகாரியாக இருக்கட்டும் போரில் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுங்கள் என்ற போது “போர் நின்று விட்டது” என்று சொல்லிச் சென்றவர் கலைஞர்தான். ”போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் “ என்றும் “ பிரபாகரனைக் கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும்” என்று சொன்ன ஜெயலலிதாவின் வார்த்தைகளை மக்கள் மறந்து போனார்கள். துரோகிப் பட்டம் கிடைத்தது என்னவோ கலைஞருக்குத்தான்.இப்போது கனிமொழியை சிறையில் சந்தித்து விட்டு வெளியில் வந்து கனிமொழியில் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ள மனிதத் தன்மையற்ற இடத்தில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றால் அதற்காக திமுக கட்சியினரே கூட அசரவில்லை. தலைவரின் மகளுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் கண்டு தொண்டனே கலங்கவில்லை.விளைவு நமது கட்சியினரே நாம் ஊழல் செய்து விட்டதாக நினைக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் கலைஞர். மதுரையில் அழகிரி சென்ற திருமண விழாவில் அழைப்பிதழில் கலைஞர் அரசியல் வாரிசுகளின் படங்கள் மட்டுமே அச்சிடப்பட்டிருபப்தைப் பார்த்த அழகிரி //இது குடும்பக் கட்சி அல்ல நமது தொண்டர்களே இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கலமா? இனிமேல் என் குடும்ப அங்கத்தினரின் படங்களை திருமண அழைப்பிதழ்களில் போட வேண்டாம்// என்று கேட்டுக் கொண்டார். பலரும் வருந்தி விரும்பி ஒரு அறிவுரையாக குடும்பத்தை அரசியலில் இருந்து விலக்கி வையுங்கள் ஸ்டாலினைத் தவிற என்று சொன்னபோது வேண்டாதவர்களாக்கப்பட்டு ஓரம் காட்டப்பட்ட நிலையில். ஒரு மாபெரும் தோல்விக்குப் பின்னர் இப்போது அதை அழகிரியும் கலைஞரும் உணர்கிறார்கள். உண்மையிலேயே உணர்கிறார்களா? அல்லது விலகிச் சென்ற தொண்டர்களை மீண்டும் அரவணைப்பதற்காக உணர்வது போல நடிக்கிறார்களா? என்றும் தெரியவில்லை. இப்போது தயாநிதிமாறனின் பதவியும் பறிக்கப்பட்டு அதை திமுகவின் ஒரு பிரிவினரே கொண்டாடும் நிலையில் கலைஞர் சொல்கிறார் //இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. யாரையும் இகழ்வதோ உயர்த்துவதோ ஊடகங்களின் வேலை. இப்போது ஊடகங்களின் இகழ்ச்சிக்கு முன்னர் கனிமொழியும். ஆ.ராசாவும் பலியானார்கள் இதற்கு தாயாநிதிமாறன் ஒன்றும் விதிவிலக்கல்ல// என்கிறார். 18 மொழிகளில் சானல்கள், கிட்டத்தட்ட எல்லா இந்திய மொழிகளிலும் ரேடியோ எப்.எம் கள் என மாறன் சகோதரர்களின் ஊடக சாம்ராஜ்ஜியம் இந்தியாவிலேயே குறுகிய காலத்தில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. இன்று கலைஞர் சொல்லக் கூடிய ஊடக ஆட்சியை தமிழகத்தில் நடத்தியவர்கள்தான் மாறன் சகோதரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை தூக்கியும், வேண்டாதவர்களை அவர்களின் வாழ்வையே நாசமாக்கும் அளவுக்கு இழிவு செய்யும் ஊடக தர்மத்தைக் கொண்டவர்கள்தான் இந்த மாறன் சகோதரர்கள். இதனால் சகல தரப்பினரிடமும் அதிருப்தியை சம்பாதித்தார்கள் அவர்கள். இன்றைக்கு வட இந்திய ஊடகங்களின் ஆதிக்கம் தொடர்பாக கவலைப்படும் கலைஞர் ஏன் தன் குடும்பத்தினர் தமிழக மக்கள் மீது நடத்திய ஊடகச் சுரண்டல் குறித்து கவலை கொள்ளவில்லை.கலைஞர் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை தனது வாரிசுகளைப் பற்றி கவலைப்பட்டார். தமிழக மக்களுக்கோ கவலைப்படவும், வருத்தப்படவும் ஏராளமான பிரச்சனைகள் இருக்கும் போது கலைஞரின் குடும்பத்தினரைப் பற்றி அவர்கள் எப்படி கவலைப்படுவார்கள்?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63915/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில் மரணித்த உறவுகளின் சாபம் கலைஞர் குடும்பத்தை சும்மா விடுமா ?

சிதறிப் போன கொள்ளைக் கூட்டத்தின் கதை.

சிதறிப் போன கொலைகாரக் கும்பலின் கதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.