Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் "துவிச்சக்கரவண்டி ஒன்று இல்லாமல் எதையும் செய்ய முடியாது"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் "துவிச்சக்கரவண்டி ஒன்று இல்லாமல் எதையும் செய்ய முடியாது"

[ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 08:24 GMT ] [ நித்தியபாரதி ]

நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக கைவிடப்பட்டிருந்த 40,000 வரையிலான துவிச்சக்கரவண்டிகள், சொந்த இடங்களுக்கு மீளக் குடியேறிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"இந்த மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் மிகவும் தேவைப்பாடுடைய ஒன்றாகும். இதன் காரணமாகவே மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியவுடன் துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளோம்" என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதியுத்தமானது 2009,மே,18 ல் முடிவிற்கு வந்த போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக ஒடுங்கிய சதுப்பு நிலப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பெருந் தொகையான துவிச்சக்கரவண்டிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன.

1983 இலிருந்து தனித் தாய்நாடு வேண்டிப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அகப்பட்டுக் கொண்ட பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக தமது கைகளில் அகப்பட்ட ஒரு சில உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு 'யுத்த வலயமற்ற பகுதி' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குத் தப்பிச் சென்றனர்.

யுத்த காலப்பகுதியில் இப்பிரதேசங்களில் கடமையாற்றிய உதவிப் பணியாளர்களின் கருத்துப்படி, 12கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தில் 200,000 வரையிலான பொதுமக்கள் அகப்பட்டிருந்தனர்.

இவ்வாறு இந்த மக்களால் கைவிடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை ஒன்று சேர்த்து அவற்றைத் திருத்தி தற்போது பொது மக்களின் பாவனைக்காக வழங்கியுள்ளதாக மாகாண சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து வசதிகள் மிக அரிதாகக் காணப்படுகின்ற, பின்தங்கிய கிராமங்களில் குறிப்பாக வன்னியில் வாழும் மக்களின் தேவைகளுக்காக இந்தத் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"சில பின்தங்கிய கிராமங்களில் வேறு வகையான போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ள முடியாதுள்ளது. வீதிகள் மிகவும் சேதமுற்றுக் காணப்படுகின்றன. ஆகவே இவ்வாறான பின்தள்ளப்பட்ட பிரதேசங்களில் துவிச்சக்கரவண்டி என்பது மிகவும் அத்தியாவசியாமான ஒரு போக்குவரத்து சாதனமாக உள்ளது" என வட மாகாண பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இயக்குனர் அந்தோனிப்பிள்ளை விநோதராஜ் தெரிவித்துள்ளார்.

"போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகின்ற மிகப் பிரதான போக்குவரத்து சாதனமாக துவிச்சக்கரவண்டி விளங்கும் அதேவேளையில், சில நேரங்களில் இத்துவிச்சக்கரவண்டி மட்டுமே போக்குவரத்தின் போது பயன்படுத்தப்படுகின்ற ஒரேயொரு சாதனமாகவும் காணப்படுகின்றது" என முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள 500 இற்கும் மேற்பட்ட மக்களில் ஒருவரான 55 வயதுடைய சந்திரதாஸ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

பேரூந்து சேவை ஒழுங்குமுறையாக நடைபெறுகின்ற ஏ-09 நெடுஞ்சாலையானது துணுக்காய் கிராமத்திலிருந்து 20 கி.மீற்றர் தொலைவில் உள்ளதால், விவசாயத்தை நம்பி வாழும் துணுக்காய் மக்கள் ஏ-09 நெடுஞ்சாலையை அடைவதாயின் நடந்து அல்லது துவிச்சக்கரவண்டி மூலம் மட்டுமே செல்ல முடியும்.

வன்னிப் பெருநிலப்பரப்பை 110 கிலோ மீற்றர் வரை ஊடறுத்தச் செல்லும் இந்த ஏ-09 நெடுஞ்சாலைக்கான திருத்தப் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற போதிலும், போதியளவு நிதி கிடைக்காமையால் இப்பணியைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னி வீதிகள் மிகவும் சேதமுற்றுள்ளதாலும், கடந்த காலங்களில் இதற்கான திருத்தப் பணிகள் புறக்கணிக்கப்பட்டதாலும் இந்த வீதிகளில் குறிப்பாக மழை காலங்களில் பிரயாணிப்பதென்பது மிகக் கடினமானதாக உள்ளது.

"துவிச்சக்கரவண்டி ஒன்று இல்லாமல் இங்கு எதையும் செய்ய முடியாது" என துணுக்காயில் வாழும் இரு பிள்ளைகளின் தாயாரான 31 வயதுடைய சறோஜினி செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

இவர் தான் வளர்க்கும் இரு பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலை விற்றும், தன்னால் பராமரிக்கப்பட்டு வரும் மரக்கறித் தோட்டத்திலிருந்து கிடைக்கு வருவாயைக் கொண்டும் 100 அமெரிக்க டொலர் பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றை அண்மையில் வாங்கியுள்ளார்.

தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பியுள்ளவர்களில் 89 சதவீதமானவர்கள் ஒழுங்குமுறையான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்களாகக் காணப்படுவதாக அண்மையில் வன்னிக்கான தொழினுட்ப ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

இங்கு வாழும் மக்களில் 63 வீதமானவர்கள், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாகவும், இவர்கள் நாளொன்றிற்கு ஒரு டொலரிற்கும் குறைவான பணத்தைச் செலவழிக்கின்றார்கள் எனவும் யூன் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட ஐ.நா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரந்தர வருவாய், செப்பனிடப்பட்ட வீதிகள், ஒழுங்கு முறையான போக்குவரத்து வசதிகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளும் வரை துவிச்சக்கரவண்டிகள் இந்த மக்களுக்கான முதன்மையான ஒன்றாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"வீதிகள் செப்பனிடப்பட்டு பொருத்தமான போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதால், துவிச்சக்கரவண்டிகள் எங்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படுகின்றன" என விநோதராஜ் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்காவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த 365,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளனர்.

செய்தி வழிமூலம்: IRIN

மொழியாக்கம்: நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20110715104286

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.