Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சை தீவிரம் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சை தீவிரம் :

19 ஜூலை 2011

பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பான சர்ச்சை உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாளுக்கு நாள் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவத்துடன் தொடர்புடைவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஊடக நிறுவனத்தின் பதவிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியூஸ் கோர்பரசேன் சிரேஸ்ட அதிகாரிகளான ருபர்ட், ஜேம்ஸ் மோர்டொச் மற்றும் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ரெபெக்கா புருக்ஸிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பிரித்தானிய ஊடக ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு குறித்த நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு பதிலளிக்கத் தயார் என ஊடக நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி ஒட்டக் கேட்டல் விவகாரம் பிரித்தானிய அரசியலை மட்டுமன்றி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, நியூஸ் ஒப் தி வேர்ல்ட் ஊடகம் n;தாலைபேசி ஒட்டுக் கேட்டல் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்களை சுமத்திய ஊடகவியலாளர் ஷேன் ஹொர், உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.ஷேன் ஹோர் நியூஸ் ஒப் தி வேர்ல்ட் ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.ஊடக நிறுவனம் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முதல் முதலில், ஷேன் ஹோர் அம்பலப்படுத்தியிருந்தார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பில் ஊடக நிறுவனம் ஒப்புக் கொண்டதனை விடவும் அதிகளவான குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஷேன், நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்திற்கு தகவல் வெளியிட்டிருந்தார்.வேட்டர்போர்டின் லாங்கிலி வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் ஷேனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஷேனின் மரணம் தொடர்பான தகவல்களை தற்போதைக்கு வழங்க முடியாது என்ற போதிலும், இதனை கொலையாக கருதப்பட முடியாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நியூஸ் ஒப் தி வேர்ல்ட் ஊடக நிறுவனத்தின் சன் இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவம் தொடர்பில் பலர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஊடக நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், மற்றும் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.நியூஸ் ஒப் தி வேர்ல்ட் ஊடகத்தின் பங்குப் பெறுமதி சடுதியான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.இதேவேளை, தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சை காரணமாக பிரித்தானியாவின் சிரேஸ்ட காவல்தறை அதிகாரிகள் இருவர் பதவி விலகியுள்ளனர்.

லண்டன் மெற்றோபொலிட்டன் காவல்துறை ஆணையாளர் சேர் போல் செடெப்பன்சன் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.நியூஸ் ஒப் தி வேர்ல்ட் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சையின் எதிரொலியாகவே இந்த இராஜினாமா அறிவிப்பும் அமைந்துள்ளது.பிரித்தானியாவின் மிகவும் சிரேஸ்ட காவல்துறை அதிகாரியாக சேர் போல் செடெப்பன்சன் கருதப்படுகின்றார்.லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சனுடன் கலந்துரையாடியதன் பின்னர், பதவி விலகுவது குறித்து செடெப்பன்சன் ஊடகங்களில் அறிவித்தார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.காவல்துறை சேவையில் மிகவும் நேர்மையான முறையில் தாம் கடயைமாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.செடெப்பன்சனினால் காவல்துறைக்கு ஆற்றப்பட்ட சேவை பாராட்டுக்குரியது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் புகழாரம் சூட்டியுள்ளார்.நியூஸ் ஒப் தி வேர்ல்ட் ஊடகத்தின் நிறைவேற்று அதிகாரி நீல் வெலியாஸூடன் தொடர்புகளைப் பேணியதாகவும், தொலைபேசி ஒட்டுக் கேட்டல் குற்றச்சாட்டுக்களை உரிய முறையில் விசாரணை செய்யவில்லை எனவும் செடெப்பன்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் துணை ஆணையாளர் ஜோன் யாட்டீஸ் பதவி விலகியுள்ளார். இதேவெளை, நியூஸ் இன்டர்நெசனல் சர்வதேச ஊடகத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெபேக்கா புருக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் புருக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான புருக்ஸை லண்டன் காவல்துறையினர் கைது செய்து, தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சை காரணமாகவே கடந்த வெள்ளிக்கிழமை புருக்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.2000 – 2003ம் ஆண்டு காலப்பகுதியில் புருக்ஸ் நியூஸ் ஒப் தி வேர்ல்ட் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சை தொடர்பில் நாளை மறுதினம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு புருக்ஸ் பதிலளிக்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய பிரதமர் டேவிட் கமருன், முன்னாள் பிரதமர்களான கோர்டன் பிறவுன் மற்றும் டோனி பிளயர் அகியோருடன் புருக்ஸ் நெருங்கிய தொடர்புளைப் பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது.தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய பத்து பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64330/language/ta-IN/article.aspx

நாய்களைத் தின்னும் நாய்கள்

ரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்னும் டாப்லாய்ட் பத்திரிகை சென்ற வாரம் இழுத்து மூடப்பட்டது. பிரிட்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மூன்றாம்தர வாரப் பத்திரிகை இது.

பிரிட்டனில் ஒரு காலத்தில் தீவிர சபாத் நிலவியிருக்கவேண்டும். அதாவது தேவன் ஓய்வெடுத்திருந்த ஏழாம் நாளான ஞாயிற்றிக்கிழமையன்று மனிதர்களும் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பது. பின்னர் ஏதோ ஒரு பிஷப், பத்திரிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பார். வாரம் முழுதும் சன் என்ற டாப்லாய்ட். ஞாயிறு அன்று நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட். அதேபோல வாரம் முழுதும் தி டைம்ஸ். ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ். வாரம் முழுதும் கார்டியன். ஞாயிறு அன்று அப்சர்வர்.

இணையத்தைக் கரைத்து மேயும் உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்றாலும் சுருக்கமாக இந்தப் பத்தியில் சொல்லிவிடுகிறேன். சன்னும் நியூஸ் ஆஃப் தி வேர்ல்டும் அரை நிர்வாண - முழு நிர்வாண அழகிகள், கிசுகிசு, கள்ளக்காதல், கொலை, கொள்ளை, அரசியல் ஊழல் அது இது என்று செய்திகளைப் போட்டு விற்கும் பத்திரிகைகள். இதில் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆட்கள், கூலிப்படைகளை வைத்து, தனி மனிதர்களது டெலிஃபோன் மெசேஜ்களை ஒட்டுக்கேட்டு அதைக்கொண்டு எக்ஸ்க்ளூசிவ் ஸ்கூப் செய்திகளை எழுதினார்கள் என்பது குற்றச்சாட்டு. தனி மனிதர்கள் என்றால் இதில் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த கார்டன் பிரவுனின் தனிப்பட்ட தகவல்கள், அவரது மகனின் வியாதி, அவர் யாரிடமிருந்து எந்த விலைக்கு வீடு வாங்கினார் முதற்பட எல்லாம் அடக்கம்!

இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியாகும் அதே நேரம், ரூப்பர்ட் மர்டாக், ஸ்கை என்ற தொலைக்காட்சி விநியோக நெட்வொர்க்கையும் அதன் பல்வேறு சானல்களையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் இருந்தார். ஏற்கெனவே அதன் சுமார் 40% பங்குகள் அவர்களிடம்தான் இருந்தன என்றாலும் 100% பங்கையும் பெறும் முயற்சியில் இருந்தார்.

ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டு வெளியாகி, அதில் உண்மை இருக்கிறது என்று தெரியவந்ததும் பல தலைகள் உருண்டுள்ளன. ஸ்கையைக் கையகப்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார் மர்டாக். தலைமை அலுவலர்கள் சிலர் வேலையிலிருந்து விலகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்து யார்டு லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறை ஆணையர் பதவி விலகியுள்ளார். (இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு ஆலோசகர் வேலை அளித்தார் என்பது அவர்மீதான குற்றச்சாட்டு.) மர்டாக் குடும்பத்துக்கும் சம்பந்தப்பட்ட ஒரு நபருக்கும் நெருங்கிய நண்பரக இருக்கிறார் என்பது இப்போதைய பிரிட்டன் பிரதமர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

இந்த விஷயத்தை வெளியே கொண்டுவருவதில் கார்டியன் என்ற போட்டிப் பத்திரிகை பெரும் முயற்சி எடுத்துள்ளதுதான் இதில் ஆச்சரியம். பொதுவாக உலகெங்கும் உள்ள எழுதப்படாத விதி, ஒரு பத்திரிகையை இன்னொரு பத்திரிகை காட்டிக்கொடுக்காது என்பதுதான். ஆனால் அந்த விதி இங்கே மீறப்பட்டுள்ளது என்று கதறுகிறது மர்டாக்கின் மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

நம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது. இப்போது தி ஹிந்து குடும்பத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குடுமிப்பிடிச் சண்டையைப் பற்றி ஏதோ ட்விட்டர் புண்ணியத்திலும் வலைப்பதிவு புண்ணியத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியவருகிறது. இந்திய இதழியல் உலகத்தின் குழப்படிகள் பற்றித் தெரியவேண்டும் என்றால் தி ஹூட், சான்ஸ் செரீஃப் போன்ற இடங்களைப் பாருங்கள். ஆனால் கட்டாயமாக மைய நீரோட்ட இதழ்களில் ஒன்றும் கிடைக்காது.

http://thoughtsintamil.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.